நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.023.கோயில்

4.023.கோயில்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர்.
தேவியார் - சிவகாமியம்மை.
229 | பத்தனாய்ப் பாட மாட்டேன் எத்தினாற் பத்தி செய்கே முத்தனே முதல்வா தில்லை அத்தாவுன் னாடல் காண்பா |
4.023.1 |
அநாதியான வினையின் நீங்கியவனே! எல்லாருக்கும் முற்பட்டவனே! தில்லை அம்பலத்தே ஆடுகின்ற தலைவனே! மேம்பட்டவனே! மேம்பட்ட யோகியே! அடியேன் பத்தனாய்ப் பாடும் ஆற்றல் இல்லேன். யாதனால் அடியேன் பத்தி செய்வேன்? அடியேனை நீ இகழவேண்டா. அடியேன் உன் ஆடலைக் காணத் தில்லை வந்துள்ளேன்.
230 | கருத்தனாய்ப் பாட மாட்டேன் ஒருத்தரா லறிய வொண்ணாத் திருத்தமாந் தில்லை தன்னுட் நிருத்தநான் காண வேண்டி |
4.023.2 |
மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி பாகனே! ஒருவராலும் அறியமுடியாத அழகிய ஒளிவடிவு உடையவனே! பரிசுத்தமாயுள்ள தில்லையிலே விளங்குகின்ற சிற்றம்பலத்தில் உன் திருக்கூத்தைக் காணவேண்டி உன்னை உள்ளத்தில் இருத்தி கருத்தொன்றிப் பாடமாட்டாதேனாகிய அடியேன் வந்துள்ளேன்.
231 | கோட்டிலேன் கிளைபி ரியேன் நாட்டினே னின்றன் பாதம் மாட்டினீர் வாளை பாயு கூட்டமாங் குவிமு லையாள் |
4.023.3 |
அடியேன் இதற்குமுன் உன் பெருமையை உள்ளவாறு கேட்டறியேன். இப்பொழுது உன் அடியார்குழாத்தைப் பிரியாமல் உன் பெருமையைக் கேட்குமாறு கேட்பித்தருளி உதவுவாயானால், நீர் நிலைகளில் வாளை மீன்கள் பாயும் வளம் மிகுஞ் சிற்றம்பலத்திலே உன்னோடு கூடியிருக்கும் குவிந்த தனங்களை உடைய பார்வதியோடு கூட நீ ஆடுமாற்றால் (ஆடுதலின் பேறாக) உன் திருவடிகளை நெஞ்சின் நடுவிலே உறுதியாக நிலை நிறுத்தினேன் ஆவேன்.
232 | சிந்தையைத் திகைப்பி யாதே எந்தைநீ யருளிச் செய்யா செந்தியார் வேள்வி யோவாத் அந்தியும் பகலு மாட |
4.023.4 |
சிவந்த தீயை ஓம்பும் அந்தணர்களுடைய வேள்விச் செயல்கள் நீங்காத தில்லைச் சிற்றம்பலத்தே அந்தியும் பகலும் நீ கூத்து நிகழ்த்துதலால் உன் திருவடிகள் சோர்வு அடையும்போலும். அடியேன் உள்ளத்தை உலகப் பொருள் நுகர்ச்சியிலிருந்து மாறுபடும் படியாகச் செய்யாமலும் உன்னை அணுகிச் செய்யும் அடிமைத் திறத்தை அடியேனுக்கு அருள் செய்யாமலும் உள்ளாய். இனி அடியேன் செயற்பாலது யாது உள்ளது?
233 | கண்டவா திரிந்து நாளுங் கொண்டிருந் தாடிப் பாடிக் வண்டுபண் பாடுஞ் சோலை எண்டிசை யோரு மேத்த |
4.023.5 |
அடியேன் அனுபவத்தில் கண்டவாறு ஞான நிலைக்குப் பொருந்தியவண்ணம் உலகியலுக்கு மாறுபட்டு உள்ளத்தில் நின் திருவடிகளை நிலையாகக் கொண்டு ஆடிப்பாடி உன் திருவருட் குறிப்பினாலேயே, வண்டுகள் பண்களைப்பாடும் சோலைகள் மிகுந்த சிற்றம்பலத்திலே எட்டுத் திசைகளில் உள்ளவர்களும் துதிக்குமாறு இறைவனாகிய நீ ஆடும் கூத்தினைக் காண்பதற்கு வந்து சேருவேன்.
