நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.087.திருப்பழனம்

4.087.திருப்பழனம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆபத்சகாயர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
833 | மேவித்து நின்று விளைந்தன வெந்துயர் ஆவித்து நின்று கழிந்தன வல்ல பாவித்த பாவனை நீயறி வாய்பழ கூவித்துக் கொள்ளுந்தனையடி யேனைக் |
4.087.1 |
திருப்பழனத்தில் உகந்தருளியிருக்கும் அரசே! அடியேன் வாழ்க்கையில் தீவினையில் விளைவுகளாகிய துக்கங்கள் எல்லாம் கொடிய துயரத்தை அடையச் செய்து என்னை மேவி நிற்கின்றன. அவை தம் செயலில் சோர்ந்து கொட்டாவிவிட்டு அடியேனை விடுத்து நீங்கின அல்ல. அடியேன் அவற்றைப் போக்கச் சிவோகம் பாவனையில் இருக்கும் செய்தியைநீ அறிவாய். அடியேனை உன் அடிமைத் தொழிலில்கூவுவித்துக் கொள்ளுவதை உன் குறிக்கோளாகக் கொள்வாயாக.
834 | சுற்றிநின் றார்புறங் காவ லமரர் மற்றுநின் றார்திரு மாலொடு நான்முகன் பற்றிநின் றார்பழ னத்தர சேயுன் உற்றுநின் றாரடி யேனைக் குறிக்கொண் |
4.087.2 |
பழனத்து அரசே! எண் திசைகளையும் காக்கும் தேவர்கள் உன்னைச்சுற்றி நிற்கின்றனர். நின் திருக்கோயில் வாயிலில் மற்றுமுள்ள தேவர்கள் நிற்கின்றனர். திருமாலும் பிரமனும் வந்து உன் திருவடிக் கீழ்ப்பொருந்தி நின்று நீ இடும் கட்டளை யாது என்பதனை அறிய ஈடுபாட்டோடு நிற்கின்றனர். இங்ஙனம் தேவர்கள் வழிபடக் காத்துக் கிடக்க வைக்கும் இயல்பினனாகிய நீ, அடியேனை உன் உள்ளத்தில் குறித்துக்கொண்டு அருள் செய்வாயாக.
835 | ஆடிநின் றாயண்ட மேழுங் கடந்துபோய் கூடிநின் றாய்குவி மென்முலை யாளையுங் பாடிநின் றாய்பழ னத்தர சேயங்கொர் சூடிநின் றாயடி யேனையஞ் சாமைக் |
4.087.3 |
பழனத்து அரசே! நீ மேல் உலகங்கள் ஏழனையும் கடந்து அதற்கு மேலும் உயர்ந்து கூத்து நிகழ்த்தி நின்றாய். எல்லா உயிரோடும் பொருந்தியிருக்கின்றாய். குவிந்த மெல்லிய முலைகளை உடைய பார்வதியையும் உடன் கொண்டு பால் போன்ற வெண்பிறை சூடிப் பாடிக் கொண்டு நிற்கும் நீ அடியேனையும் பிறவித் துயர்கருதி அஞ்சாதபடி ஆட்கொள்ளவேண்டுவதனை உன் திருவுள்ளத்துக் கொள்வாயாக.
836 | எரித்துவிட் டாயம்பி னாற்புர மூன்றுமுன் உரித்துவிட் டாயுமை யாண்டுக் கெய்தவொர் பரித்துவிட் டாய்பழனத் தர சேகங்கை தரித்துவிட் டாயடி யேனைக் குறிக்கொண் |
4.087.4 |
பழனத்து அரசே! அம்பினால் மும்மதில்கள் முன்னொரு காலத்தில் அழியுமாறு எரியச் செய்து விட்டாய். பார்வதி நடுங்குமாறு ஓர் யானையைக் கொன்று அதன் தோலை உரித்துப் போர்வையாக அணிந்து விட்டாய். நீண்ட சடையின் மீது கங்கையைப் பொறத்துத் தாங்கியுள்ளாய். அடியேனை உள்ளத்துக்கொண்டு அருள் செய்வாயாக.
837 | முன்னியு முன்னி முளைத்தன மூவெயி மன்னியு மங்கு மிருந்தனை மாய பன்னிய நூலின் பரிசறி வாய்பழ டருளுவதே. |
4.087.5 |
பழனத்து அரசே! மும்மதிலிலுள்ள அரக்கர்களும்எதிர்ப்பட்டு உள்ளத்துக் கருதி உன்னொடு போராடநீ அங்கும் நிலை பெற்று இருந்து அவர்களை அழித்தாய்.வஞ்சமனத்தவராகிய புறச் சமயப் புறப்புறச்சமயத்தவர்கள் இயற்றிவைத்துள்ள நூல்களின் பொருளியல்பையும்நீ அறிவாய். நீ பல செய்திகளை நினைத்துக்கொண்டிருக்கும் நேரத்திலும் அடியேனை உன் உள்ளத்தில்குறித்துக் கொண்டு அருளுவாயாக.
