14. வேல்வாங்கு வகுப்பு - திருவகுப்பு
திடவிய நெஞ்சுடை அடியர்இ டும்பைகெ டும்படி தீயாங்குறை போயாழ்ந்தது |
1 |
செயசெய என்றிசை பரவிய எங்கள்கொ டுங்கலி தேசாந்தர மேசாய்ந்தது |
2 |
செயலுரை நஞ்சுறழ் மயலுறு நெஞ்சினர் வஞ்சகர் தீமான்கதர் தாமேங்கினர் |
3 |
சிகரத ரங்கித மகரநெ ருங்குபெ ருங்கடல் தீமூண்டுதன் வாய்மாண்டது |
4 |
தெரியலர் சென்றடை திசைகளில் எண்கரி சிம்பெழ மாறாங்கிரி நூறாந்தொளை |
5 |
சிகரநெ டுங்கிரி குகைகள்தி றந்துதி கந்தமும் லோகாந்தமு நீர்தேங்கின |
6 |
சிறையுள் அழுந்திய குறைகள்ஒ ழிந்துசெ யங்கொடு தேவேந்திரர் சேணாண்டனர் |
7 |
திரிபுவ னங்களும் ஒருபயம் இன்றிவ ளங்கெழு சீர்பூண்டற நேர்பூண்டன; |
8 |
விடவச னஞ்சில பறையும்வி ரிஞ்சன்வி லங்கது கால்பூண்டுதன் மேல்தீர்ந்தனன் |
9 |
விகசித சுந்தர விதரண ஐந்தரு வெந்தெழில் வீவான்பொழில் பூவாய்ந்தது |
10 |
விழைவுத ரும்பத சசிதன்வி ளங்கிய மங்கல நூல்வாங்குகி லாள்வாழ்ந்தனள் |
11 |
வெருவி ஒதுங்கிமை யவரெவ ருஞ்சிறை வென்றித மேலாம்படி யேமீண்டனர் |
12 |
விழியொர்இ ரண்டொரு பதுசத நின்றெரி கண்டகன் மேல்வாங்கிளை கால்சாய்ந்தது |
13 |
வெளிமுழு துந்திசை முழுதும்வி ழுங்கி எழுங்கன சூர்மாண்டற வேர்மாய்ந்தது |
14 |
விபுதர் பயங்கெட நிருதர் தளங்கெட விண்கெடு மேடாம்படி பாடோங்கின |
15 |
மிடைகுறள் வெங்கொடி கழுகு பருந்து விருந்தென ஊனார்ந்தகல் வானார்ந்தன; |
16 |
அடவிப டுஞ்சடை மவுலியில் வெம்பணி யம்பணி யாமாங்கதர் வாமாங்கனை |
17 |
அநுபவை அம்பிகை அநுதிதை அம்பைத்ரி யம்பகி ஆசாம்பரை பாசாங்குசை |
18 |
அநகை அசஞ்சலை அதிகுண சுந்தரி அந்தரி காலாந்தகி மேலாந்திரு |
19 |
அமலை அலங்க்ருதை அபிநய பங்குரை சங்கினி மானாங்கணி ஞானாங்குரை |
20 |
அணிமுக பந்திகள் சிறுபொறி சிந்தவி ளைந்தழல் வாய்கான்றிடு நாகாங்கதை |
21 |
அபயவ ரம்புரி உபயக ரந்திகழ் அந்தணி யாமாங்கறி தாய்மாண்பினள் |
22 |
அதுலைத ருந்திரு மதலையி பங்கொள்ப யங்கொடு பாய்மாண்கலை வாய்மாண்புன |
23 |
அணிகுற மின்புணர் தணிகையில் அந்தணன் இந்திர ராசாங்கம தாராய்ந்தவன்; |
24 |
வடவையி டும்படி மணிமுடி பஞ்செழ விஞ்சிய மாடாம்புடை நாடாண்டகை |
25 |
வசைகரு துங்குரு பதியொடு தம்பிய ரும்பட வேபாண்டவர் தேரூர்ந்தவன் |
26 |
வளவில்வ ளர்ந்திடை மகளிர்கு விந்துத டங்குடை வார்பூந்துகில் வார்பூம்பூயல் |
27 |
வரைநிரை கன்றின முழுதும யங்கிய பண்கெழு வேயேந்திய வாயான்கழல் |
28 |
மருதிடை சென்றுயர் சகடுத டிந்தடர் வெம்புளை வாய்கீண்டொரு பேய்காய்ந்தவன் |
29 |
மதசயி லம்பொர வரவிடு நெஞ்சினில் வஞ்சக மாமான்பகை கோமான்றிரு |
30 |
மருகன் நிரம்பிய மதிமுக மஞ்சரி குஞ்சரி வாகாம்பரை தோய்காங்கேயன் |
31 |
மகபதி தன்பதி பகைகிழி யும்படி அன்றடல் வாளோங்கிய வேல்வாங்கவே. |
32 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
14. வேல்வாங்கு வகுப்பு - திருவகுப்பு, Thiruvaguppu, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - யங்கொடு, டும்படி