13. சேவகன் வகுப்பு - திருவகுப்பு
இருபிறை எயிறு நிலவெழ உடலம் இருள்படு சொருபம் உடைக்கோ விடவே |
இறுகிய கயிறு படவினை முடுகி எமபடர் பிடரி பிடித்தே கொடுபோய் |
அருமறை முறையின் முறை முறை கருதி அதரிடை வெருவ ஒறுத்தால் வகையால் |
அறிவொடு மதுர மொழியது குழறி அலமரு பொழுதில் அழைத்தால் வருவாய் |
ஒருபது சிரமும் இருபது கரமும் விழஒரு பகழி தொடுத்தோன் மருகா |
உரமது பெரிய திரிபுரம் எரிய உயர்கன கிரியை வளைத்தோர் புதல்வா |
மருவளர் அடவி வனிதையர் பரவ மரகத இதணில் இருப்பாள் கணவா |
வளைகடல் கதற நிசிசரர் மடிய மலையொடு பொருத முழுச்சே வகனே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
13. சேவகன் வகுப்பு - திருவகுப்பு, Thiruvaguppu, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - முறை