நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.086.திருவொற்றியூர்

4.086.திருவொற்றியூர்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கத்தியாகர்.
தேவியார் - வடிவுடையம்மை.
822 | செற்றுக் களிற்றுரி கொள்கின்ற ஞான்றுசெருவெண் றிற்றுக் கிடந்தது போலு மிளம்பிறை சுற்றிக் கிடந்தது கிம்புரி போலச் நெற்றிக்கண் மற்றதன் முத்தொக்கு மாலொற்றி |
4.086.1 |
யானயைக் கொன்று அதன் தோலைப் போர்வைக்காகக் கொண்ட காலத்தில் போரிடுகின்ற அதனுடைய வெண்மையான தந்தம் ஒன்று ஒடிந்து கிடந்ததுபோல அமைகின்றது. அதனைச் சுற்றிப் பாம்பு கிடத்தல் தந்தத்துக்கிடுங் கிம்புரிப் பூண் போலாகிறது. திருநுதலில் உள்ள நெற்றிக்கண்அத்தந்தத்திலிருந்து தெறித்த முத்தினை யொப்பதாகின்றது திருவொற்றியூர்ப் பெருமானிடத்து.
823 | சொல்லக் கருதிய தொன்றுண்டு கேட்கிற்றொண் அல்லற் படக்கண்டு பின்னென் கொடுத்தி மல்லற் றிரைச்சங்க நித்திலங் கொண்டுவம் ஒல்லைத் திரைகொணர்ந் தெற்றொற்றி யூருறை |
4.086.2 |
கடலின் வளமான அலைகள் சங்குகளிலுள்ள முத்துக்களைக் கொண்டு மணம் வீசும் கரைகளிலே ஒதுக்கிச் சேர்க்கும் ஒற்றியூரில் உகந்தருளியிருக்கும் உத்தமனே! நீ கேட்பதற்குத் திருச்செவிசார்த்துவாயாகில் அடியேன் கூற நினைக்கும் செய்தி ஒன்று உளது. அஃதாவது உனக்கு அடிமைகளாய் வந்து சேர்ந்த அடியவர்கள் துன்பப்படுவதைப் பார்த்துக் கொண்டே வாளா இருக்கும் நீ இப்பொழுது அவர் துன்பத்தைத் தீர்க்காமல் எதிர் காலத்தில் அவர்களுக்கு யாதுவழங்கத் திருவுள்ளம் பற்றியுள்ளாய்?
824 | பரவை வருதிரை நீர்க்கங்கை பாய்ந்துக்க அரவ மணிதரு கொன்றை யிளந்திங்கள் குரவ நறுமலர் கோங்க மணிந்து உரவு திரைகொணர்ந் தெற்றொற்றி யூருறை |
4.086.3 |
பரந்து வருகின்ற அலைகளை உடைய கங்கை நீர் பாய்ந்து சிதறும்படிக்கான வன்மையதாயப் பலவாக உள்ள சடைத் தொகுதி மீது பாம்போடு பிறையையும் கொன்றை குரவம் கோங்கம் ஆகியவற்றின் நறுமலர்களையும் அணிந்து விளங்கும் திருமுடியினனாய்க் கடல் அலைகள் கடல்படு பொருள்களை மோதிக் கொண்டு வந்து கரையில் சேர்க்கின்ற திருஒற்றியூரில் வீற்றிருக்கும் உத்தமனே!
825 | தானகங் காடரங் காக வுடையது ஊனக நாறு முடைதலை யிற்பலி தேனக நாறுந் திருவொற்றி யூருறை தானக மேவந்து போனகம் வேண்டி |
4.086.4 |
உள்ளிடமெல்லாந் தேன்மணங் கமழுந் திருவொற்றியூரில் உறையும் பெருமான் தான் ஆடரங்காகக் கொள்வதும் காடு. தன்னை அடைந்தார் இடும் பலியை ஏற்பதும் உள்ளுரத் தசையின் முடை நாற்றம் வீசும் தலையோட்டில். அவர் தானாகவே வீடு வீடாக வந்து உணவு வேண்டித் திரிபவரும் ஆவார்.
