நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.064.திருவீழிமிழலை

4.064.திருவீழிமிழலை
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீழியழகர்.
தேவியார் - சுந்தரகுசாம்பிகை.
619 | பூதத்தின் படையர்பாம்பின் சீதத்திற் பொலிந்த திங்கட் கீதத்திற் பொலிந்த வோசைக் வேதத்தின் பொருளர் வீழி |
4.064.1 |
பூதத்தின் படையினராய், பாம்பாகிய அணிகளை உடையவராய், பூணூலை அணிந்தவராய், குளிர்ச்சி, மிகுந்த பிறையைச் சூடியவராய், விடம் பொருந்திய கழுத்தினராய், பாடலோடு பொருந்திய ஓசைச் சிறப்பை உடைய வேதம் ஓதுபவராய், வேள்வியை ஆள்பவராய் வேதத்தின் பொருளராய் வீழிமிழலையில் விகிர்தராம் இயல்புள்ள சிவபெருமான் விளங்குகிறார்.
620 | காலையிற் கதிர்செய் மேனி மாலையில் மதியஞ் சேர்ந்த ஆலையிற் பாகும் போல வேலையி னமுதர் வீழி |
4.064.2 |
காலை ஞாயிற்றின் ஒளியை உடைய திருமேனிய ராய், இரவு இருள் போலக் கறுத்த கழுத்தினராய், மாலையில் தோன்றும் பிறையணிந்த சடை முடியினராய், தேனும் பாலும் கரும்பின் பாகும் கடலில் தோன்றும் அமுதமும் போல அடியவர்களுக்கு இனிப்பை நல்குபவராய் வீழிமிழலையில் உள்ள விகிர்தனார் விளங்குகிறார்.
621 | வருந்தின நெருந லின்றாய் இருந்துநன் பொருள்க ணால்வர்க் பொருந்தினர் பிரிந்து தம்பாற் விருந்தினர் திருந்து வீழி |
4.064.3 |
நாளை, நேற்று, இன்று என்னும் முக்காலத்தும் இருப்பவராய், ஆலமரத்தின் கீழ் அமர்ந்து மேம்பட்ட செய்திகளை முனிவர் நால்வருக்கு இயம்பியவராய், திருமாலோடும் பிரமனோடும் பொருந்தியவராய், தம்மை மறந்து தம்மிடம் பொய்யாக நடந்து கொள்பவருக்குத் தம்மை உள்ளவாறு அறிய இயலாத புதியவராய் வீழிமிழலை விகிர்தர்விளங்குகிறார்.
622 | நிலையிலா வூர்மூன் றொன்ற சிலையுநா ணதுவு நாகங் தலையினாற் றரித்த வென்புந் விலையிலா வேடர் வீழி |
4.064.4 |
எங்கும் இயங்கிக் கொண்டிருந்த மும்மதில்களை அக்கினி, திருமால், வாயு இவர்களை உறுப்பாகக் கொண்ட அம்பு, மலையாகிய வில், பாம்பாகிய நாண் இவற்றைக் கொண்டு அழித்தவராய்த் தேவர்களின் தலைமாலையும், தலைமயிராலாகிய பஞ்சவடி என்னும் பூணூலும் அணிந்தவராய், யாரும் விலை மதித்தற்கில்லாத வேடத்தை உடையவராய் வீழிமிழலை விகிர்தனார் விளங்குகிறார்.
623 | மறையிடைப் பொருளர் மொட்டின் கறவிடைப் பாலி னெய்யர் பிறையிடைப் பாம்பு கொன்றைப் விறகிடைத் தீயர் வீழி |
4.064.5 |
வேதத்தின் விழுமிய பொருளாக உள்ளவராய், அரும்பு பூக்கும்போது வெளிப்படும் மணமுடைய தேனாகியவராய், கறக்கும் பசுவின் பாலில் கரந்து எங்கும் பரந்திருக்கும் நெய் போன்றவராய், கரும்புச்சாற்றின் கட்டிபோன்று இனியராய், பிறை, பாம்பு, கொன்றைமாலை இவற்றைத் தரித்த சடையில் கங்கை நீரை ஏற்றவராய், விறகிடை மறைந்து பரந்திருக்கும் தீப்போலக் கரந்து எங்கும் பரந்தவராய் வீழிமிழலை விகிர்தனார் விளங்குகிறார்.
