நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.080.கோயில் - திருவிருத்தம்

4.080.கோயில் - திருவிருத்தம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர்.
தேவியார் - சிவகாமியம்மை.
770 | பாளை யுடைக்கமு கோங்கிப்பன் மாடம் வாளை யுடைப்புனல் வந்தெறி வாழ்வயற் ஆள வுடைக்கழற் சிற்றம் பலத்தரன் பீளை யுடைக்கண்க ளாற்பின்னைப் பேய்த்தொண்டர் |
4.080.1 |
பாளையை உடைய பாக்கு மரங்கள் உயர்ந்து வளர்ந்தமாடவீடுகள் நெருக்கமாக அமைய, வாளை மீன் குதிக்கும் தண்ணீர் அலை எறியும் வயல்களையுடைய தில்லை நகரிலே, நம்மை ஆட்கொள்ளுதலுக்காக அமைந்த திருவடிகளை உடைய சிற்றம் பலத்துப் பெருமானுடைய ஆடலைக் காணும் வாய்ப்பினைப் பெற்றால், அதன்பின் பீளை ஒழுகும் கண்களால், பிடித்ததனை விடாத பேய் போன்றஇயல்பை உடைய அடியார்கள், தம் கண்களால் காணத்தக்க மேம்பட்ட பொருள் யாதுள்ளதோ!
771 | பொருவிடை யொன்றுடைப் புண்ணிய மூர்த்தி உருவுடை யம்மலை மங்கை மணாள திருவுடை யந்தணர் வாழ்கின்ற தில்லைச்சிற் றிருவடி யைக்கண்ட கண்கொண்டு மற்றினிக் |
4.080.2 |
போரிடும் காளை ஒன்றினையுடைய புண்ணிய வடிவினனாய், புலித்தோல் ஆடையனாய், அழகிய பார்வதி மணாளனாய், அந்தணர்கள் வாழ்கின்ற பதியாய் உலகத்தவருக்கெல்லாம் பேரின்பச் செல்வத்தை நல்கும் தில்லையிலுள்ள சிற்றம்பலத்துக் கூத்து நிகழ்த்தும் பெருமானுடைய திருவடிகளைக் கண்ட கண்களால், காண்பதற்குப் பிறிதொருபொருள் யாதுள்ளதோ!
772 | தொடுத்த மலரொடு தூபமுஞ் சாந்துங்கொண் அடுத்து வணங்கு மயனொடு மாலுக்குங் பொடிக்கொண் டணிந்துபொன் னாகிய தில்லைச்சிற் உடுத்த துகில்கண்ட கண்கொண்டு மற்றினிக் |
4.080.3 |
மாலையாகத் தொடுக்கப் பட்ட மலரொடு புகைக்கு உரியனவும் சந்தனமும் கைகளிற் கொண்டு, எப்பொழுதும் அணுகி வந்து வணங்கும் பிரமனுக்கும் திருமாலுக்கும் தம் முயற்சியினாற் காண்பதற்கு அரியவனாய்த் திகழ்பவனாகித் திருநீறணிந்து பொன் மயமான தில்லைச் சிற்றம்பலத்து ஆடும் பெருமான் அணிந்த புலித்தோலாடையைக் கண்ட கண் கொண்டு காண்பதற்குப் பிறிது பொருள் யாதுள்ளதோ!
773 | வைச்ச பொருணமக் காகுமென் றெண்ணி அச்ச மொழிந்தே னணிதில்லை யம்பலத் பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி யுந்தியின் கச்சி னழகுகண் டாற்பின்னைக் கண்கொண்டு |
4.080.4 |
நமக்குச் சேமவைப்பாக இருக்கின்ற பொருள் திருவைந்தெழுத்தே என்று விருப்புற்று நினைத்துப் பேரின்ப வாழ்வு குறைவற நடக்கும் என்று துணிந்து அச்சம் ஒழிந்தேன். அழகான தில்லை நகரிலே உள்ள சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்துகின்றவனாய், அடியவர் திறத்துப் பித்தனாய், பிறப்பு அற்றவனாய் நந்தி என்ற பெயரினனாய் உள்ள பெருமானுடைய கொப்பூழின் மேல் இடுப்பைச் சுற்றிக்கட்டப்பட்ட உதரபந்தமாகிய கச்சின் அழகைக் காணப் பெற்றால் பின்னைக் காணவேண்டிய உயர்ந்த பொருள் யாதுள்ளதோ!
774 | செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற தில்லைச்சிற் மைஞ்ஞின்ற வொண்கண் மலைமகள் கண்டு நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த நீல கைஞ்ஞின்ற வாடல்கண் டாற்பின்னைக் கண்கொண்டு |
4.080.5 |
வயலிலே காண்கின்ற பூங்கொடியில் நீலோற்பல மலர்கள் மலரும் வளமுள்ள தில்லைப்பதியில் உறையுஞ் சிற்றம்பலவனாய்நெய்யில் நின்றெரியும் தீபச்சுடர் போன்று ஒளிவிடும் நீலமணி மிடற்றனுமாய பெருமான், கருமை நிலைபெற்ற ஒளிமிக்க கண்களை உடைய சிவகாமியம்மையார் கண்டு மகிழ்ந்து நிற்க வைத்துச் செய்வதும் என்று வந்தாய் எனும் திருக்குறிப்புப் புலப்பட நின்று இயற்றுவதுமான ஆடலைக் கண்டபின் காணத்தகும் பொருள் வேறு யாதுளதோ!
