நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.062.திருவாலவாய்

4.062.திருவாலவாய்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. இதுவே மதுரை.
சுவாமிபெயர் - சொக்கநாதசுவாமி.
தேவியார் - மீனாட்சியம்மை.
599 | வேதியா வேத கீதா றோதியே மலர்கள் தூவி பாதியோர் பெண்ணை வைத்தாய் ஆதியே யால வாயில் |
4.062.1 |
மறைமுதல்வனே! மறைகளைப் பாடுகின்றவனே! தேவர்கள் தலைவனே! பார்வதிபாகனே! பரவிய சடையிற் பிறையைச் சூடும் ஆதிப்பெருமானே! திருஆலவாயிலுள்ள அப்பனே! உன்திரு நாமங்களைப் பலகாலும் ஓதி மலர்கள் தூவி ஒருவழிப்பட்ட மனத்தோடு உன்திருவடிகளை அடியேன் காணுமாறு அருள் செய்வாயாக.
600 | நம்பனே நான்மு கத்தாய் என்பொனே யீசா வென்றென் பின்பினே திரிந்து நாயேன் அன்பனே யால வாயில் |
4.062.2 |
எல்லோராலும் விரும்பப்படுபவனே! நான்கு முகங்களை உடையவனே! தலைவனே! ஞான வடிவினனே! என் பொன் போன்றவனே! எல்லோரையும் ஆள்பவனே! அன்பனே! ஆலவாயில் அப்பனே! உன்னைப் பலகாலும் துதித்து அடியேன் மனத்திரிபுகளை நீக்கி, பொறிபுலன்களின் வழியேசென்று பிறவாத வண்ணம் நாயேனுக்கு அருள் செய்வாயாக.
601 | ஒருமருந் தாகி யுள்ளா பெருமருந் தாகி நின்றாய் கருமருந் தாகி யுள்ளா அருமருந் தால வாயில் |
4.062.3 |
ஒப்பற்ற தேவாமிருதமாய் உள்ளவனே! தேவர்களுக்கும் மக்களுக்கும் தலையான மருந்தாக உள்ளவனே! சிறந்த அமுதின் சுவையாய்ப் பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தாகி உள்ளவனே! எங்கள் வலிய வினைகளைப் போக்கி எங்களை அடிமை கொள்ளும் அருமருந்தாய் ஆலவாயில் உறையும் தலைவனே! அருள் செய்வாயாக.
602 | செய்யநின் கமல பாதஞ் மையணி கண்டத் தானே சைவனே சால ஞானங் ஐயனே யால வாயில் |
4.062.4 |
தேவர்தேவனே! நீலகண்டனே! மான்மறியையும் மழுப்படையையும் ஏந்தியுள்ளவனாய சைவ சமயக்கடவுளே! ஞானத்தை முறையாகக் கற்றறியும் வாய்ப்பு இல்லாத அடியேனுடைய தலைவனே! ஆலவாயில் உறையும் அப்பனே! உன்னுடைய சிவந்த தாமரை போன்ற பாதங்களை அடியேன் சேரும்படி மிகவும் அருள் செய்வாயாக.
603 | வெண்டலை கையி லேந்தி உண்டது மில்லை சொல்லி பண்டுனை நினைய மாட்டாப் அண்டனே யால வாயில் |
4.062.5 |
உலகத் தலைவனே! ஆலவாய் அப்பனே! வெள்ளிய மண்டையோட்டைக் கையில் ஏந்தி மிகவும் ஊர்களில் பிச்சையெடுத்தும் அப்பிச்சை உணவை உண்ணாது விடம் ஒன்றையே உண்டவன் என்று சொல்லப் படும் உன்னை அடியேன் வாழ்வின் முற்பகுதியில் விருப்புற்று நினைக்காத குற்றத்தினேன். அத்தகைய அடியேனுடைய உள்ளம் நிறையும்படி அருள்செய்வாயாக.
604 | எஞ்சலில் புகலி தென்றென் வஞ்சக மொன்று மின்றி நஞ்சினை மிடற்றில் வைத்த கஞ்சலென் றால வாயில் |
4.062.6 |
விடத்தைக் கழுத்தில் அடக்கிய, சிவம் என்ற சொற் பொருளானவனே! ஆலவாயில் அப்பனே! என்றும் அழிவில்லாத அடைக்கலமாகும் இடம் என்று புகழ்ந்து நான் மகிழ்ந்து என்றும் வஞ்சனையின்றி உன் மலர் போன்ற திருவடிகளைத் தரிசிக்கும் வண்ணம் நாயேனுக்கு அஞ்சாதே என்று அருள் செய்வாயாக.
