நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.073.திருச்சேறை

4.073.திருச்சேறை
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சென்னெறியப்பர்.
தேவியார் - ஞானவல்லியம்மை.
707 | .பெருந்திரு விமவான் பெற்ற வருந்துவான் றவங்கள் செய்ய அருந்திரு மேனி தன்பர் திருந்திட வைத்தார் சேறைச் |
4.073.1 |
திருச்சேறையிலுள்ள செந்நெறி என்னும் கோயிலில் உறைகின்ற செல்வராம் சிவபெருமான் தம்மைத் தாட்சாயணி பிரிந்த பிறகு, மிக்க செல்வத்தை உடைய, இமவான் பெற்ற பெண்மகளாய்த் தோன்றி மிக்க வருத்தத்தைத் தரும் தவங்களைச் செய்ய, பெருமான் அவளைத் திருமணம் செய்து கொண்டு, தன் உடம்பில் ஒரு பாகமாகக் கொண்டார்.
708 | ஓர்த்துள வாறு நோக்கி வார்த்தையை மெய்யென் றெண்ணி பேர்த்தெனை யாளாக் கொண்டு தீர்த்தருள் செய்தார் சேறைச் |
4.073.2 |
சேறைச் செந்நெறிச் செல்வனார் ஆராய்ந்து உள்ளவாறு உண்மையை உணராத, உடல் பருத்த சமணரின் சொற்களை உண்மையென்று எண்ணி, மயக்கம் தரும் அவர்கள், சமயத்தில் விழுந்து அழுந்திய நிலையில் இருந்த என்னை, வயிற்று வலியால், அழுந்திய நிலையிலிருந்து எடுத்து, என்னை அடியவனாகக் கொண்டு, பிறவியைத் தருகின்ற பெரிய பிணிப்புக்களை எல்லாம் போக்கி, அடியேனுக்கு அருள் செய்தவராவர்.
709 | ஒன்றிய தவத்து மன்னி நின்றுதங் கழல்க ளேத்து வென்றிகொள் வேட னாகி சென்றருள் செய்தார் சேறைச் |
4.073.3 |
சேறைச் செந்நெறிச் செல்வனார், மனம் அலையாமல் ஒருமையுற்ற தவத்தில் நிலைபெற்று, தபோதனனாய்ப் பல காலம் நின்று தம் கழல்களைத் தியானித்த நீண்ட வில்லை உடைய அருச்சுனனிருந்த காட்டிற்கு வெற்றியைப் பெறும் வேடனாக விரும்பிச் சென்று, அவனுக்கு அருள்கள் பல செய்தார்.
710 | அஞ்சையு மடக்கி யாற்ற வஞ்சமி றவத்து ணின்று வெஞ்சின முகங்க ளாகி செஞ்சடை யேற்றார் சேறைச் |
4.073.4 |
சேறைச்செந்நெறிச் செல்வனார், ஐம்பொறிகளையும் அடக்கித் தவம் செய்யும் ஆற்றம் உடையவனாய், பல்லாண்டுகள் வஞ்சனையற்ற தவத்தில்நிலைபெற்ற பகீரதனுக்காக, மிகுந்த கோபத்தை உடைய பல முகங்களாகப் பிரிந்து வேகத்தோடு பூமியை நோக்கிப் பாய்ந்த கங்கையைத் தமது சிறந்த சடையில் ஏற்றருளினார்.
711 | நிறைந்த மாமணலைக் கூப்பி கறந்துகொண் டாட்டக் கண்டு எறிந்த மாணிக்கப் போதே சிறந்தபே றளித்தார் சேறைச் |
4.073.5 |
சேறைச் செந்நெறிச் செல்வனார், மண்ணியாற்றின் நிறைந்த, சிறந்த மணலைச் சிவலிங்க வடிவாகக் குவித்து அந்த இலிங்கத்திற்கு பசுவின் பாலைக் கறந்து அபிடேகம் செய்ய. அதனைக் கோபித்த தன் தந்தையின் கால்களை மழுவினால் வீழ்த்திய பிரமசாரியான விசாரசருமனுக்கு அப்பொழுதே சண்டீசன் என்று. சொல்லப்படும் சிறந்த பதவியை வழங்கினார்.
712 | விரித்தபல் கதிர்கொள் சூலம் தரித்ததோர் கோல கால உரித்துமை யஞ்சக் கண்டு சிரித்தருள் செய்தார் சேறைச் |
4.073.6 |
சேறைச் செந்நெறிச் செல்வனார் பலவாறு விரிந்த ஒளியை உடைய சூலத்தையும், உடுக்கையையும் கையில் ஏந்திய அழகினை உடைய கால பைரவ மூர்த்தியாகி, யானைத் தோலை உரித்த தம் செயலைக் கண்டு பார்வதி அஞ்ச, ஒளி பொருந்திய அழகிய பவளம் போன்ற வாயைத் திறந்து சிரித்து அருள் செய்தார்.
713 | சுற்றுமுன் னிமையோர் நின்று மற்றெமை யுயக்கொ ளென்ன உற்றொரு நொடியின் முன்ன செற்றருள் செய்தார் சேறைச் |
4.073.7 |
சேறைச் செந்நெறிச் செல்வனார், தம்மைச் சுற்றி ஒரு காலத்தில் தேவர்கள் எல்லோரும் நின்று கொண்டு வணங்கி, தூய மலர்களைத் தூவி, 'எம்மைக் காப்பாற்றுவாயாக' என்று வேண்ட, வானத்திலே உலவிக் கொண்டிருந்த மும்மதில்களையும் ஒரே நொடியில் தீக்கு இரையாகுமாறு அழித்து, தேவர்களுக்கு அருள் செய்தார்.
714 | முந்தியிவ் வுலக மெல்லாம் எந்தனி நாத னேயென் அந்தமில் சோதி தன்னை செந்தழ லானார் சேறைச் |
4.073.8 |
சேறைச் செந்நெறிச் செல்வனார், முற்பட்டு இவ்வுலகங்களை எல்லாம் படைத்த பிரமன், திருமாலோடு, 'எங்கள் ஒப்பற்ற தலைவனே!' என்று வணங்கித் துதிக்க, முன்னர் எல்லையில்லாத தம்முடைய ஒளியை அடிமுடி அறியாத வண்ணம் தீப்பிழம்பாக அவர்களுக்குக் காட்சி வழங்கினார்.
715 | ஒருவரு நிகரி லாத பெருவரை யெடுத்த திண்டோள் மருவியெம் பெருமா னென்ன திருவருள் செய்தார் சேறைச் |
4.073.9 |
சேறைச் செந்நெறிச் செல்வனார். தனக்கு நிகரில்லாத மேம்பட்ட ஆற்றலை உடைய இராவணன், விரைந்து சென்று கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட தன்னுடைய தோள்களும், தலைகளும் சிதறப் பின் அன்பொடு பொருந்தி எம்பெருமானே! என்று வழிபட, தம்முடைய திருவடியை அழுத்துதலைத் தவிர்த்து, அவனுக்குச் சிறந்த அருள் செய்தார்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.073.திருச்சேறை , சேறைச்செந்நெறிச், செய்தார், செல்வ, னாரே, செல்வனார், சேறைச், செந்நெறிச், உடைய, சிறந்த, அருள், திருமுறை, கொண்டு, திருச்சேறை, நான்காம், நின்று, சென்று, நிறைந்த, தம்முடைய, ஒளியை, வழங்கினார், தேவாரப், என்னை, பிரிந்த, மிக்க, செய்ய, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தரும், அழுந்திய, எல்லாம்