நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.077.தனித் திருநேரிசை

4.077.தனித் திருநேரிசை
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
746 | கடும்பக னட்ட மாடிக் இடும்பலிக்கில்லந் தோறு நெடும்பொறை மலையர் பாவை கொடுங்குழை புகுந்த வன்றுங் |
4.077.1 |
நடுப்பகலிலே கூத்தாடிக்கொண்டு கையில் ஒரு மண்டையோட்டினை ஏந்தி வழங்கப்படும் பிச்சைக்காக வீடுகள் தோறும் உலாவித்திரிகின்ற பெருமானே! இமவான் மகளாகிய சிறந்த அணிகலன்களையும் சுருண்ட மெல்லிய கூந்தலையும், வளைந்த காதணியையும் உடைய பார்வதி உமக்கு மனைவியாக வந்தபோதும், இடுப்பில் கோவணத்துடன்தான் இருந்தீரோ?
747 | கோவண முடுத்த வாறுங் தீவணச் சாம்பர் பூசித் பூவணக் கிழவ னாரைப் ஏவணச் சிலையி னாரை |
4.077.2 |
கோவணத்தை உடுத்து, கொடிய பாம்பினை இடுப்பில் இறுகக்கட்டி, தீப்போன்ற செந்நிற உடம்பில் சாம்பலைப் பூசி, அழகிய வடிவினராய், செந்தாமரைக் காடு அனைய நிறத்தை உடையவராய், புலித்தோலை இடையில் அணிந்தவராய், அம்புக்கு ஏற்ற அழகிய வில்லை உடையவருமான பெருமானின் வடிவழகினை ஓவியத்தில் எழுதவல்ல ஆற்றல் உடையவர் யாவர்?
748 | விளக்கினாற் பெற்ற வின்ப துளக்கினன் மலர்தொ டுத்தாற் விளக்கிட்டார் பேறு சொல்லின் அளப்பில கீதஞ் சொன்னார்க் |
4.077.3 |
திருக்கோயிலைப் பெருக்குவதனால் பெறும் இன்பத்தைப் போல அதனை மெழுகுவதனால் பத்து மடங்கு இன்பம் ஏற்படும். ஒளியை உடைய நல்ல மலர்களைப் பறித்து அவற்றை மாலையாகத் தொடுத்து இறைவனுக்கு ஒப்படைத்தால், தூய வீட்டுலகத்துக்கு இவ்வான்மா மேல் நோக்கிச் செல்லும். கோயிலில் விளக்கு ஏற்றுபவர்கள் உண்மை வழியில் செலுத்தும் ஞானமாகிய பேறு பெறுவர். எல்லையில்லாத பாடல்களைப் பாடுபவர்களுக்கு இறைவன் அருளும் வகைகள் எல்லை இல்லாதன.
749 | சந்திரற் சடையில் வைத்த அந்தரத் தமரர் பெம்மா மந்திர நமச்சி வாய வெந்தறும் வினையு நோயும் |
4.077.4 |
பிறையைச் சடையில் சூடி, எல்லோருக்கும் நன்மை செய்யும் பெருமானாய், சாம வேதம் ஓதுபவனாய் வானத்திலுள்ள தேவர்களுக்கும் தலைவனாய், பெரிய வெண்ணிறக் காளை வாகனனாய் உள்ள பெருமானுடைய திருவைந்தெழுத்தை ஓதி, திருநீற்றை அணிந்தால்கொடிய நெருப்பில் இடப்பட்ட விறகு போல நம்முடைய நோய்களும், வினைகளும் வெந்து சாம்பலாகும்.
750 | புள்ளு வரைவர் கள்வர் துள்ளுவர் சூறை கொள்வர் முள்ளுடை யவர்க டம்மை உள்ளிடை மறைந்து நின்றங் |
4.077.5 |
வேடர்களும், திருடர்களும் போன்ற ஐம்பொறிகளும் என் உள்ளத்தில் புகுந்து நின்று மகிழ்வோடு துள்ளிக் கொண்டு, அடியேன் தூய வழியிலே செயற்பட ஒட்டாமல் என்னைக் கொள்ளையடிக்கின்றன. தீமைபுரிவதில் நுண்மை உடைய அவற்றைச் சிவபெருமானுடைய திருவடி நிழலிலே, அவை காணாதபடி மறைந்து நின்று சிவஞானம் என்னும் அம்பினால் எய்து அழித்து விடலாம்.
751 | தொண்ட னேன்பிறந்து வாளாத் பிண்டமே சுமந்து நாளும் அண்டனே யமரர் கோவே தெண்டிரைக் கங்கை சூடுந் |
4.077.6 |
தேவனே! தேவர்தலைவனே! முக்காலமும் அறிபவனே! தௌந்த அலைகளை உடைய கங்கையைச் சூடிய செவ்வொளி விளங்கும் சடையனே! உன் அடியவனாகிய யான், மனிதனாகப் பிறந்து வீணாகப் பழைய வினைகளாகிய குழியிலே விழுந்துஇந்த உடம்பைச் சுமந்து கொண்டு நாள்தோறும் பெரிய ஆசையில் அகப்பட்டுத் தடுமாறுகின்றேன். அடியேனை அஞ்சேல்! என்று அருளுவாயாக.
752 | பாறினாய் பாவி நெஞ்சே தேறிநீ நினைதி யாயிற் ஊறலே யுவர்ப்பு நாறி கூறையான் மூடக் கண்டு |
4.077.7 |
தீவினையை உடைய நெஞ்சமே! பன்றியைப் போல இந்த உலகவாழ்வாகிய சேற்றில் அகப்பட்டு, பல திசைகளிலும் ஓடுகின்றாய். உப்பு நீர் ஊறி நாற்றமெடுத்துக் குருதி ஒழுகும் துவாரங்கள் மேற்கூரையாகிய தோலாலே மூடப்பட்டு உள்ள உடம்பின் நிலையை நீ அழகாகக் கருதுகிறாய். இதன் புன்மையைத் தௌந்து நீ இறைவனை விருப்புற்று நினைப்பாயானால் உனக்கு நிச்சயமாகச் சிவகதி கிட்டும்.
753 | உய்த்தகா லுதயத் தும்ப வைத்தகா லரக்க னோதன் மொய்த்தகான் முகிழ்வெண் டிங்கண் வைத்தகால் வருந்து மென்று |
4.077.8 |
இராவணன், கயிலை மலையை எடுக்கத் தொடங்கிய காலத்தில், பார்வதிக்கு ஏற்பட்ட அச்சம் தீர, பெருமான் தன்னுடைய கால் விரலை வைத்து அழுத்த அதற்கு இலக்காக இராவணன், தன் பெரிய தலைகளைக்கொடுத்தான். பிறை சூடிய மூர்த்தியாகிய பெருமானுடைய, வண்டுகள் மொய்க்கும் நறுமணம் உடைய மலர் போன்ற திருவடிகளை அப்பெருமான் கரடுமுரடான என் தலைமீது வைத்தால் அத்திருவடிகள் வருந்துமென்று அவை என் தலையைச் சாராதவாறு நான் தாழ்ந்து ஒடுங்கினேன்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.077.தனித் திருநேரிசை , உடைய, திருநேரிசை, தனித், திருமுறை, பெரிய, மறைந்து, புகுந்து, நின்று, கொண்டு, இராவணன், சூடிய, சுமந்து, பெருமானுடைய, பேறு, பதிகங்கள், தேவாரப், நான்காம், திருச்சிற்றம்பலம், இடுப்பில், சடையில், அழகிய, உள்ள