நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.061.திருஇராமேச்சுரம்

4.061.திருஇராமேச்சுரம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - இராமநாதேசுவரர்.
தேவியார் - பர்வதவர்த்தனி.
588 | பாசமுங் கழிக்க கில்லா வாசமிக் கலர்கள் கொண்டு நேசமிக் கன்பி னாலே தேசமிக் கானி ருந்த |
4.061.1 |
நீக்க வேண்டிய பாசத்தை நீக்கும் ஆற்றல் இல்லாத அரக்கர்களை அழித்து மேம்பட்ட சிவஞானத்தால் இராமனாய் அவதரித்த திருமால் அமைத்த கோயிலிலே ஒளிமிக்க சிவபெருமான் உகந்தருளியிருக்கும் திரு இராமேச்சுரத்தை வாசனை மிக்க பூக்களை அர்ப்பணித்து நாள்தோறும் நிலையாகப்பற்றுமிகுந்த அன்போடு எல்லீரும் விருப்புற்று நினையுங்கள்.
589 | முற்றின நாள்க ளென்று உற்றவன் போர்க ளாலே செற்றமால் செய்த கோயி பற்றிநீ பரவு நெஞ்சே |
4.061.2 |
நெஞ்சே! அரக்கர்கள் உயிர்வாழ்வதற்கு வகுத்த நாள்கள் முடிந்து விட்டதனால் அவர்களை அழிப்பதனையே காரணமாகக் கொண்டு ஏற்பட்ட வலியபோரினால் மெய்யுணர்வு இல்லாத அரக்கர்களை அழித்த இராமன் ஆகிய திருமால் அமைத்த இராமேச்சுரத்தை உகந்தருளியிருக்கும், பரவிய சடையை உடைய சிவபெருமானிடத்துப் பற்றினைக் கொண்டு நீ முன் நின்று போற்றுவாயாக.
590 | கடலிடை மலைக டம்மா திடலிடைச் செய்த கோயிற் தொடலிடை வைத்து நாவிற் உடலிடை நின்றும் பேரா |
4.061.3 |
கடலிடத்தை மலைகளால் அடைத்துத் திருமால் தம் செயலை முடித்துப் பின் கடலை அடுத்த மேட்டில் செய்த இராமேச்சுரத்தை, இவ்வுடம்பினின்றும் நீங்காத ஐம்பொறிகளால் தம் விருப்பப்படி செயற்படுத்தப்பட்டு தூய்மையின்றி, நாவிடைவைத்துப் போற்று தலைச் செய்து தடுமாறுகின்றேன். (நாவில் தொடல் இடை - வாக்கு.)
591 | குன்றுபோற் றோளு டைய கொன்றுபோ ராழி யம்மால் நன்றுபோ னெஞ்ச மேநீ சென்றுநீ தொழுதுய் கண்டாய் |
4.061.4 |
நெஞ்சமே! நீ நன்மையை அறிவாயானால் மலைகளைப்போன்ற தோள்களையுடைய நற்பண்பு இல்லாத அரக்கர்களைக் கொன்று போரிடும் சக்கராயுதத்தை உடைய திருமால் விருப்பத்தோடு அமைத்த இராமேச்சுரக் கோயிலை, சென்று தொழுது கடைத்தேறுவாயாக. அறியாயாயின் நின் நிலை நன்றல்ல. (நன்று போல்).
592 | வீரமிக் கெயிறு காட்டி கூரமிக் கவனைச் சென்று தீரமிக் கானி ருந்த கோரமிக் கார்த வத்தாற் |
4.061.5 |
கடலைச் சேது கட்டித்தடுத்து, வீரம் மேம்பட்டுக் கோரைப் பற்களை வெளியே காட்டிக் கொண்டு வானளாவ உயர்ந்த கொடுமைமிக்க அரக்கனாகிய இராவணனை இலங்கைக்குச் சென்று அங்கே கொன்று, மீண்டு பேராற்றலுடைய திருமால் கோயில் செய்து வழிபட்டிருந்த இராமேச்சுரத்தை, அஞ்சத்தகும் பான்மையுள்ள தீவிர சாதனைகளால் சென்றடைவார் தம் குறிக்கோள் நிரம்பப் பெறுவர்.
593 | ஆர்வல நம்மின் மிக்கா போர்வலஞ் செய்து மிக்குப் தேர்வலஞ் செற்ற மால்செய் சேர்மட நெஞ்ச மேநீ |
4.061.6 |
மட நெஞ்சமே! 'நம்மை விட வலிமை மிக்கவர்யாவர்' என்று செருக்குற்ற அவ்வரக்கர்கள் ஒன்று கூடிப் போரிலே வெற்றியைக் கருதி வலிமைமிக்குப் போரிட்டாராக, அவர்களை அழித்து அவர்களுடைய தேர்ப்படையின் வலிமையையும் போக்கிய திருமால் அமைத்த இராமேச்சுரத்தை அணுகிச் செஞ்சடைப் பெருமான்பால் அடைவாயாக.
