நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.089.திருநெய்த்தானம்

4.089.திருநெய்த்தானம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நெய்யாடியப்பர்.
தேவியார் - வாலாம்பிகையம்மை.
853 | பாரிடஞ் சாடிய பல்லுயிர் வானம காரடைந் தகடல் வாயுமிழ் நஞ்சமு ஊரடைந் திவ்வுல கிற்பலி கொள்வது நீரடைந் தகரை நின்றநெய்த் தானத் |
4.089.1 |
காவிரியாற்றங்கரையில் அமைந்த நெய்த்தானத்தை உகந்தருளியிருக்கும் பெருமானே! பூமியில் ஆலகால விடத்தால் தாக்கப்பட்ட பல உயிர்களுக்கும் தேவருலகிலுள்ள தேவர்களுக்கும் அருள் செய்து, கரிய கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்டருளிய நீ, பல ஊர்களையும் அடைந்து இவ்வுலகில் பிச்சை உணவை ஏற்பதை நாங்கள் அறியோம்.
854 | தேய்ந்திலங் குஞ்சிறு வெண்மதி யாய்நின் பாய்ந்த கங்கைப் புனல்பன் முகமாகிப் ஆய்ந்திலங் கும்மழு வேலுடை யாயடி ஏந்திள மங்கையு நீயும்நெய்த் தானத் |
4.089.2 |
தேய்ந்து விளங்கும் பிறைச்சந்திரனை உடையவனே! அழகிய உன் சடையின் மீது இறங்கிப்பாய்ந்த கங்கைநீர் பலமுகங்கொண்டுப் பரவி ஒலிக்கவும், ஆராய்ந்து விளங்கும் மழுப் படையை உடையவனே! அழகு விளங்கும் இளமங்கையான பார்வதியும் நீயும் நெய்த்தானப் பதியில் விரும்பி உறையும் காரணத்தை அடியேனுக்கு உரைப்பாயாக.
855 | கொன்றடைந் தாடிக் குமைத்திடுங் கூற்றமொன் சென்றடைந் தாடிப் பொருததுந் தேசமெல் குன்றடைந் தாடுங் குளிர்பொழிற் காவிரி சென்றடைந் தார்வினை தீர்க்கும்நெய்த் தானத் |
4.089.3 |
குடகுமலையிலே தோன்றி எல்லோரும் அடைந்து நீராடுமாறு பெருகியோடும். குளிர்ந்த சோலைகளை இரு மருங்கிலும் கொண்ட, காவிரியின் கரைமேல் உன்னை வந்து அடைந்தவர்களுடைய தீ வினைகளைப் போக்கும் நெய்த்தானப் பெருமானே! நீ சென்று சேர்ந்து போரிட்டுக் கொன்று அழிக்கும் கூற்றுவனாய்ப் பகைவர் மதில்களை அடைந்து செயற்பட்டுப் போரிட்டு அவற்றை அழித்த செயலை உலகமெல்லாம் நன்றாக அறிந்துள்ளது.
856 | கொட்டு முழவர வத்தொடு கோலம் நட்டம் பலபயின் றாடுவர் நாக சிட்டர் திரிபுரந் தீயெழச் செற்ற இட்ட முமையொடு நின்றநெய்த் தானத் |
4.089.4 |
ஒலிக்கின்ற முழவின் ஓசையோடு பல வேடங்களைப் புனைந்து பல கூத்துக்களை அடிக்கடி ஆடுபவரும், பாம்பினை இடையில் இறுகக்கட்டியவரும், சிட்டர்க்காக மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு அழித்த வில்லை உடையவரும், ஆகிய சிவபெருமான் நெய்த்தானத்தில் தமக்கு விருப்பமான பார்வதியோடு விரும்பி இருப்பவராவார்.
857 | கொய்ம்மலர்க் கொன்றை துழாய்வன்னி மத்தமுங் மெய்ம்மலர் வேய்ந்த விரிசடைக் கற்றைவிண் மைம்மலர் நீல நிறங்கருங் கண்ணியோர் நின்மல னாட னிலயநெய்த் தானத் |
4.089.5 |
கொய்யப்பட்ட கொன்றை மலர், திருத்துழாய், வன்னி, ஊமத்தம்பூ, வில்வம் ஏனைய சிறந்த மலர்கள் இவற்றை அணிந்த விரிந்த சடைத் தொகுதியையுடைய தேவர் தலைவனாய், கருமை பரவிய நீல நிறத்தை உடையவளாய்க் கருங்கண்களை உடைய பார்வதி பாகனாய் உள்ள களங்கம் அற்ற தூயோனாகிய சிவபெருமான், தன் ஆடல்களுக்கு அரங்கமாக அமைந்த நெய்த்தானத்தில் இருப்பவனாவான்.