775 | ஊனத்தை நீக்கி யுலகறி யவென்னை றேனொத் தெனக்கினி யான்றில்லைச் சிற்றம் வானத் தவருய்ய வன்னஞ்சை யுண்டகண் ஏனத் தெயிறுகண் டாற்பின்னைக் கண்கொண்டு |
4.080.6 |
அவைதிக சமயத்தைச் சார்ந்தவனாயினேன் என்ற என் குறையைப் போக்கி, அடியேனைச் சூலைநோய் அருளி ஆட்கொண்டு, அடியேனுக்குத் தேனை ஒத்து இனியனாய்த் தில்லைச் சிற்றம்பலவனாய் உள்ள எம் தலைவன், தேவர்கள் உயிர் பிழைக்கு மாறு கொடிய விடத்தை உண்டு இருத்திய கழுத்தில் அணிந்திருக்கும் மகாவராகத்தின் கொம்பின் வனப்பைக் கண்டால் பின், காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாதுள்ளதோ!
776 | தெரித்த கணையாற் றிரிபுர மூன்றுஞ்செந் எரித்த விறைவ னிமையவர் கோமா தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்சிற் சிரித்த முகங்கண்ட கண்கொண்டு மற்றினிக் |
4.080.7 |
ஆராய்ந்து எடுத்த அம்பாலே வானத்தில் உலவிய மதில்கள் மூன்றும் நெருப்பில் மூழ்குமாறு தீக்கு இரையாக்கிய தலைவனாய், தேவர்கள் மன்னனாய் உள்ள சிவபெருமானுடைய திருவடிகளைத் தம்முள் கொண்டு தாங்கும் மனத்தை உடைய அடியவர்கள் வாழ்கின்ற தில்லை நகரிலே சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்தும் அப்பெருமானுடைய சிரித்த முகத்தைக் கண்ட கண்களால் இனிக் காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாதுள்ளதோ!
777 | சுற்று மமரர் சுரபதி நின்றிருப் பற்றொன் றிலோமென் றழைப்பப் பரவையுள் செற்றங் கநங்கனைத் தீவிழித் தான்றில்லை நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக் |
4.080.8 |
சுற்றிச் சூழும் தேவர்களும், இந்திரனும் 'உன் திருவடிகளைத் தவிர எங்களுக்கு வேறு பற்றுக்கோடு இல்லை' என்று கூறி ஆலகால விடத்தை அடக்குமாறு சிவபெருமானை வேண்டியபோது அவர்கள் வேண்டுகோளுக்கு இரங்கிக் கடலில் தோன்றிய விடத்தை உண்டவனாகி தில்லை நகரில் சிற்றம்பலத்தில் கூத்து நிகழ்த்தும் பெருமான், மன்மதனை வெகுண்டு சாம்பலாகுமாறு விழித்த நெற்றிக்கண்ணைக் கண்ட கண்ணால் இனிக் காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாது உளதோ!
778 | சித்தத் தெழுந்த செழுங்கம லத்தன்ன வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்சிற் முத்தும் வயிரமு மாணிக்கம் தன்னுள் மத்த மலர்கண்ட கண்கொண்டு மற்றினிக் |
4.080.9 |
உள்ளத்திலே முளைத்துச் செழித்து மலர்ந்த செழுந்தாமரை மலர்களை ஒத்த திருவடிகளை நிலையாக மனத்தில் இறுத்திய சான்றோர்கள் வாழும் தில்லையம்பதியில் உள்ள சிற்றம்பலத்தானுடைய முத்தும் வயிரமும் மாணிக்கமும் தூய மலர்களும் அணிந்த திருச்சென்னியின் மலரழகைக் கண்ட கண்களால் இனி மேம்பட்டதாகக் காண்பதற்குரிய பொருள் பிறிது யாதுள்ளதோ!
779 | தருக்கு மிகுத்துத்தன் றோள்வலி யுன்னித் வரைக்கைக ளாலெடுத் தார்ப்ப மலைமகள் அரக்கன் மணிமுடி பத்து மணிதில்லை நெருக்கி மிதித்த விரல்கண்ட கண்கொண்டு |
4.080.10 |
இராவணன் செருக்கு மிகுந்துத் தன் தோள் வலிமையை மிகுதியாகக் கருதிப் பெரிய கயிலைமலையைத் தன் மலைபோன்ற கைகளால் எடுத்து ஆரவாரம் செய்ய அதனைக் கண்டு பார்வதி கொழுநனாகிய தில்லைச் சிற்றம்பலவன் சிரித்து இராவணனுடைய கிரீடங்கள் அணிந்த தலைகள் பத்தினையும் நெருக்கி மிதித்த திருக்கால் விரலைக் கண்ட கண்களால் காண்பதற்கு மேம்பட்ட பொருள் பிறிது யாதுள்ளதோ!
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.080.கோயில் - திருவிருத்தம் , பொருள், யாதுள்ளதோ, கண்களால், கண்ட, பிறிது, மேம்பட்ட, மற்றினிக்காண்பதென்னே, உடைய, காண்பதற்கு, கண்கொண்டு, உள்ள, வாழ்கின்ற, கூத்து, கண்கொண்டுகாண்பதென்னே, திருவிருத்தம், தில்லை, அணிந்த, பெருமான், திருமுறை, தில்லைச், கொண்டு, நிகழ்த்தும், டாற்பின்னைக், சிற்றம்பலத்தில், நகரிலே, விடத்தை, பெருமானுடைய, கோயில், இனிக், திருவடிகளைத், மனத்தவர், தேவர்கள், மிதித்த, கண்டு, வேறு, பார்வதி, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், நான்காம், சிற்றம், திருவடிகளை, காண்பதற்குப், புண்ணிய, பெற்றால், ஆடலைக், மலரொடு