826 | வேலைக் கடனஞ்ச முண்டுவெள் ளேற்றொடும் மாலைச் சடையார்க் குறைவிட மாவது ஆலைக் கரும்பொடு செந்நெற் கழனி சோலைத் திருவொற்றி யூரையெப் போதுந் |
4.086.5 |
கடலிற் தோன்றிய நஞ்சை உண்டு இருண்ட கண்டத்துடன்வெள்ளை இடபத்தை ஊர்ந்தருளும், அந்தி செவ்வானம் போன்ற சடையினரான சிவபெருமானுக்கு உறைவிடமாவது வருவாய் குறையாத (ஆலைக்) கரும்புகளோடு செந்நெல்லும் மிகும் வயல்களைச் சூழ்ந்து சோலைகள் விளங்கப்பெறுவதுமான திருவொற்றியூர். அதனை எப்பொழுதுமே தொழுமின்கள்.
827 | புற்றினில் வாழு மரவுக்குந் திங்கட்குங் சிற்றிடை யாட்குஞ் செறிதரு கண்ணிக்குஞ் பெற்றுடை யான்பெரும் பேச்சுடை யான்பிரி விற்றுடை யானொற்றி யூருடை யான்றன் |
4.086.6 |
இடப வாகனத்தை உடையவனாய், தன்னைப் பற்றிச்சான்றோர்கள் பேசும் பொருள்சேர் புகழுரை தாங்குபவனாய் ,என்னைத் தன் விருப்பப்படி விற்பதற்கும் உரிமை உடைய அடியவனாகக் கொண்டவனாய் ஒற்றியூரை உறைவிடமாக உடைய சிவபெருமானுடைய விரிந்த சடை, புற்றில் வாழும் பாம்புக்கும், பிறைச் சந்திரனுக்கும், கங்கை என்ற பெயரை உடைய, சிறிய இடுப்பை உடைய நங்கைக்கும், ஒற்றைப் பூந்தொடையாகிய முடிமாலைக்கும் இருப்பிடமாகும்.
828 | இன்றரைக் கண்ணுடை யாரெங்கு மில்லை குன்றரைக் கண்ணன் குலமகட் பாவைக்குக் ளன்றரைக் கண்ணுங் கொடுத்துமை யாளையும் ஒன்றரைக் கண்ணன்கண் டீரொற்றி யூருறை |
4.086.7 |
இவ்வுலகில் முழுக்கண் உடையவர்களே காணப்படுகின்றனரே யன்றி அரைக்கண் உடையவர் ஒருவரும் இரார். ஆனால், இமவான் என்று போற்றப்படும் மலைத் தலைவனுக்கு வளர்ப்புமகளாகக் கிட்டிய நல்ல மேன்மையை உடைய பார்வதிக்கு உடம்பைச் செம்பாதியாகப் பங்கிட்டுக் கொடுத்த காலத்திலே தன் முக்கண்களில் செம்பாதியான ஒன்றரைக் கண்கள் அவளுக்காயினதால். மீதியுள்ள ஒன்றரைக் கண்ணனாகவேயுள்ளார் திருவொற்றியூரில் உறையும் உத்தமனாம் எம்பெருமான்.
829 | சுற்றிவண் டியாழ்செயுஞ் சோலையுங் காவுந் பெற்றிகண் டான்மற்றி யாவருங் கொள்வர் ஒற்றிகொண் டாயொற்றி யூரையுங் கைவிட் விற்றிகண் டாய்மற் றிதுவொப்ப தில்லிடம் |
4.086.8 |
வேதத்தால் பரம் பொருள் என்று போற்றப்படும் ஒற்றியூர்ப் பெருமானே! வண்டுகள் எப்பொழுதும் சுற்றிக்கொண்டு யாழ் போல ஒலிக்கும் பூஞ்சோலைகளும் பெருமரச்சோலைகளும் செறிந்து விளங்கும் உன் ஒற்றியூரின் சிறப்பினை நோக்கினால் அதனை யாவரும் விலைகொடுத்து வாங்கிக் கொள்வர். அது கருதி நீ ஒற்றியாகப் பெற்று அனுபவிக்கும் இவ்வொற்றியூரையும் பிறரிடம் விற்று அதனைக் கைவிட எண்ணுதியேல் அது ஏற்புடையதன்று. இதனை ஒத்த சிறப்பான இருப்பிடம் பிறிது யாதுமில்லை என்பதனைத் தெரிந்து கொள்வாயாக.
