நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.063.திருவண்ணாமலை

4.063.திருவண்ணாமலை
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அருணாசலேசுவரர்.
தேவியார் - உண்ணாமுலையம்மை.
609 | ஓதிமா மலர்கள் தூவி சோதியே துளங்கு மெண்டோட் ஆதியே யமரர் கோவே நீதியா னின்னை யல்லா |
4.063.1 |
பார்வதிபாகனே! மேம்பட்ட சோதியே! கூத்தினிடத்தே அசைகின்ற எட்டுத் தோள்களை உடையவனே! மழுப்படையை ஏந்தியவனே! ஆதியே! தேவர்கட்குத்தலைவனே! அழகிய அண்ணாமலையில் இருப்பவனே! உன் திருநாமங்களை ஓதிச் சிறந்த மலர்களை அர்ப்பணித்து முறைப்படி உன்னைத் தியானிப்பதனைத் தவிர மற்றும் பொருள்களை ஊன்றிநினையேன்.
610 | பண்டனை வென்ற வின்சொற் கண்டனே கார்கொள் கொன்றைக் அண்டனே யமரர் கோவே தொண்டனே னுன்னை யல்லாற் |
4.063.2 |
பண்ணை வென்ற இனிய சொல்லையுடைய பார்வதிபாகனே! நீலகண்டனே! கார்காலத்தில் மலரும் கொன்றைப் பூவை அணிந்த கடவுளே! தாமரை போன்ற திருவடிகளை உடையவனே! தேவனே! தேவர்கள் தலைவனே! அழகிய அண்ணா மலையில் உள்ளவனே! அடியவனாகிய யான் உன்னைத் தவிரப் பிறரை உயர்த்திச் சொல்லும் சொற்களைச் சொல்லுவேன் அல்லேன்.
611 | உருவமு முயிரு மாகி பெருவினை பிறப்பு வீடாய் அருவிபொன் சொரியு மண்ணா மருவிநின் பாத மல்லான் |
4.063.3 |
சடமாகிய மாயையாகவும், சித்தாகிய ஆன்மாக்களாகவும் ஆகியவனாய், குறிப்பிடப்படும் உயிர்களுக்கெல்லாம் மூல கருமமும் பிறப்பும் பிறப்பிலிருந்து விடுதலையுமாய் நின்ற எம் பெருமானே! நீர் மிகுந்த அருவிகள் பொன்னைச் சொரியும் அழகிய அண்ணாமலையில் உள்ளதேவர் தலைவனே! உன் திருவடிகளைப் பொருந்தி அவற்றைத் தவிர வேறு செல்வம் இல்லாதேன் ஆவேன்.
612 | பைம்பொனே பவளக் குன்றே செம்பொனே மலர்செய் பாதா அம்பொனே கொழித்து வீழு என்பொனே யுன்னை யல்லா |
4.063.4 |
பசிய பொன்னே! பவளமலையே! மேம்பட்டவனே! பால்போன்ற வெண்ணிய நீற்றை அணிந்தவனே! செம்பொன்னே! மலர் போன்ற திருவடிகளை உடையவனே! சிறப்பு மிக்கமாணிக்கமும் மேம்பட்ட அழகிய பொன்னும் அருவிகளால் கொழித்து ஒதுக்கப்படும் அழகிய அண்ணாமலையில் உள்ள அடியேனுடைய பொன் போன்ற அரியவனே! உன்னைத்தவிர அடியேன் உள்ளத்தில் வேற்றுப்பொருள் யாதனையும் நினைக்கின்றேன் அல்லேன்.
613 | பிறையணி முடியி னானே மறைவலா விறைவா வண்டார் அறைகழ லமர ரேத்து இறைவனே யுன்னை யல்லால் |
4.063.5 |
பிறையைச் சூடிய சடைமுடியை உடையவனே! தலைக்கோலம் அணிந்தவனே! பார்வதிபாகனே! வேதங்களில் வல்லவனே! தலைவனே! வண்டுகள் பொருந்திய கொன்றைமலரைச் சூடியவனே! வாமதேவனே! ஒலிக்கும் கழலணிந்த திருவடிகளைத் தேவர்கள் போற்றும் அழகிய அண்ணாமலையில் உறைபவனே! அடியேன் உளத்தில் தங்கியிருப்பவனே! உன்னைத்தவிர அடியேன் வேறு எந்தப் பொருளையும் விருப்புற்று உறுதியாக நினைப்பேன் அல்லேன்.
