நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.097.திருச்சத்திமுற்றம்

4.097.திருச்சத்திமுற்றம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சிவக்கொழுந்தீசுவரர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
933 | கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் பூவா ரடிச்சுவ டென்மேற் பொறித்துவை மூவா முழுப்பழி மூடுங்கண் டாய்முழங் தேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ் |
4.097.1 |
ஒலிக்கும் தீயினைக் கையில் ஏந்திய தேவனே! திருச்சத்திமுற்றத்தில் உகந்தருளியிருக்கும் சிவக்கொழுந்தே! தலைமை உடையவனாய் விரைந்து வந்து உயிரைப் போக்கும் திறமையை உடைய கூற்றுவன் என்னைத் துன்புறுத்துவதன் முன்னம், தாமரைப் பூப் போன்ற திருவடிகளின் அடையாளத்தை என்மேல் பொறித்து வைப்பாயாக. அங்ஙனம் பொறிக்காது வாளா விட்டு விட்டால் அழியாத பழி முழுதும் உன்னைச் சூழ்ந்து கொள்ளும் என்பதனை நீ உணர்வாயாக.
934 | காய்ந்தா யனங்க னுடலம் பொடிபடக் பாய்ந்தா யுயிர்செகப் பாதம் பணிவார்தம் ஆய்ந்தாய்ந் தறுப்பா யடியேற் கருளாயுன் சேர்ந்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் |
4.097.2 |
திருச்சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே! மன்மதன் உடம்பு சாம்பலாகுமாறு அவனை வெகுண்டாய். கூற்றுவனை அவன் உயிர்போகும்படி உதைத்தாய். உன் திருவடிகளைப் பணிபவர்களின் பல பிறவிகளையும் அறுத்தருளுவாய். உன்னை வழிபடும் அடியவர்களுடைய உள்ளத்தை இருப்பிடமாகக் கொண்ட நீ அடியேனுக்கு அருள்செய்வாயாக.
935 | பொத்தார் குரம்பை புகுந்தைவர் நாளும் மத்தார் தயிர்போன் மறுகுமென் சிந்தை அத்தா வடியே னடைக்கலங் கண்டா சித்தா திருச்சத்தி முற்றத் துறையுஞ் |
4.097.3 |
தேவர்கள் உள்ளத்தில் இருப்பவனாய் உள்ள திருச்சத்திமுற்றச் சிவக் கொழுந்துப் பெருமானே! பல துளைகள் உள்ள கூடாகிய இவ்வுடம்பில் புகுந்து ஐம்பொறிகளும் நாள்தோறும் அடியேனுக்குப் பற்றுக்கோடான உன் திருவடிப்பற்றினை அழிக்க, மத்தால் குழப்பப்படும் தயிர்போலச் சுழலும் என் சிந்தையின் கலக்கத்தை ஒழியச் செய்வாயாக. தலைவனே! அடியேன் உன் அடைக்கலம் என்பதனை நோக்குக.
936 | நில்லாக் குரம்பை நிலையாக் கருதியிந் றல்லாக் குழிவீழ்ந் தயர்வுறு வேனைவந் வில்லேர் புருவத் துமையாள் கணவா செல்வா திருச்சத்தி முற்றத் துறையுஞ் |
4.097.4 |
வில் போன்ற புருவத்தை உடைய பார்வதி கணவனே! செல்வனே! சிவக்கொழுந்தே! நிலைபேறு இல்லாத உடம்பை நிலைபேறு உடையதாகக் கருதி இந்த நீண்ட உலகத்திலே பல துன்பங்களாகிய குழிகளில் விழுந்து சோர்வுறும் அடியேனை நீயாகவே வந்து அடிமை கொண்டுள்ளாய். அடியேனைக் கை விட்டால் அழிந்துவிடுவேன்.
937 | கருவுற் றிருந்துன் கழலே நினைந்தேன் தெருவிற் புகுந்தேன் றிகைத்தடி யேனைத் உருவிற் றிகழு முமையாள் கணவா திருவிற் பொலிசத்தி முற்றத் துறையுஞ் |
4.097.5 |
வடிவால் விளங்கும் பார்வதி கணவனே! செல்வத்தால் பொலிவுபெறும் சத்தி முற்றப் பெருமானே! கருப்பையை அடைந்த காலத்தும் உன் திருவடிகளையே தியானித்தேன். கருவில் இருந்து வெளிப்பட்டு வளர்ந்து தெருவில் புகுந்தபோது வியப்புற்ற அடியேனை உலகப்பொருள்களை வியப்போடு பற்றும் நிலையைப் போக்குவிப்பாய். அடியேனை உலகப்பற்றில் விடுவாயானால் வீணாகக் கெட்டுவிடுவேன்.