594 | வாக்கினா லின்பு ரைத்து போக்கினாற் புடைத்த வர்கள் தேக்குநீர் செய்த கோயி நோக்கினால் வணங்கு வார்க |
4.061.7 |
இனிமையாகப் பேசுதற்கு அமைந்த வாயாலே இனிய சொற்களைப் பேசி வாழாத அரக்கர்களை அழிக்கத்தக்க படைகளால் தாக்கி அவர்கள் உயிரை உண்டு திருமால் கடல் நீரைத் தேக்கிய அணையின் கரையில் அமைத்த கோயிலாகிய இராமேச்சுரத்தை அகநோக்கிலும் புறநோக்கிலும் கண்டு தரிசித்துத் தலையால் வணங்குபவருடைய நோய்களும் வினைகளும் அழிந்துவிடும்.
595 | பலவுநா டீமை செய்து கொலைவிலார் கொடிய ராய சிலையினான் செய்த கோயி தலையினால் வணங்கு வார்கள் |
4.061.8 |
பலகாலமாக இவ்வுலகில் கூட்டமாகத் தோன்றித் தீமைகளையே செய்து கொல்லும் வில்லை ஏந்திய கொடியவர்களான அரக்கர்களைக் கொன்று வீழ்த்திய வில்லை ஏந்திய திருமால் அமைத்த இராமேச்சுரக் கோயிலைத் தலையினால் வணங்கும் அடியவர்கள் பின் உடம்பாலும் முழுமையாக விழுந்து வணங்குவார்கள். அச்செயல் தவப் பயனால் நிகழ்வதாகும்.
596 | கோடிமா தவங்கள் செய்து வீடவே சக்க ரத்தா தேடிமால் செய்த கோயி நாடிவாழ் நெஞ்ச மேநீ |
4.061.9 |
நெஞ்சே! பல ஆண்டுகள் சிறந்த தவத்தைச் செய்து, ஒழுக்கக் கேடு உள்ள அரக்கர்களை எல்லாம் அவர்கள் அழியுமாறு சக்கரம் முதலிய படைகளால் அழித்துப் பின்தக்க இடத்தைத் தேடித் திருமால் அமைத்த இராமேச்சுரத்தை நீ விரும்பிச் சென்று வாழ்தி. அதுவே உனக்கு நன்னெறியாம்.
597 | வன்கண்ணர் வாள ரக்கர் புன்கண்ண ராகி நின்று செங்கண்மால் செய்த கோயி தங்கணா லெய்த வல்லார் |
4.061.10 |
அகத்தில் உள்ள வன்மையைப் புறத்தில் காட்டும் கண்களை உடைய கொடிய அரக்கர்கள் வாழும் செயலை அறியாராய்த் துன்புறுத்தும் இயல்பினராய் நின்று போர்களைச் செய்ய, அவரை அழித்துச் சிவந்த கண்களை உடைய திருமால் அமைத்த இராமேச்சுரக் கோயிலைத் தம் கண்ணால் தரிசிக்கும் நற்பேறு உடையவர்கள் சிவபெருமான் பக்கலிலேயே தங்கும் வாய்ப்பினைப் பெறுவர்.
598 | வரைகளொத் தேயு யர்ந்த விரையமுற் றறவொ டுக்கி திரைகள்முத் தால்வ ணங்குந் உரைகள்பத் தாலு ரைப்பா |
4.061.11 |
மலைகளை ஒத்து உயர்ந்த, மணிகள் வைத்து இழைக்கப்பட்ட கிரீடங்களை உடைய அரக்கர் தலைவனான இராவணனை விரைவாக அடியோடு அழித்துத் தமிழகம் திரும்பித் திருமால் செய்த கோயிலாய் அலைகள் முத்துக்களைச் சமர்ப்பித்து வணங்கும் திரு இராமேச்சுரத்தை முன்னைய இப்பத்துப் பாடல்களாலும் போற்றுபவர்கள் அன்பினாலே தியானித்து நற்பேறு பெறுபவராவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.061.திருஇராமேச்சுரம் , திருமால், செய்த, அமைத்த, இராமேச்சுரத்தை, கோயிறிருவிரா, செய்து, உடைய, அரக்கர்களை, திருமுறை, கொண்டு, சென்று, இராமேச்சுரக், திருஇராமேச்சுரம், கொன்று, இல்லாத, பெறுவர், நெஞ்ச, உயர்ந்த, வணங்கு, இராவணனை, கொடிய, வணங்கும், உள்ள, கண்களை, நற்பேறு, கோயிலைத், ஏந்திய, படைகளால், அரக்கர்களைக், வில்லை, மன்றே, செயலை, உகந்தருளியிருக்கும், திரு, பதிகங்கள், சிவபெருமான், திருச்சிற்றம்பலம், மேச்சுரம்மே, அழித்து, கானி, தேவாரப், பாலே, ருந்ததிருவிரா, பின், நான்காம், வைத்து, நின்று, நெஞ்சே, அரக்கர்கள், அவர்களை, நெஞ்சமே