830 | சுற்றிக் கிடந்தொற்றி யூரனென் சிந்தை ஒற்றித் திரிதந்து நீயென்ன செய்தி பற்றித் திரிதந்து பல்லொடு நாமென்று தெற்றித் திருப்பதல் லாலென்ன செய்யுமித் |
4.086.9 |
என் தீவினையே! திருவொற்றியூர்ப் பெருமான் என்றும் பிரியாது என் உள்ளத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டுள்ளான். அவ்வாறாக, நீ என்னை, அடியொற்றித் திரிந்து கொண்டிருப்பதால் நீ சாதிக்கப் போவதென்ன? நான் செல்லிடமெல்லாம் அடியொற்றித் திரிந்து தனக்கு வேட்டை வாய்க்காமையால் ஆத்திரமுற்று பல்லையும் நாவையும் மென்று கொண்டு சோக மிகுதியாற் கண் குழிந்து கால் தெற்றித் தானேசோர்ந்திருப்பதைவிட இத்தீவினையால் எனக்கெதிர் எதுவும் நேர்தற்கிடமின்றாம்.
831 | அங்கட் கடுக்கைக்கு முல்லைப் புறவ பைங்கட் டலைக்குச் சுடலைக் களரி கங்கைக்கு வேலை யரவுக்குப் புற்றுக் திங்கட்கு வானந் திருவொற்றி யூரர் |
4.086.10 |
திருவொற்றியூர்ப் பெருமான் திருமுடியானது அழகிய தேனை உடைய கொன்றை மலருக்கு, முல்லை நிலக்காடு ஆகவும் (உத்தமமான ஆடவர் உடலில் இயல்பாகவே முல்லைப் பூவின் மணம் கமழும். குறுந்தொகை - 193) சிரிக்கும் தலைமாலையாயிருந்து சிரிக்குங் கபாலங்களுக்குச் சுடுகாடாகவும், பருத்த இரத்தினக் கற்களை அலைத்து வரும் கங்கைக்கு அது சென்று சேரும் கடலாகவும், பாம்புக்கு அதன் உறைவிடமான புற்றாகவும், பிறைக்கு அஃது உலவும் வானமாகவும் உள்ளதாகும்.
832 | தருக்கின வாளரக் கன்முடி பத்திறப் ஒருக்கின வாறடி யேனைப் பிறப்பறுத் நெருக்கின வானவர் தானவர் கூடிக் பருக்கினவா றென்செய்கே னொற்றி யூருறை |
4.086.11 |
ஒற்றியூரிலே உறைகின்ற பண்டரங்கக் கூத்தனான பெருமான் செருக்குக் கொண்ட இராவணனுடைய பத்துத் தலைகளும் நெரியுமாறு கால்விரலால் நெரித்தொடுக்கினது போலவே அடியேனுடைய பிறப்பையும் போக்கி அடியேனை அடிமையாகக் கொள்ளவல்லவன். நெருங்கி நின்ற தேவர்களும் அசுரர்களும் கூடிப் பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த நஞ்சினை அவனையே பருகுமாறு செய்த வினை இருந்தவாறென்? ஆ! என் செய்கேன் நான்!
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.086.திருவொற்றியூர் , உடைய, திருவொற்றியூர், பெருமான், கொன்றை, திருவொற்றியூர்ப், திருவொற்றி, கொண்டு, திருமுறை, வந்து, யூருறையுத்தமனே, முல்லைப், கங்கை, விளங்கும், உறையும், திரிதந்து, அடியொற்றித், நான், ஒன்றரைக், போற்றப்படும், திரிந்து, சூழ்ந்து, திருவொற்றியூரில், வீசும், கிடந்தது, கொண்ட, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், நான்காம், தேவாரப், காலத்தில், ஒன்று, மணம், உத்தமனே, அலைகள், தெற்றொற்றி, உள்ள, திரைகொணர்ந், அவர்