938 | வெம்மை நமன்றமர் மிக்கு விரவி இம்மையுன் றாளென்றன் னெஞ்சத் தெழுதிவை அம்மை யடியேற் கருளுதி யென்பதிங் செம்மை தருசத்தி முற்றத் துறையுஞ் |
4.097.6 |
பேரின்பவீட்டை நல்கும் சத்திமுற்றச் சிவக்கொழுந்தே! கொடிய இயமனுடைய ஏவலர் மிகுதியாகக் கூடி என்னைக் கீழே தள்ளுவதன் முன் இம்மை வாழ்விலேயே உன் திருவடிகளை என் நெஞ்சில் சுவடுபடும்படியாக வைப்பாயாக. இவ்வுலகில் என்னை நீ இகழ்ந்து புறக்கணித்து இருப்பாயானால் மறுமையிலே நீ அடியேனுக்கு அருளப் போகும் செய்தியை யாவர் அறிவார்கள்?
939 | விட்டார் புரங்க ளொருநொடி வேவவொர் சுட்டாயென் பாசத் தொடர்பறுத் தாண்டுகொள் மட்டார் குழலி மலைமகள் பூசை சிட்டா திருச்சத்தி முற்றத் துறையுஞ் |
4.097.7 |
வண்டுகள் நெருங்கும் தேன் பொருந்திய மலர்களை அணிந்த கூந்தலை உடைய பார்வதியின் வழிபாட்டினை விரும்பும் மேம்பட்டவனே! சிவக்கொழுந்தே! பகைவருடைய மதில்கள் ஒருநொடியில் வெந்து போகுமாறு கொடிய அம்பினால் சுட்டு நீறாக்கினாய், அடியேனுடைய உலகப்பற்றாகிய தொடர்பை நீக்கி அடிமை கொள்வாயாக
940 | இகழ்ந்தவன் வேள்வி யழித்திட் டிமையோர் நிகழ்ந்திட வன்றே விசயமுங் கொண்டது புகழ்ந்த வடியேன்றன் புன்மைகள் தீரப் திகழ்ந்த திருச்சத்தி முற்றத் துறையுஞ் |
4.097.8 |
விளங்குகின்ற சத்திமுற்றச் சிவக்கொழுந்தே! நீலகண்டா! உன்னை அலட்சியம் செய்த தக்கனுடைய வேள்வியை அழித்து வேள்விக்கு வந்த தேவர்கள் தம்பிழையைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்ட உலகப் பிரசித்தமாக அந்நாளிலேயே வெற்றி கொண்ட உன் செயலைப் புகழ்ந்த அடியேனுடைய குறைபாடுகள் நீங்க விரும்பி அருளுவாயாக.
941 | தக்கார்வ மெய்திச் சமண்தவிர்ந் துன்றன் எக்காத லெப்பய னுன்றிற மல்லா மிக்கார் திலையுள் விருப்பா மிகவட திக்கா திருச்சத்தி முற்றத் துறையுஞ் |
4.097.9 |
சான்றோர் வாழும் தில்லைநகரில் விருப்புடையவனே! வடமேரு என்று சிறப்பித்துச் சொல்லப்படும் வடதிசைக்கு உரியவனே! சிவக்கொழுந்தே! பொருத்தமான விருப்பத்தைப் பொருந்திச் சமண் சமயத்தை விடுத்து உன் அடைக்கலமாக வந்து சேர்ந்தேன். உன்னைப் பற்றி செய்திகளைத் தவிர வேற்றுச் செய்திகளில் எந்த விருப்பமும் இல்லை. அவற்றால் எனக்கு எந்தப் பயனும் இல்லை.
942 | பொறித்தே ரரக்கன் பொருப்பெடுப்புற்றவன் இறத்தா ளொருவிர லூன்றிட் டலற குறித்தே கொடுத்தாய் கொடியேன்செய் குற்றக் செறுத்தாய் திருச்சத்தி முற்றத் துறையுஞ் |
4.097.10 |
சிவக்கொழுந்தே! இயந்திரத் தேரை உடைய இராவணன் கயிலையைப் பெயர்க்க முற்பட்டானாக அவனுடைய பொன்னாலாகிய முடிகளை அணிந்த தலைகளும் தோள்களும் நொறுங்குமாறு ஒரு விரலை அழுத்த அவன் அலற அவனிடம் இரக்கம் காட்டிப் பிரகாசமான வாளினை அவன் நலன் குறித்துக் கொடுத்தாய். தீவினையை உடைய அடியேன் செய்த குற்றமாகிய கொடிய வினையின் பயனாகிய நோயினை அழித்தாய்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.097.திருச்சத்திமுற்றம் , முற்றத், துறையுஞ்சிவக்கொழுந்தே, சிவக்கொழுந்தே, திருச்சத்தி, உடைய, அவன், அடியேனை, திருமுறை, வந்து, கொடிய, திருச்சத்திமுற்றம், நிலைபேறு, கணவனே, பார்வதி, அடியேன், செய்த, இல்லை, அணிந்த, பெருமானே, அடியேனுடைய, சத்திமுற்றச், அடிமை, கொடுத்தாய், கொண்ட, திருச்சிற்றம்பலம், வைப்பாயாக, பதிகங்கள், தேவாரப், நான்காம், விட்டால், என்பதனை, குரம்பை, தேவர்கள், அடியேனுக்கு, உன்னை, யடியேற், உள்ள