605 | வழுவிலா துன்னை வாழ்த்தி செழுமலர்ப் பாதங் காணத் குழகனே கோல வில்லீ அழகனே யால வாயில் |
4.062.7 |
தௌளிய அலையில் தோன்றிய விடத்தை உண்ட இளையோனே! அழகிய வில்லை ஏந்தியவனே! கூத்தனே! மாற்றுயர்ந்த தங்கம் போன்றுள்ள அழகனே! ஆலவாயில் பெருமானே! குறைபாடில்லாமல் உன்னை வாழ்த்தி வழிபடும் அடியவனாகிய யான் உன்னுடைய செழித்த மலர்போன்ற திருவடிகளைத் தரிசிக்குமாறு அருள்செய்வாயாக.
606 | நறுமலர் நீருங் கொண்டு செறிவன சித்தம் வைத்துத் மறிகடல் வண்ணன் பாகா அறிவனே யால வாயில் |
4.062.8 |
கடல் நிறத்தவனான திருமாலை உடலின் ஒரு பாகமாக உடையவனே! மேம்பட்ட வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அறிபவனே! ஆலவாயில் அப்பனே! நறியமலர்களையும் தீர்த்தங்களையும் கொண்டு நாள்தோறும் புகழ்ந்து வாழ்த்தித் திருவடிகளைச் செறிதற்குரிய வழிகளை உள்ளத்துக் கொண்டு உன் திருவடிகளை அடியேன் சேரும் வண்ணம் அருள் செய்வாயாக.
607 | நலந்திகழ் வாயி னூலாற் சிலந்தியை யரச தாள கலந்துடன் வந்து நின்றாள் அலந்தன னால வாயில் |
4.062.9 |
நன்மைகள் விளங்குதற்குக் காரணமான தன்வாயினால் நூற்கப்பட்ட நூலினாலே சருகான இலைகள் விழுந்து தங்கி நிழல் தரும் பந்தலாக அமைத்த சிலந்தியை மறுபிறப்பில் அரசாளும் மன்னனாகப் பிறக்குமாறு அருள்செய்தாய் என்று உள்ளத்திலே உட்கொண்டு வந்து உன் திருவடிகளைக் காணவருந்தும் அடியேன் காணுமாறு ஆலவாயில் அப்பனாகிய நீ அருள்செய்வாயாக.
608 | பொடிக்கொடு பூசிப் பொல்லாக் பிடித்துநின் றாள்க ளென்றும் எடுப்பனென் றிலங்கைக்கோன்வந் அடர்த்தனே யால வாயி |
4.062.10 |
திருநீற்றைப் பூசி அழகில்லாத இந்த உடலிலே மனம் ஒரு வழிப்பட்டு உன் திருவடிகளைப் பற்றி என்றும் அவற்றின் பெருமையை அடைவுகேடாகப் பேசிய வண்ணம் காலம் போக்க இயலாதேனாய் உள்ளேன். கயிலையைப் பெயர்ப்பேன் என்று கருதி இராவணன் வந்து அம்மலையை எடுக்க முயன்ற அளவில் அவனுடைய இருபது தோள்களையும் வருத்திய ஆலவாயில் பெருமானே! அடியேனுக்கு அருள்செய்வாயாக.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.062.திருவாலவாய் , யாயே, வாயில்அப்பனேயருள்செ, ஆலவாயில், அருள், அடியேன், அப்பனே, செய்வாயாக, தலைவனே, அருள்செய்வாயாக, வண்ணம், உள்ளவனே, தாகி, திருமுறை, என்றும், திருவாலவாய், வந்து, கொண்டு, மிகவும், உன்னை, பெருமானே, புகழ்ந்து, திருவடிகளைத், உன்னுடைய, உடையவனே, திருச்சிற்றம்பலம், பதிகங்கள், தேவாரப், நான்காம், மலர்கள், பலகாலும், உறையும், நாயேனுக்கு, காணுமாறு, அடியேனுடைய