234 | பார்த்திருந் தடியனே னான் மூர்த்தியே னென்ப னுன்னை ஏத்துவா ரிடர்க டீர்ப்பாய் கூத்தாவுன் கூத்துக் காண்பான் |
4.023.6 |
வழிபடும் அடியவர்களுடைய துயரங்களைத் தீர்ப்பவனே! தில்லைச் சிற்றம்பலத்தில் உள்ள கூத்தனே! உன் கூத்தினைப் பார்த்து இருந்து உன்னை முன்னின்று துதிப்பேன். ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும் உன்னை மூவரினும் முதல்வனாகிய மூர்த்தியே என்று அழைப்பேன். உன் கூத்தினைக் காண்பதற்கு அடியவருடன் நான் வந்தவாறு இதுவாம்.
235 | பொய்யினைத் தவிர விட்டுப் ஐயநீ யருளிச் செய்யா வையகந் தன்னின் மிக்க பையநுன் னாடல் காண்பான் |
4.023.7 |
அழியும் பொருள்களிலுள்ள பற்றினை நீங்குமாறு விடுத்து அகத்தடிமையாகிய மெய்யடிமையைச் செய்ய, என் தலைவனே! எல்லோர்க்கும் ஆதியாய முதல் தெய்வமே! நீ அருள் செய்வாயாக. இவ்வுலகிலே மேம்பட்ட மிகுஞ் சிதம்பரத்தில் உன் கூத்தினை சற்றே காண அடியேன் வந்தவாறு இதுவாம்.
236 | மனத்தினார் திகைத்து நாளு கனைப்பரா லென்செய் கேனோ தினைத்தனை வேதங் குன்றாத் அனைத்துநின் னிலயங் காண்பா |
4.023.8 |
விடக்கறையை அணிந்த நீலகண்டனே! அடியேனுடைய மனம் நிலைகொள்ளாமல் தடுமாறி நாள்தோறும் பெருமை தாராத வழிகளிலே செருக்கித் திரிகின்றது. அடியேன் யாது செய்வேன். வேதங்களை ஓதுந்திறஞ் சிறிதளவுங் குறைவுபடாத தில்லைச் சிற்றம்பலத்தில் உன் இருப்பிடத்தைத் தரிசிப்பதற்கு அடியேன் வந்தவாறு இதுவாம்.
237 | நெஞ்சினைத் தூய்மை செய்து வஞ்சமே செய்தி யாலோ மஞ்சடை சோலைத் தில்லை அஞ்செலாள் காண நின்று |
4.023.9 |
தேவர்கள் தலைவனே! அடியேனுடைய நெஞ்சினைத் தூய்மை செய்து உன்னை எப்பொழுதும் அடியேன் நினைக்குமாறு திருவுள்ளம் பற்றாமல் வஞ்சனை செய்கின்றாயே. மேகங்கள் தங்குதற்கு வந்து சேரும் உயரமான சோலைகளையுடைய தில்லையம்பதியிற் சிதம்பரத்திலே அழகிய சொற்களையுடைய பார்வதிக்கான நீ ஆடும் திறம் இருந்தவாறு என்னே!
238 | மண்ணுண்ட மால வனு விண்ணுண்ட திருவு ருவம் திண்ணுண்ட திருவே மிக்க பண்ணுண்ட பாட லோடும் |
4.023.10 |
பூமியை உண்ட திருமாலும், மலர்மேலுறையும் பிரமனும் விண்ணளவும் ஒளிநிறைந்த உன் திருவுருவைக் காணும் வேட்கையராயிருந்துமே, தானாக நிலைத்துத் திணிந்திருக்கும் சிவத்திரு மேம்பட்ட தில்லைச் சிற்றம்பலத்தின் கண்ணே பண்ணுக்கு அமைந்த பாடல் ஒலிகளின் இடையே பரம்பொருளாகிய நீ வெளிப்படையாக ஆடுமாற்றை - அதன் மாண்பை (இன்னும்) காணமாட்டாராகின்றனர். (அவர் விதி இருந்தவாறென்னே!)
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.023.கோயில் , அடியேன், றம்ப, வாறே, வந்த, உன்னை, தில்லைச், மேம்பட்ட, தலைவனே, திருமுறை, சிற்றம்பலத்தில், வந்தவாறு, தில்லை, யாடு, மாறே, இதுவாம், கோயில், திருவடிகளை, யருளிச், அருள், செய்யாமலும், காண்பதற்கு, அடியேனுடைய, நெஞ்சினைத், தூய்மை, வந்து, சிற்றம்பலத்திலே, ஆடும், கூத்தினைக், யாது, னின்றன், பதிகங்கள், தேவாரப், காண்பானடியனேன், னாடல், பத்தனாய்ப், பத்தி, செய்வேன், வந்துள்ளேன், திருச்சிற்றம்பலம், வாளை, உள்ளத்தில், அழகிய, நான்காம், உடைய, மிகுஞ்