நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.081.கோயில் - திருவிருத்தம்

4.081.கோயில் - திருவிருத்தம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர்.
தேவியார் - சிவகாமியம்மை.
780 | கருநட்ட கண்டனை யண்டத் தலைவனைக் செருநட்ட மும்மதி லெய்யவல் லானைச்செந் திருநட்ட மாடியைத் தில்லைக் கிறையைச்சிற் பெருநட்ட மாடியை வானவர் கோனென்று |
4.081.1 |
கருமை நிலைபெற்ற நீலகண்டனாய், உலகங்களுக்குத் தலைவனாய், கற்பகம் போல அடியவர் வேண்டியன வழங்குபவனாய், போரில் ஈடுபட்ட மும்மதில்களையும் அழிக்க வல்லவனாய், அங்கையில் வைத்த செந்தீ ஒலிக்க அழகிய கூத்தாடுபவனாய், தில்லை நகர்த்தலைவனாய்ச் சிற்றம்பலத்து மகாதாண்டவம் ஆடிய பெருமானைத் 'தேவர்கள் தலைவன்' என்று வாழ்த்துவேன்.
781 | ஒன்றி யிருந்து நினைமின்க ளுந்தமக் கன்றிய காலனைக் காலாற் கடிந்தா சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் என்றுவந் தாயென்னு மெம்பெரு மான்றன் |
4.081.2 |
வெகுண்டு வந்த கூற்றுவனை அடியவன் பொருட்டுக் காலால் ஒறுத்தவனாய்த் தில்லை நகரில் திருச்சிற்றம்பலத்தில் என்று வந்தாய் என்னும் குறிப்புத் தோன்றும்படி கவித்த திருக்கையுடன்எம் பெருமான் நிகழ்த்தும் கூத்தினைச் சென்று தொழுமின்கள்.அக்கூத்தினையே மனம் பொருந்தி நினைமின்கள். உங்களுக்குப் பிறப்பு இறப்பு அகலாமையாகிய குறைபாடு இனி இராது.
782 | கன்மன வீர்கழி யுங்கருத் தேசொல்லிக் நன்மன வர்நவி றில்லையுட் சிற்றம் பொன்மலை யில்வெள்ளிக் குன்றது போலப் என்மன மேயொன்றிப் புக்கனன் போந்த |
4.081.3 |
கல்போன்ற திண்ணிய மனமுடைய உலகமக்களே! உங்கள் மனத்திடை அவ்வப்போது தோன்றும் விருப்பங்களை வெளியிட்டுஅவற்றை நிறைவேற்றித் தரல் வேண்டும் என்று வேண்டி நல்ல உள்ளம் படைத்த சான்றோர்கள் வாழும் தில்லை நகர்ச் சிற்றம்பலத்தில் எம்பெருமான் நிகழ்த்தும் கூத்தினைத் தரிசிப்பதனால், ஆன்ம லாபத்தை விடுத்து இம்மையிற் கிட்டும் அற்பசாரங்களால் யாது பயன்? தில்லைச் சிற்றம்பலத்திலே பொன்மலைமீது வெள்ளிமலை இருப்பது போல கூத்தப்பிரான் காட்சி வழங்கித் தான்புகுந்த சுவடு புலப்படாமல் அடியேனுடைய மனத்திலே உறுதியாக நிலைபெற்றவனாக வந்து சேர்ந்துவிட்டான்.
783 | குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த |
4.081.4 |
வளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும், கங்கையால் ஈரமான சடைமுடியையும், பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும், பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும் காணும் வாய்ப்பினைப் பெறுவதாம்பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும்.
784 | வாய்த்தது நந்தமக் கீதோர் பிறவி பார்த்தற்குப் பாசு பதமருள் செய்தவன் கோத்தன்று முப்புரந் தீவளைத் தான்றில்லை கூத்தனுக் காட்பட் டிருப்பதன் றோநந்தங |
4.081.5 |
சிவபெருமானுடைய அடியார்களே! நமக்கு நல வினை காரணமாக இந்த ஒப்பற்ற மனிதப் பிறவி நமக்குக் கிட்டியுள்ளது. இந்த மனிதப் பிறவியை மதித்துச் செயற்படுவீராக. அருச்சுனனுக்குப் பாசுபதாத்திரம் அருளிச் செய்தவனாய், முப்புரங்களை அம்பு எய்து தீக்கு இரையாக்கியவனாய், தில்லை அம்பலத்துள் கூத்து நிகழ்த்தும் அப்பெருமானுக்கு அடியவராக இருப்பதன்றோ நம் அடிமைப் பண்பாகும்?
785 | பூத்தன பொற்சடை பொன்போன் மிளிரப் ஆர்த்தன கொட்டி யரித்தன பல்குறட் தேத்தென வென்றிசை வண்டுகள் பாடுசிற் கூத்தனிற் கூத்துவல் லாருள ரோவென்றன் |
4.081.6 |
பூத்துக் குலுங்குவது போன்ற பொலிவை உடைய செஞ்சடை கொன்றை மலரை அணிந்து பொன்போல ஒளிவீச, அடியார் கூட்டங்கள் மகிழ்ச்சியால் ஆரவாரிக்க,பூதக் கூட்டங்கள் வாத்தியங்களை ஒலிக்க, 'தெத்தே'என்று வண்டுகள் ஒலிக்கும் தில்லை நகரிலுள்ள சிற்றம்பலத்திற் கூத்தினை நிகழ்த்தும் சிவபெருமானைப் போல, திரண்டவளையல்களை அணிந்த என் மகளுடைய மனத்தைத் தம் நாட்டியத்தால் கவரவல்லவர் பிறர்உளரோ? (என்று முக்கணான் முயக்கம் வேட்ட பெற்றிகண்டு தாய் இரங்கிக் கூறியவாறு.)