838 | ஏய்ந்தறுத் தாயின்பனாயிருந் தேபடைத் காய்ந்தறுத் தாய்கண்ணினாலன்று காமனைக் பாய்ந்தறுத் தாய்பழ னத்தரசேயென் ஆய்ந்தறுத் தாயடி யேனைக்குறிக்கொண் |
4.087.6 |
பழனத்து அரசே! நீ எல்லோருக்கும்இன்பத்தை நல்குபவனாய் இருந்தும் பிரமன் தலையைமனம் பொருந்தி நீக்கினாய். மன்மதனைப் பார்வதியின்திருமணத்தின் முன்பு வெகுண்டு அழித்தாய். கூற்றுவனையும்காலால் உதைத்து அழித்தாய். அடியேனுடைய பழைய வினைகளின்பயனாகிய துன்பத்தை நுணுகுமாறு அழித்து அடியேனைக்குறிக்கொண்டு அருளுவாயாக.
839 | மற்றுவைத் தாயங்கொர் மாலொரு பாக உற்றுவைத் தாயுமை யாளொடுங் கூடும் பற்றிவைத் தாய்பழ னத்தர சேயங்கொர் சுற்றிவைத் தாயடி யேனைக் குறிக்கொண் |
4.087.7 |
பழனத்து அரசே! ஒப்பற்ற திருமாலை மகிழ்வோடு உன் திருமேனியின் ஒரு பாகமாக வைத்து, பார்வதிக்குத் திருமேனியின் ஒரு பாகத்தைக் கொடுத்து அவளோடு கூடியிருப்பது போலவே திருமாலொடும் பொருந்தியுள்ளாய். ஒரு பாம்பைப் பிடித்து அஃது ஒருகையைச் சுற்றிக் கொண்டிருக்குமாறு செய்துள்ளாய். அடியேனையும் குறிக்கொண்டு அருளுவாயாக.
840 | ஊரினின் றாயொன்றி நின்றுவிண் டாரையு போரினின் றாய்பொறை யாயுயி ராவி பாரினின் றாய்பழ னத்தர சேபணி காரநின் றாயடி யேனைக் குறிக்கொண் |
4.087.8 |
கயிலைமலையில் உள்ளம் பொருந்தி உறைகின்றாய். அத்தகைய பழனத்து அரசே! கொடிய தீயினாலே பகைவர் களை அழிப்பதற்குப் போரில் ஈடுபட்டாய். உயிர்களைப் பாரமாகச் சுமந்து கொண்டு உயிர்களுக்கு உயிராக இருக்கின்றாய். உனக்குத் தொண்டு செய்யும் அடியவர்கள் மனநிறைவு அடையுமாறு திருக்கோயில்களில் நிலையாக இருக்கும் நீ அடியேனையும் குறிக்கொண்டு அருளுவாயாக.
841 | போகம்வைத் தாய்புரி புன்சடை மேலொர் யாகம்வைத் தாய்மலை யான்மட மங்கை பாகம்வைத் தாய்பழ னத்தர சேயுன் ஆகம்வைத் தாயடி யேனைக் குறிக்கொண் |
4.087.9 |
பழனத்து அரசே! முறுக்கேறிய சிவந்த சடையின் மீது கங்கையை உனக்குப் போகசக்தியாக வைத்துள்ளாய். உன் மார்பில் வைத்திருந்த பார்வதியை மகிழ்ந்து உன் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு விட்டாய். அருளினாலே, உனக்குத் தொண்டு செய்வதற்கே அடியேனுடைய உடம்பை அமைத்துள்ள நீ அடியேனைக் குறிக்கொண்டு (இனிப் பிறவித் துயர் அடியேற்கு நேராதவாறு) அருளுவாயாக.
842 | அடுத்திருந் தாயரக் கன்முடி வாயொடு கெடுத்திருந் தாய்கிளர்ந் தார்வலி யைக்கிளை படுத்திருந் தாய்பழ னத்தர சேபுலி உடுத்திருந் தாயடி யேனைக் குறிக்கொண் |
4.087.10 |
பழனத்து அரசே! இராவணன் கயிலையைப் பெயர்க்கத் தொடங்கும் வரையில் அருகிலேயே இருந்து அவன் செயற்பட்ட அளவில் அவனுடைய முடிகள் வாய் கண் தோள்கள் என்பன நெரிந்து சிதறுமாறு கால்விரலால் அழுத்தி அவன் செருக்கைக் கெடுத்தாய். செருக்குற்று எழுந்தவருடைய வலிமையை அவர்களைச் சேர்ந்தவர்களுடைய வலிமையோடும் கெடுத்தாய். புலித்தோலை ஆடையாக உடுத்துள்ளாய். அத்தகைய நீ அடியேனையும் குறித்து மனத்துக் கொண்டு அருளுவாயாக.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.087.திருப்பழனம் , அரசே, பழனத்து, யேனைக், குறிக்கொண்டருளுவதே, அருளுவாயாக, னத்தர, கொண்டு, அடியேனை, தாய்பழ, அடியேனையும், தாயடி, திருப்பழனம், நிற்கின்றனர், திருமுறை, அழித்தாய், விட்டாய், நின்று, தேவர்கள், குறிக்கொண்டு, கெடுத்தாய், அவன், இருந்து, அடியேனுடைய, பொருந்தி, தொண்டு, திருமேனியின், அத்தகைய, மீது, உனக்குத், செய்வாயாக, அடியேன், கொடிய, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், நான்காம், தேவாரப், செய்து, இருக்கும், றாயடி, பிறவித், றாய்பழ, அருள், அறிவாய், கொள்வாயாக, சடையின்