15. புய வகுப்பு - திருவகுப்பு
வசைதவிர் ககன சரசிவ கரண மகாவ்ருத சீல சால வரமுநி சித்தரை அஞ்சல் அஞ்சல் என்று வாழ்வித் துநின்றன |
1 |
மணிவட மழலை உடைமணி தபனிய நாணழ காக நாடி வகைவகை கட்டும ருங்கு டன்பொ ருந்து ¡£திக் கிசைந்தன |
2 |
வருணித கிரண வருணித வெகுதரு ணாதப சோதி யாடை வடிவுபெ றப்புனை திண்செ ழுங்கு றங்கின் மேல்வைத் தசைந்தன |
3 |
வளைகடல் உலகை வலம்வரு பவுரி வினோதக லாப கோப மயில்வத னத்துவி ளங்கும் அங்கு சங்க டாவிச் சிறந்தன |
4 |
வரைபக நிருதர் முடிபக மகர மகோததி தீயின் வாயின் மறுகவி திர்த்தயில் வென்றி தங்கு துங்க வேலைப் புனைந்தன |
5 |
மதியென உதய ரவியென வளைபடு தோல்வி சால நீல மலிபரி சைப்படை கொண்டு நின்று ழன்று சாதிக்க முந்தின |
6 |
மனகுண சலன மலினமில் தூயஅ தீதசு காநு பூதி மவுனநி ரக்ஷர மந்தி ரம்பொ ருந்தி மார்பிற் றிகழ்ந்தன |
7 |
வகைவகை குழுமி மொகுமொகு மொகென அநேகச மூக ராக மதுபம்வி ழச்சிறு சண்ப கஞ்செ றிந்த தாரிற் பொலிந்தன |
8 |
மிசைமிசை கறுவி வெளிமுக டளவு நிசாசர சேனை தேடி விததிபெ றச்சில கங்க ணங்க றங்க மீதிற் சுழன்றன |
9 |
வெருவுவ வெருவ எரிசொரி விழியுள பூதபி சாசு போத மிகுதொனி பற்றிமு ழங்கு விஞ்சு கண்டை வாசிக் கைகொண்டன |
10 |
விதமிகு பரத சுரவனி தையர்கண மேல்தொறும் லீலை யாக விமலச லத்தினை விண்டி றந்து மொண்டு வீசிப் பொலிந்தன |
11 |
விதரண தருவின் மலரிடை செருகிய கூதள நீப மாலை விபுதர்கு லக்குலி சன்ப யந்த செங்கை யானைக் கிசைந்தன |
12 |
விகசித தமர பரிபுர முளரி தொழா அபி ராம வேடர் விமலைதி னைப்புன மங்கை கொங்கை கண்டு வேளைப் புகுந்தன |
13 |
விதிர்தரு சமர முறிகர கமல நகாயுத கோழி வீற விதரண சித்ரஅ லங்க்ரு தம்பு னைந்து பூரித் திலங்கின |
14 |
விரகுடை எனது மனதுடன் அகில்பனி நீர்புழு கோட ளாவி ம்ருகமத கற்புர குங்கு மங்க லந்து பூசித் துதைந்தன |
15 |
வினைபுரி பவனி தொழுதழு துருகிய கோதையர் தூது போக விடுமது பக்ஷண வண்டி னந்தி ரண்டு சூழப் படிந்தன |
16 |
இசைதனில் இனிய கயிசிகை கவுட வராளித னாசி தேசி பயிரவி குச்சரி பஞ்சு ரந்தெ ரிந்து வீணைக் கிசைந்தன |
17 |
இறுதியில் உதய ரவிகண நிகரென ஆறிரு காது தோயும் இலகும ணிக்கன விம்ப குண்ட லங்கள் மேவிப் புரண்டன |
18 |
எதிர்படு நெடிய தருஅடு பெரிய கடாம்உமிழ் நாக மேகம் இடிபட மற்பொரு திண்சி லம்ப டங்க மோதிப் பிடுங்கின |
19 |
எழுதரும் அழகு நிறமலி திறல்இசை யாகஉ தார தீரம் என உரை பெற்றஅ டங்க லுஞ்சி றந்து சாலத் ததும்பின |
20 |
இருள்பொரு கிரண இரணிய வடகுல பாரிய மேரு சாதி இனமென ஒத்துல கங்கள் எங்க ணும்ப்ர காசித்து நின்றன |
21 |
இயன்முநி பரவ ஒருவிசை அருவரை யூடதி பார கோர இவுளிமு கத்தவள் கொங்கை கொண்ட சண்ட மார்பைப் பிளந்தன |
22 |
இபரத துரக நிசிசரர் கெடஒரு சூரனை மார்பு பீறி அவனுதி ரப்புனல் செங்க ளந்து ளங்கி ஆடிச் சிவந்தன |
23 |
எவையெவை கருதில் அவையவை தருகொடை யால்மணி மேக ராசி சுரபிய வற்றொடு சங்க கஞ்ச பஞ்ச சாலத்தை வென்றன |
24 |
அசைவற நினையும் அவர்பவம் அகலவெ மேல்வரு கால தூதரை யுடையும் அப்படி அங்கும் இங்கும் எங்கும் ஓடத் துரந்தன |
25 |
அகிலமும் எனது செயலல திலையென யானென வீறு கூறி அறவுமி குத்தெழும் ஐம்பு லன்தி யங்கி வீழத் திமிர்ந்தன |
26 |
அனலெழு துவசம் உடுகுலம் உதிரவி யோமமும் ஏழு பாரும் அசலமும் மிக்கபி லங்க ளுங்கு லுங்க ஆலித் ததிர்ந்தன |
27 |
அடல்நெடு நிருதர் தளமது மடிய வலாரிதன் வானை ஆள அரசுகொ டுத்தப யம்பு குந்த அண்ட ரூரைப் புரந்தன |
28 |
அடவியில் விளவு தளவலர் துளவு குராமகிழ் கோடல் பாடல் அளிமுரல் செச்சைய லங்கல் செங்க டம்பு நேசித் தணிந்தன |
29 |
அரியதொர் தமிழ்கொ டுரிமையொ டடிதொழு தேகவி மாலை யாக அடிமைதொ டுத்திடு புன்சொல் ஒன்று நிந்தி யாமற் புனைந்தன |
30 |
அழகிய குமரன் உமைதிரு மதலை பகீரதி மாதர் வாழும் அறுவர் ப்ரியப்படு கந்தன் எந்தை யிந்த்ர நீலச் சிலம்பினன் |
31 |
அநுபவன் அநகன் அனனியன் அமலன் அமோகன்அ நேகன் ஏகன் அபினவன் நித்தியன் அஞ்ச லென்ப்ரசண்ட வாகைப் புயங்களே. |
32 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
15. புய வகுப்பு - திருவகுப்பு, Thiruvaguppu, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கிசைந்தன, மாலை, விதரண, கொங்கை, டங்க, செங்க, றந்து, எனது, புனைந்தன, வருணித, வகைவகை, கிரண, சங்க, அஞ்சல், நிருதர், பொலிந்தன