614 | புரிசடை முடியின் மேலோர் கரியுரி போர்வை யாகக் அரிகுல மலிந்தவண்ணா வரிமிகு வண்டுபண்செய் |
4.063.6 |
முறுக்குண்ட சடையின் மீது அலைகள்மோதும் நீரை உடைய கங்கையை வைத்து. யானைத் தோலைமேற் போர்வையாகக் கொண்டவனாய்க் காலனுக்கும் காலனானவனே! குரங்குக் கூட்டங்கள் மிக்க அண்ணாமலையில் உறைவோனே! மலரினும் மேற்பட்ட, கோடுகளை உடைய வண்டுகள் பண்பாடும் உன் திருவடிகளை அடியேன் மறத்தலைச் செய்யேன்.
615 | இரவியு மதியும் விண்ணு உரகமார் பவன மெட்டுந் அரவுமிழ் மணிகொள்சோதி பரவுநின் பாதமல்லாற் |
4.063.7 |
பரமனே! சூரியன், சந்திரன், வானம், பூமி, நீர் காற்று, பாம்புகள் தங்கும் பாதலம், எண் திசைகள் இவற்றிலே ஒளி உருவமாக இருப்பவனே! பாம்புகள் உமிழ்கின்ற இரத்தினங்களால் ஒளிவீசும் அழகிய அண்ணாமலைப் பெருமானே! அடியேன் முன் நின்று போற்றும் உன் திருவடிகளைத் தவிர அடியேன் வேறு பற்றுக்கோடு உடையேன் அல்லேன்.
616 | பார்த்தனுக் கன்று நல்கிப் நீர்த்ததும் புலாவு கங்கை ஆர்த்துவந் தீண்டு கொண்ட தீர்த்தனே நின்றன் பாதத் |
4.063.8 |
அருச்சுனனுக்கு அக்காலத்தில் விரும்பிப் பாசுபதப் படையை நல்கியவனே! நீர் ததும்புதல் மிகுங் கங்கையை நீண்ட சடையில் தங்குமாறு வைத்தவனே! ஆரவாரித்துக் கொண்டு ஒன்று சேரும் மேகங்கள் தங்கும் அழகிய அண்ணாமலைப் பெருமானே! தூயோனே! உன்பாதங்களின் தொடர்பன்றி அடியேன் வேறு தொடர்பு இல்லேன்.
617 | பாலுநெய் முதலா மிக்க மாலுநான் முகனுங் கூடிக் ஆலுநீர் கொண்டல் பூக வாலுடை விடையா யுன்றன் |
4.063.9 |
பசுவின் பஞ்சகவ்வியத்தில் நீராடுபவனே! திருமாலும் பிரமனும் ஒன்று சேர்ந்து முயன்றும் காண இயலாத வகையில் தீத்தம்பமாய் நின்றவனே! நீரை ஏந்திய மேகங்கள் வரையில் அசைகின்ற உச்சியை உடைய பாக்குமரங்கள் அழகு செய்யும் அண்ணாமலையில் உள்ளவனே! வெண்மையை உடைய காளைவாகனனே! உன்னுடைய மலர் போன்ற பாதங்களை அடியேன் மறவேன்.
618 | இரக்கமொன் றியாது மில்லாக் உரத்தினால் வரையை யூக்க அரக்கனை நெரித்த வண்ணா சிரத்தினால் வணங்கி யேத்தித் |
4.063.10 |
இரக்கம் என்பது சிறிதும் இல்லாத கூற்றுவனைத் தண்டித்த பெருமானே! இராவணன் தன் வலிமையால் கயிலை மலையைப் பெயர்க்க, ஒரு விரல் நுனியினாலே அவனை நெரித்த அண்ணாமலைத் தேவர் தலைவனே! உன்னை அடியேன் தலையால் வணங்கி வாயால் துதித்து மனத்தால் உன் திருவடிகளை மறவாதேனாய் உள்ளேன்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.063.திருவண்ணாமலை , அடியேன், அழகிய, அண்ணாமலையில், திருவடிகளை, தலைவனே, பெருமானே, உடைய, வேறு, உடையவனே, அல்லேன், நீர், தவிர, லேனே, திருவண்ணாமலை, திருமுறை, பார்வதிபாகனே, நீரை, போற்றும், தேவாரப், வண்டுகள், திருவடிகளைத், நான்காம், தங்கும், மறப்பிலேனே, நெரித்த, வணங்கி, மேகங்கள், ஒன்று, பாம்புகள், உன்னைத்தவிர, அண்ணாமலைப், கங்கையை, யுன்னை, வென்ற, நீலகண்டனே, யமரர், உன்னைத், இருப்பவனே, மேம்பட்ட, கோவேயணியணா, தேவர்கள், திருச்சிற்றம்பலம், னினைவிலேனே, அணிந்தவனே, அசைகின்ற, கொழித்து, உள்ளவனே, பதிகங்கள், மலர்