858 | பூந்தார் நறுங்கொன்றை மாலையை வாங்கிச் கூர்ந்தார் விடையினை யேறிப்பல் பூதப் போந்தார் புறவிசை பாடவு மாடவுங் சேர்ந்தா ருமையவ ளோடுநெய்த் தானத் |
4.089.6 |
நெய்த்தானத்தில் இருக்கும் சிவபெருமான் பூக்களை வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலையை வளைத்துச் சடைக்கண் அணிந்து, விரைவு மிக்குப் பொருந்திய காளையினை ஏறி ஊர்ந்து பூதப்படைகள் பலவற்றின் நடுவே செல்பவராய்ப் புறத்தே அடியார்கள் பாடும் பாடல்களைக் கேட்டு ஆடல்களைக் கண்டு பார்வதியோடும் இணைந்து உறைகின்றார்.
859 | பற்றின பாம்பன் படுத்த புலியுரித் தோலுடையன் முற்றின மூன்று மதில்களை மூட்டி யெரித்தறுத்தான் சுற்றிய பூதப் படையினன் சூல மழுவொருமான் செற்றுநந் தீவினை தீர்க்குநெய்த் தானத் திருந்தவனே. |
4.089.7 |
பாம்பினைப் பற்றியவனாய், புலித்தோலை உடையாக உடுத்தவனாய், எல்லா வலிமைகளும் நிறைந்த மூன்று மதில்களையும் தீ மூட்டி அழித்தவனாய்ப் பூதப்படையால் சூழப்பட்டவனாய்ச் சூலம், முழு, மான் எனும் இவற்றை ஏந்தியவனாய் நம் தீவினைகளை அழித்து ஒழிப்பவனாய்ச் சிவபெருமான் நெய்த்தான நகரில் உறைகின்றான்.
860 | விரித்த சடையினன் விண்ணவர் கோன்விட உரித்த கரியுரி மூடியொன் னார்மதின் எரித்த சிலையின னீடழி யாதென்னை தரித்த வுமையவ ளோடுநெய்த் தானத் |
4.089.8 |
விரித்த சடையினனாய், தேவர்கள் தலைவனாய், விடத்தை உண்டு அடக்கிய கழுத்தினனாய், தான் உரித்த யானைத் தோலைப் போர்த்தவனாய், பகைவரின் மதில்கள் மூன்றனையும் எரித்த வில்லினனாய், தன் பெருமைக்குக் குறைவு வாராத வகையில் அடியேனை அடிமையாகக் கொண்டவனாய் உள்ளவன், தன் உடம்பில் பாதியாகக் கொண்ட பார்வதியோடு நெய்த்தானத்தில் உறைகின்ற பெருமானாவான்.
861 | தூங்கான் றுளங்கான் துழாய்கொன்றை துன்னிய வாங்கா மதியமும் வாளர வுங்கங்கை தேங்கார் திரிபுரந் தீயெழ வெய்து நீங்கா னுமையவ ளோடுநெய்த் தானத் |
4.089.9 |
தாமதம் செய்யாமல் விரைவு உடையவனாய், திருத்துழாயும் கொன்றையும் பொருந்திய சிவந்த சடையின்மீது கைக்கொண்ட பாம்பு பிறை எனும் இவற்றைக் கங்கையோடு அணிந்தவனாய், பகைவருடைய முப்புரங்களையும் தீக்கு இரையாகுமாறு அம்பு செலுத்தி அசுரர்களால் மற்றவருக்கு ஏற்பட்ட சோர்வினைப் போக்கி என்றும் நீங்காதிருக்கும் பெருமான் பார்வதியோடு நெய்த்தானத்திருந்தவனே யாவன்.
862 | ஊட்டிநின் றான்பொரு வானில மும்மதி மாட்டிநின் றானன்றி னார்வெந்து வீழவும் காட்டிநின் றான்கத மாக்கங்கை பாயவொர் நீட்டிநின் றான்றிரு நின்றநெய்த் தானத் |
4.089.10 |
செல்வம் நிலைபெற்ற நெய்த்தானப் பெருமான் வானில் நிலவிப் போரிட்ட மும்மதில்களையும் தீயாகிய அம்பினால் எரித்துப் பகைவர்கள் வெந்து போகும்படி தீயினால் அழித்து அக்காட்சியைத் தேவர்கள் காணச் செய்து விரைந்து வானினின்றும் இறங்கிய சினத்தை உடைய பெரிய கங்கை பாய்வதற்கு நீண்ட சடைக் கற்றைகளுள் ஒன்றனைக் காட்டி நின்ற பெருமான் திருநெய்த்தானத் திருந்தவனே யாவான்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.089.திருநெய்த்தானம் , தானத்திருந்தவனே, சிவபெருமான், நெய்த்தானத்தில், விளங்கும், நெய்த்தானப், திருமுறை, கொன்றை, பார்வதியோடு, ளோடுநெய்த், அடைந்து, திருநெய்த்தானம், பெருமான், நின்றநெய்த், இவற்றை, விரித்த, தேவர்கள், தலைவனாய், மாலையை, எனும், மூன்று, விரைவு, அழித்து, பொருந்திய, உடைய, திரிபுரந், அமைந்த, பெருமானே, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், நான்காம், தேவாரப், செய்து, உடையவனே, அழித்த, தீக்கு, மதில்களை, கொண்ட, விரும்பி, இரையாகுமாறு