நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.090.திருவேதிகுடி

4.090.திருவேதிகுடி
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வேதபுரீசுவரர்.
தேவியார் - மங்கையர்க்கரசியம்மை.
863 | கையது காலெரி நாகங் கனல்விடு வெய்யது வேலைநஞ் சுண்ட விரிசடை செய்யினி னீல மணங்கம ழுந்திரு ஐயனை யாரா வமுதினை நாமடைந் |
4.090.1 |
கைகளில் விடத்தைக் கக்கும் பாம்பினையும் தீயைப் போல வெம்மையைச் செய்யும் சூலப்படையையும் ஏந்தியவனும், கடலில் தோன்றிய கொடிய விடத்தை உண்டவனும், விரிந்த சடையினை உடைய தலைவனுமாய், வயல்களிலே நீலப்பூக்கள் மணம் கமழும் திருவேதிகுடியில் உகந்தருளியிருக்கும் ஐயனுமான, நுகர்ந்தும் நிறைவு தாராத ஆரா அமுதை அடைந்து அதில் முழுகுவவோம் நாம்.
864 | கைத்தலை மான்மறி யேந்திய கையன் பொய்த்தலை யேந்திநற் பூதி யணிந்து செய்த்தலை வாளைகள் பாய்ந்துக ளுந்திரு அத்தனை யாரா வமுதினை நாமடைந் |
4.090.2 |
கைகளில் மான்குட்டியையும் கொடிய மழுப்படையையும் ஏந்தி, மண்டையோட்டைத் தாங்கித் திருநீற்றை அணிந்து பொய்த் தலை கொண்டு பிச்சைக்காகத் திரிபவனும், வயல்களிலே வாளை மீன்கள் தாவித் துள்ளும் திருவேதிகுடிப் பெருமானும் ஆகிய ஆரா அமுதை அடைந்து அதில் திளைத்தாடுவோம் நாம்.
865 | முன்பின் முதல்வன் முனிவனெம் மேலை அன்பி னிலையி லவுணர் புரம்பொடி செம்பொனை நன்மலர் மேலவன் சேர்திரு அன்பனை நம்மை யுடையனை நாமடைந் |
4.090.3 |
முன்னும் பின்னும் தானே உலக காரணனாய், மனனசீலனாய், நம் பழைய வினைகளைப் போக்குபவனாய், அன்பு நிலையில் இல்லாத அசுரர்களின் மும்மதில்களையும் அழித்த செம்பொன் போல்பவனாய், தாமரை மலர்மேல் உள்ள பிரமன் வழிபடுவதற்காக வந்து அடையும் திருவேதிகுடியில் விரும்பி உறைபவனாய், நம்மை அடிமைகொள்ளும் பெருமானை நாம் அடைந்து அவன் அருளாரமுதக் கடலில் ஆடுவோம்.
866 | பத்தர்க ணாளு மறவார் பிறவியை முத்தர்கண் முன்னம் பணிசெய்து பாரிட கொத்தன கொன்றை மணங்கம ழுந்திரு அத்தனை யாரா வமுதினை நாமடைந் |
4.090.4 |
பக்தர்களாய்த் தன்னை நாளும் மறவாத அடியார்களுக்குப் பொருந்திய பிறவிப் பிணியை அறுப்பவனாய், பாசநீக்கம் உற்றவர்கள் இம்மண்ணுலகில் சிவப்பணி செய்து உயரச் செய்தவனாய், கொத்தாகப் பூத்த கொன்றையின் மணம் பரவும் திருவேதி குடித் தலைவனாய் உள்ள ஆரா அமுதக் கடலை நாம் அடைந்து ஆடுவோம்.
867 | ஆனணைந் தேறுங் குறிகுண மாரறி மானணைந் தாடு மதியும் புனலுஞ் தேனணைந் தாடிய வண்டு பயிறிரு ஆனணைந் தாடு மழுவனை நாமடைந் |
4.090.5 |
தேனிலே பொருந்தி உண்டு பறக்கும் வண்டுகள் மிகுதியாகக் காணப்படும் திருவேதிகுடியில் பஞ்சகவ்வியத்தில் அபிடேகம் கொள்ளும், மழு ஏந்திய பெருமான், பிறையும் கங்கையும் சடைமுடியில் சூடி, கையில் மானை வைத்துக் கொண்டு கூத்து நிகழ்த்துபவன் விரும்பி காளையை ஏறி ஊரும் அப்பெருமானுடைய பெயர்களையோ, அடையாளங்களையோ, பண்புகளையோ ஒருவரும் முழுமையாக அறிதல் இயலாது. அவனை அடைந்து அருளாரமுதக் கடலில் ஆடுவோம் நாம்.
