நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.024.திருவதிகைவீரட்டானம்

4.024.திருவதிகைவீரட்டானம்
கொப்பளித்த திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
கொப்பளித்த திருநேரிசை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர்.
தேவியார் - திருவதிகைநாயகி.
239 | இரும்புகொப் பளித்த யானை கரும்புகொப் பளித்த வின்சொற் சுரும்புகொப் பளித்த கங்கைத் அரும்புகொப் பளித்த சென்னி |
4.024.1 |
கரும்பின் இனிமை மிகும் சொற்களை உடைய பார்வதியின் பாகராய், வண்டுகள் தேனை மிகுதியாக உண்டு கொப்பளிக்கும் பூவினை அணிந்த கங்கையாளாகிய நீர் வடிவைச் சடையில் ஏற்றவராய், அரும்புகள் தேனை மிகுதியாக வெளிப்படுத்தும் சென்னியை உடைய அதிகை வீரட்டனார், இரும்பின் நிறத்தைக் கொப்பளித்து விட்டாற்போன்ற செறிவான கருமையுள்ள யானையின் ஈரப்பசுமை கெடாத தோலைப் போர்த்த ஈசனாவார்.
240 | கொம்புகொப் பளித்த திங்கட் வம்புகொப் பளித்த கொன்றை செம்புகொப் பளித்த மூன்று அம்புகொப் பளிக்க வெய்தா |
4.024.2 |
கொம்பின் கூர்மை அதிகரித்த கூரிய வளைந்த வெண் பிறையைச் சூடி, அதன்மேலும் நறுமணம் அதிகரித்த கொன்றை மலரை வளரும் சடையில் அணிந்து, செம்பு மயமான உறுதியான மும்மதில்களும் அழியுமாறு வில்லை வளைத்து அம்பின் விறல் அதிகரிக்குமாறு புரங்களை எய்தவர் அதிகை வீரட்டனாரே.
241 | விடையுங்கொப் பளித்த பாதம் சடையுங்கொப் பளித்த திங்கட் உடையுங்கொப் பளித்த நாக அடையுங்கொப் பளித்த சீரா |
4.024.3 |
இடபத்தில் தழும்பேற்றும் தம் திருவடிகளைத் தேவர்கள் பாடித் துதிக்க சடைக்கு ஒளி ததும்ப வைக்கும் சந்திரனின் நிலவு போன்ற வெண்ணீற்றைச் சாந்தமாகப் பூசி உடைமேல் பல்கித் தோன்றும் நாகங்களைக் கட்டியிருக்கும் திருவடிவை தியானிப்பவரது உள்ளத்தில் நீங்காது சேர்ந்திருந்திருப்பவர் அதிகை வீரட்டனாரே.
242 | கறையுங்கொப் பளித்த கண்டர் இறையுங்கொப் பளித்த கண்ணா மறையுங்கொப் பளித்த நாவர் அறையுங்கொப் பளித்த சென்னி |
4.024.4 |
விடக்கறை துலக்கமாக விளங்கும் கழுத்தினராய், மன்மதன் வடிவம் அழியுமாறு தீயைச் சிறிது வீசிய நெற்றிக் கண்ணினை உடையவராய், தம்மைத் துதிக்கும் அடியவர் துயர்களைத் தீர்ப்பவராய், வேதம் மிக்குத் தொனிக்கும் நாவினராய், வண்டுகள் தேன் உண்டு பாடப்படுவதும், எல்லோராலும் புகழப்படுவதுமான கொன்றை மலரைச் சூடிய சென்னியராய்க் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார்.
243 | நீறுகொப் பளித்த மார்பர் கூறுகொப் பளித்த கோதைக் ஏறுகொப் பளித்த பாத ஆறுகொப் பளித்த சென்னி |
4.024.5 |
திருநீறு பரந்து விளங்கும் மார்பினராய், ஒளி விளங்கும் மழுப்படையைக் கையில் ஏந்தி, எல்லோரும் புகழும் மாலையும் திரண்டவளைகளும் அணிந்து ஒரு பாகத்தை விளக்கும் பார்வதி சமேதராய், காளையைத் தழும்பேற வைத்த தம் திருவடிகளைத் தேவர்கள் துதிக்குமாறு கங்கை நதி பெருகித்தங்கியிருக்கும் செஞ்சடையை உடையவராய் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார்.