786 | முடிகொண்ட மத்தமு முக்கண்ணி னோக்கு துடிகொண்ட கையுந் துதைந்த வெண்ணீறுஞ் படிகொண்ட பாகமும் பாய்புலித் தோலுமென் குடிகொண்ட வாதில்லை யம்பலக் கூத்தன் |
4.081.7 |
தில்லை நகரில் சிற்றம்பலத்திற் கூத்து நிகழ்த்தும் எம்பெருமானுடைய ஒலிக்கின்ற கழல்களை அணிந்த திருவடிகளோடு தலையில் அணிந்த ஊமத்தைப் பூவும், மூன்று கண்களின் பார்வையும், புன்சிரிப்பும், உடுக்கையை ஒலிக்கும் திருக்கையும், உடல் முழுதும் பூசிய திருநீறும், பார்வதியை இடப்பாகமாகக் கொண்ட தனக்குரிய வலப்பாகமும், இடுப்பு முழுதும் பரவி உடுக்கப்பட்ட புலித்தோலும் உலகப் பொருள்களிலே ஈடுபட்டுத் தீவினையை ஈட்டிய அடியேனுடைய பாவியான உள்ளத்தில் இப்பொழுது நிலையாக இடம் பெற்றுவிட்டன.
787 | படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்சென் இடைக்கல மல்லே னெழுபிறப் பும்முனக் துடைக்கினும் போகேன் றொழுது வணங்கித் அடைக்கலங் கண்டா யணிதில்லைச் சிற்றம் |
4.081.8 |
அழகிய தில்லை நகரிலுள்ள சிற்றம்பலத்தில் உள்ள பெருமானே! என்னை ஏழையர் செய்யக் கூடிய தீங்குகளிலிருந்துபாதுகாக்கும் படைக்கருவியாக உன் திருநாமமாகிய திருவைந்தெழுத்தினையும் அடியேன் நாவினில் நீங்காது கொண்டுள்ளேன். இடையில் ஒருபோதும் உனக்கு அடிமைத் தொண்டு செய்தலைத் தவிர்ந்தேன் அல்லேன். எழுவகைப்பட்ட பிறப்புக்களில் எந்தப் பிறவி எடுத்தாலும் எடுத்த பிறவிக்கு ஏற்ப உனக்கு அடிமைத் தொண்டு செய்கிறேன். அடியேனை நீ விலக்கினாலும் அடியேன் உன்னை விட்டுப் பெயரேன். எப்பொழுதும் உன்னை மனத்தால் தொழுது உடலால் வணங்கித் திருநீறு அணிந்து உன்னால் காக்கப்படவேண்டிய பொருளாக அடியேன் உள்ளேன்.
788 | பொன்னொத்த மேனிமேல் வெண்ணீ றணிந்து மின்னொத் திலங்கப் பலிதேர்ந் துழலும் சின்னத்தி னான்மலி தில்லையுட் சிற்றம் என்னத்த னாடல்கண்டின்புற்ற தாலிங் |
4.081.9 |
பொன்னை ஒத்த செந்நிறமான உடம்பில் வெண்மையான திருநீற்றை அணிந்து, முறுக்குண்ட செஞ்சடைகள் மின்னலைப் போல ஒளிவீச, பிச்சை எடுத்துத் திரியும், உளியால் செதுக்கப்படாது இயல்பான சிவ வேட அடையாளத்தை உடையவனாய், வளம்மிக்க தில்லை நகரின் சிற்றம்பலத்தான் ஆகிய என் தலைவனாம் பெருமானுடைய திருக்கூத்தினைக் கண்டு இவ்வுலகம் இன்புறுகின்றது.
789 | சாட வெடுத்தது தக்கன்றன் வேள்வியிற் வீட வெடுத்தது காலனை நாரணன் தேட வெடுத்தது தில்லையுட் சிற்றம் ஆட வெடுத்திட்ட பாதமன் றோநம்மை |
4.081.10 |
தக்கன் நிகழ்த்திய வேள்வியில் தனக்கு உரிய அவியைப் பெறுவதற்காக வந்து கலந்து கொண்ட சந்திரனைத் தேய்ப்பதற்காகத் தூக்கப்பட்டதும், கூற்றுவனை அழிப்பதற்கு உயர்த்தப்பட்டதும், திருமாலும் பிரமனும் காணமுடியாது தேடுமாறு பாதலத்துக்குக் கீழும் வளர்ந்ததும் தில்லைச் சிற்றம்பலத்தில் கூத்தாடுவதற்காக உயர்த்தப்பட்டதும் ஆகிய சிவபெருமானுடைய இடது திருவடியன்றோ நம்மை அடிமையாகக் கொண்டதாகும்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.081.கோயில் - திருவிருத்தம் , தில்லை, நிகழ்த்தும், திருவிருத்தம், அணிந்த, தில்லையுட், அணிந்து, திருமுறை, சிற்றம்பலத்தில், அடியேன், கோயில், வெடுத்தது, ஆகிய, ஒலிக்கும், கூட்டங்கள், உயர்த்தப்பட்டதும், ஒளிவீச, நகரிலுள்ள, முழுதும், தொண்டு, உனக்கு, வண்டுகள், கொண்ட, அடிமைத், உன்னை, சிற்றம்பலத்திற், வெண்மையான, ஒலிக்க, அழகிய, தொழுமின்கள், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், நான்காம், தேவாரப், கூற்றுவனை, நகரில், சிவபெருமானுடைய, மனிதப், பிறவி, சிவந்த, வந்து, தில்லைச், அடியேனுடைய, கூத்து