624 | எண்ணகத் தில்லை யல்ல பெண்ணகத் தரையர்காற்றிற் மண்ணகத் தைவர் நீரி விண்ணகத் தொருவர் வீழி |
4.064.6 |
எண்ணும் எண்ணத்திலே இல்லாதவரும் அல்லராய், உள்ளவரும் அல்லராய், பார்வதி பாகராய், விண்ணில் ஒலிப்பண்பினராய்க் காற்றில் ஒலி ஊறு என்ற இரு பண்பினராய், தீயிடை ஒலி ஊறு ஒளி என்ற மூன்று பண்பினராய், நீரிடை ஒலிஊறு ஒளி சுவை என்ற நாற்பண்பினராய், மண்ணில் ஒலி ஊறு ஒளி சுவை நாற்றம் என்ற ஐந்து பண்பினராய் வீழிமிழலை விகிர்தனார் உள்ளார்.
625 | சந்தணி கொங்கை யாளோர் எந்தையு மெந்தை தந்தை அந்தியோ டுதய மந்த வெந்தழ லுருவர் வீழி |
4.064.7 |
சந்தனத்தை அணிந்த தனங்களை உடைய பார்வதி பாகர், சாமதேவர், அடியேனுக்குத் தந்தையாராகவும் பாட்டனாராகவும் முப்பாட்டனாராகவும் உள்ளவர். காலை சந்தியிலும் மாலை அந்தியிலும் அந்தணாளர்கள் நெய்யால் வேள்வி செய்யும் விரும்பத் தக்க தீயின் உருவர் என இவ்வாறு வீழிமிழலை விகிர்தனார் உள்ளார்.
626 | நீற்றினை நிறையப் பூசி ஏற்றுழி யொருநா ளொன்று ஆற்றலுக் காழி நல்கி வீற்றிருந் தளிப்பர் வீழி |
4.064.8 |
திருநீற்றை நன்கு அணிந்து நாடோறும் ஆயிரம் தாமரைப் பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்தகாலத்தில் ஒரு நாள் ஒரு பூக்குறையவே அப்பூவின் தானத்தில்தன் கண்ணைப் பிடுங்கி அர்ச்சித்த முறுகிய பக்தியை உடைய திருமாலுக்குச் சக்கரத்தைக் கொடுத்து அவன் விண்ணிலிருந்து கொணர்ந்து நிறுவியகோயிலில் வீற்றிருந்து வீழிமிழலை விகிர்தனார் எல்லோருக்கும் அருள் செய்கிறார்.
627 | சித்திசெய் பவர்கட்கெல் லாஞ் பத்திசெய் பவர்கள் பாவம் முத்திசெய் பவள மேனி வித்தினின் முளையர் வீழி |
4.064.9 |
சித்தியை விரும்புவார்தாம் தாம் சேர்விடஞ் சென்றுகூட வைத்தும் பத்தி செய்பவர்களின் பாவத்தை விலக்கியும் பக்குவர்க்கு முத்தி வழங்கியும் அருள்பவர் பவளம்போல் மேனியும் ஒளியின் முதிர்ந்த நீலகண்டரும் வித்தின் முளைபோல் வாருமாய் உள்ள திருவீழிமிழலை விகிர்தனாரே.
628 | தருக்கின வரக்கன் றேரூர் பொருப்பினை யெடுத்த தோளும் நெரிப்புண்டங் கலறி மீண்டு விருப்பொடுங் கொடுப்பர்வீழி |
4.064.10 |
செருக்குற்ற இராவணன் தன் தேரைச் செலுத்திய சாரதி தடுத்ததனை மனங்கொள்ளாது கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்ட தோள்களும் அழகிய பத்துத் தலைகளும் புண்ணாகுமாறு சிவபெருமானால் நெரிக்கப்பட்டு, அலறி, மறுபடி அவன் அன்போடு நினைந்து சிவபெருமான் திருவடிகளைத் துதிக்க, அவனுக்கு வீழிமிழலை விகிர்தனராகிய அப்பெருமான் தம்முடைய வாளினை விருப்பத்தோடு வழங்கினார்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.064.திருவீழிமிழலை , னாரே, வீழிமிழலையுள்விகிர்த, வீழிமிழலை, விகிர்தனார், உடைய, விளங்குகிறார், திருவீழிமிழலை, திருமுறை, பண்பினராய், எங்கும், உள்ள, என்னும், தம்மை, கரந்து, சுவை, உள்ளார், அவன், பார்வதி, அல்லராய், பாம்பு, தோன்றும், பரந்திருக்கும், கொண்டு, சிவபெருமான், பூதத்தின், பொலிந்த, பொருளர், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், நான்காம், தேவாரப், பாம்பாகிய, உடையவராய், வீழிமிழலையில், பாகும், வேதத்தின், கழுத்தினராய், அணிந்தவராய், பொருந்திய, காலை