868 | எண்ணு மெழுத்துங் குறியு மறிபவர் பண்ணி னிசைமொழி பாடிய வானவர் திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான்றிரு நண்ண வரிய வமுதினை நாமடைந் |
4.090.6 |
எண்ணையும் எழுத்தையும் பெயர்களையும் அறிபவராகிய தாம் மொழிய அவற்றைக் கேட்டுப் பண்ணோடு இயைந்த பாடல்களைப் பாடுத் தேவர்கள் பணிந்து தௌந்து கொள்ளுமாறு, அழுத்தமான வினைகளைப் போக்கும் பெருமானாய்த் திருவேதிகுடியில் உறையும் கிட்டுதற்கு அரிய அமுதமாக உள்ள சிவபெருமானை நாம் அடைந்து அருட் கடலில் ஆடுவோம்.
869 | ஊர்ந்தவிடை யுகந் தேறிய செல்வனை ஆர்ந்த மடமொழி மங்கையொர் பாக சேர்ந்து புனற்சடைச் செல்வப்பிரான்றிரு சார்ந்த வயலணி தண்ணமு தையடைந் |
4.090.7 |
உகந்து காளையை ஏறி ஊருஞ் செல்வனாகிய பெருமானை நாம் முழுமையாக அறியோம். செவிக்கு இனியவான மடப்பம் பொருந்திய மொழிகளை உடைய பார்வதியை மகிழ்ந்து பாகமாக உடையவனாய், சடையிற் கங்கையைச் சூடிய செல்வப் பிரானாய் வயல்கள் சூழ்ந்து திருவேதிகுடியைச் சார்ந்திருக்கும் பெருமானாகிய குளிர்ந்த அமுதை அடைந்து அதில் திளைத்து ஆடுவோம் நாம்.
870 | எரியு மழுவின னெண்ணியு மற்றொரு திரியும் பலியினன் றேயமும் நாடுமெல் விரியும் பொழிலணி சேறுதிகழ்திரு அரிய வமுதினை யன்பர்க ளோடடைந் |
4.090.8 |
கொடிய மழுவை ஏந்தியவனாய், பிரமனுடைய மண்டையோட்டில் பிச்சை பெற விரும்பித் திரிபவனாய், தேயங்களும் நாடுகளும் எல்லாம் உடையவனாய், விரிந்த சோலைகளும் சேறு விளங்கும் வயல்களும் அழகு செய்யும் திருவேதிகுடியில் உறையும் பெருமானாகிய அரிய அமுதை அன்பர்களோடு அடைந்து அதில் திளைத்து ஆடுவோம்.
871 | மையணி கண்டன் மறைவிரி நாவன் மெய்யணி நீற்றன் விழுமிய வெண்மழு செய்ய கமல மணங்கம ழுந்திரு ஐயனை யாராவமுதினை நாமடைந் |
4.090.9 |
நீலகண்டனாய், வேதம் ஓதும் நாவினனாய், பெருமையாகக் கருதி விரும்பிய திருநீற்றை மெய் முழுதும் அணிந்தவனாய், மேம்பட்ட வெள்ளிய மழுப்படையினனாய், சிறந்த தாமரைகள் மணம் வீசும் திருவேதிகுடித் தலைவனாய் உள்ள சிவபெருமானாகிய ஆரா அமுதை அடைந்து அதில் திளைத்தாடுவோம்.
872 | வருத்தனை வாளரக் கன்முடி தோளொடு பொருத்தனைப் பொய்யா வருளனைப் பூதப் திருத்தனைத் தேவர்பி ரான்றிரு வேதி அருத்தனை யாரா வமுதினை நாமடைந் |
4.090.10 |
வாளை ஏந்திய அரக்கனுடைய தோள்களோடு தலைகள் பத்தினையும் நெரித்துத் துன்புறுத்தியவனாய், பிறகு அவற்றைப் பொருத்தியவனாய், தவறாத அருளுடையவனாய், பூதப் படையை உடைய புனிதனாய், தேவர்கள் தலைவனாய், திருவேதி குடியில் உறையும் மெய்ப்பொருளான ஆரா அமுதினை அடைந்து அதில் திளைத்து ஆடுவோம் நாம்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.090.திருவேதிகுடி , அடைந்து, நாம், நாமடைந்தாடுதுமே, ஆடுவோம், வமுதினை, அதில், திருவேதிகுடியில், அமுதை, உள்ள, யாரா, கடலில், தலைவனாய், மணம், திருமுறை, உடைய, திருவேதிகுடி, திளைத்து, உறையும், மணங்கம, கொடிய, திருவேதி, பொருந்திய, முழுமையாக, அருளாரமுதக், பெருமானை, பெருமானாகிய, தாடு, அரிய, காளையை, உடையவனாய், தேவர்கள், ஏந்திய, திருநீற்றை, செய்யும், விரிந்த, கைகளில், ழுந்திருவேதிகுடிஐயனை, பதிகங்கள், திருச்சிற்றம்பலம், வயல்களிலே, நான்காம், நம்மை, வினைகளைப், திளைத்தாடுவோம், வாளை, தேவாரப், கொண்டு, விரும்பி