12. வேடிச்சி காவலன் வகுப்பு - திருவகுப்பு
உதரகம லத்தினிடை முதியபுவ னத்ரயமும் உகமுடிவில் வைக்கும்உமை யாள்பெற்ற பாலகனும் |
உமிழ்திரை பரப்பிவரு வெகுமுக குலப்பழைய உதகமகள் பக்கல்வரு சோதிச் சடானனும் |
உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்கஅவர் ஒருவரொரு வர்க்கவணொர் ஓர்புத்ரன் ஆனவனும் |
உதயரவி வர்க்கநிகர் வனகிரண விர்த்தவிதம் உடையசத பத்ரநவ பீடத்து வாழ்பவனும் |
உறைசரவ ணக்கடவுள் மடுவிலடர் வஜ்ரதர னுடையமத வெற்புலைய வேதித்த வீரியனும் |
உறைபெற வகுத்தருணை நகரின்ஒரு பத்தனிடும் ஒளிவளர் திருப்புகழ்ம தாணிக்ரு பாகரனும்; |
உரககண சித்தகண கருடகண யக்ஷகணம் உபநிடம் உரைத்தபடி பூசிக்கும் வானவனும் |
ஒருவனும் மகிழ்ச்சிதரு குருபரனும் உத்தமனும் உபயமுறும் அக்நிகர மீதிற்ப்ர பாகரனும் |
அதிமதுர சித்ரகவி நிருபனும் அகத்தியனும் அடிதொழு தமிழ்த்ரயவி நோதக் கலாதரனும் |
அவரைபொரி யெட்பயறு துவரைஅவல் சர்க்கரையொ டமுதுசெயும் விக்நபதி யானைச் சகோதரனும் |
அவுணர்படை கெட்டுமுது மகரசல வட்டமுடன் அபயமிட விற்படைகொ டாயத்த மானவனும் |
அருணையில் இடைக்கழியில் உரககிரி யிற்புவியில் அழகிய செருத்தணியில் வாழ்கற்ப காடவியில் |
அறிவும்அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும் அறியென இமைப்பொழுதின் வாழ்வித்தவேதியனும் |
அரிபிரம ருக்குமுதல் அரியபர மற்குயரும் அருமறை முடிப்பையுப தேசித்த தேசிகனும் |
அமலனும் எனக்கரசும் அதிகுணனும் நிர்க்குணனும் அகிலபுவ னத்தமர சேனைக்கு நாயகனும் |
அநுபவனும் அற்புதனும் அநுகுணனும் அக்ஷரனும் அருமனம் ஒழிக்கும்அநு பூதிச் சுகோதயனும் |
இதமகிதம் விட்டுருகி இரவுபக லற்றஇடம் எனதற இருக்கைபுரி யோகப் புராதனனும் |
எனதுமன சிற்பரம சுகமவுன கட்கமதை யமன்முடி துணிக்கவிதி யாவைத்த பூபதியும் |
எழுமையும் எனைத்தனது கழல்பரவு பத்தனேன இனிதுகவி யப்படிப்ர சாதித்த பாவலனும் |
இமையவர் முடித்தொகையும் வனசரர் பொருப்புமென திதயமு மணக்குமிரு பாதச் சரோருகனும் |
எழுதரிய கற்பதரு நிழலில்வளர் தத்தைதழு வியகடக வஜ்ரஅதி பாரப் புயாசலனும் |
எதிரில்புல வர்க்குதவு வெளிமுகடு முட்டவளர் இவுளிமுகி யைப்பொருத ராவுத்த னானவனும் |
எழுபரி ரதத்திரவி எழுநிலமொ டக்கரிகள் இடர்பட முழக்கியெழு சேவற் பதாகையனும் |
இணையிலியும் நிர்ப்பயனும் மலமிலியும் நிஷ்களனும் இளையவனும் விப்ரகுல யாகச் சபாபதியும் |
மதுகையொடு சக்ரகிரி முதுகுநெளி யப்புவியை வளையவரும் விக்ரமக லாபச் சிகாவலனும் |
வலியநிக ளத்தினொடு மறுகுசிறை பட்டொழிய வனஜமுனி யைச்சிறிது கோபித்த காவலனும் |
வருசுரர் மதிக்கஒரு குருகுபெயர் பெற்றகன வடசிகரி பட்டுருவ வேல்தொட்ட சேவகனும் |
வரதனும் அநுக்ரகனும் நிருதர்குல நிஷ்டுரனும் மநுபவன சித்தனும நோதுக்க பேதனனும் |
வயிரிசை முழக்கமிகு மழைதவழ் குறிச்சிதொறும் மகிழ்குரவை யுட்டிரியும் வேடிக்கை வேடுவனும் |
மரகதம ணிப்பணியின் அணிதழை உடுத்துலவும் வனசரர் கொடிச்சிதனை யாசிக்கும் யாசகனும் |
மதனன்விடு புட்பசர படலமுடல் அத்தனையும் மடலெழுதி நிற்குமதி மோகத் தபோதனனும் |
வரிசிலை மலைக்குறவர் பரவிய புனத்திதணின் மயிலென இருக்குமொரு வேடிச்சி காவலனே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
12. வேடிச்சி காவலன் வகுப்பு - திருவகுப்பு, Thiruvaguppu, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வனசரர், பாகரனும்