244 | வணங்குகொப் பளித்த பாதம் பிணங்குகொப் பளித்த சென்னிச் சுணங்குகொப் பளித்த கொங்கைச் அணங்குகொப் பளித்த மேனி |
4.024.6 |
வேத மந்திரங்களைச் சொல்லி வணங்குதலை மிகவும் பொருந்திய திருவடிகளைத் தேவர்கள் முன் நின்று போற்றிப் புகழ, ஒன்றோடொன்றுணங்காதவை அதிகம் விளங்கும் சடையினை உடைய பெருமை மிக்க தலைமையாளராய், தேமல் மிகவும் பரவிய கொங்கைகளை உடையவளாய்ச் சுருண்ட கூந்தலை உடைய பார்வதியின் பாகராய், தெய்வத் தன்மையை வெளிப்படுத்தும் திருமேனியை உடையவராய்க் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார்.
245 | சூலங்கொப் பளித்த கையர் நூலுங்கொப் பளித்த மார்பி மாலுங்கொப் பளித்த பாகர் ஆலங்கொப் பளித்த கண்டத் |
4.024.7 |
சூலம் ஒளிமிகுந்து வீசும் கையினராய், ஒளிவீசும் மழுப்படையை சுழற்றிக் கொண்டு, முப்புரிநூல் ஒளிவீசும் மார்பில் நுண்ணிய புள்ளிகளை உடைய பாம்பினை அணிந்து வண்டுகள் பண்பாடும் கொன்றை மலர்களைச் சூடித் திருமால் மகிழ்ந்திருக்கும் பாகத்தை உடையவராய், விடத்தின் சுவட்டினை வெளிப்படுத்தும் நீலகண்டராய்க் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார்.
246 | நாகங்கொப் பளித்த கையர் மேகங்கொப் பளித்த திங்கள் பாகங்கொப் பளித்த மாதர் ஆகங்கொப் பளித்த தோளா |
4.024.8 |
பாம்பு மகிழ்வோடு விளங்கும் கையினராய், நான்கு வேதங்களையும் பாடிக்கொண்டு, மேகம் மிக்குச் செறிந்த வானில் மிளிரும் பிறையை விரிந்த சடைமேலே சூடி, ஒருபாகமாக விளங்கும் உமாதேவி பண்ணோடு பாடக் கூத்தாடுவதற்குத் திருமேனிக்கண் பூரிப்படைந்து விம்முந் தோள்களை உடையவர் அதிகை வீரட்டனார் ஆவர்.
247 | பரவுகொப் பளித்த பாடல் விரவுகொப் பளித்த கங்கை இரவுகொப் பளித்த கண்ட அரவுகொப் பளித்த கைய |
4.024.9 |
துதித்தற்கு ஏற்ற வாழ்த்துக்களைத் துலங்க வெளிப்படுத்தும் பாடல்களைப் பண்ணுடன் பாடி அடியவர்கள் போற்ற, சடைமுடியில் கலந்து தங்குதற்கு மகிழும் கங்கையைத் தம் விரிந்த சடையில் மகிழுமாறு வைத்து, இருள் கம்மிக் கறுத்த நீலகண்டராய், தம்மை வழிபட்டுப் புகழ்பவர்களின் துயரங்களைத் தீர்ப்பவராய், பாம்பு மகிழ்ந்து ஆடும் கையினராய்க் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார்.
248 | தொண்டைகொப் பளித்த செவ்வாய்த் கொண்டைகொப் பளித்த கோதைக் வண்டுகொப் பளித்த தீந்தேன் கெண்டைகொப் பளித்த தெண்ணீர்க் |
4.024.10 |
தொண்டைக்கனி அழகுவீசும் சிவந்தவாய், துடி போன்ற இடை, கடல்போன்ற பரந்த அல்குல்; மயிர் முடிக்கும் விதங்களில் ஒன்றான கொண்டை பிராகாசிக்கும் கூந்தல், திரண்ட வளையல்கள் எனும் இவற்றை உடைய பார்வதிபாகராய், வண்டுகள் உண்டு மிகுதி என்று வெளிப்படுத்திய தேனைக் கோடுகளை உடைய கயல் மீன்கள் பருகத் தாம் பருகுதற்குக் கெண்டை மீன்கள் தாவிவரும் தௌந்த நீரை உடைய கெடில ஆற்றின் கரையிலுள்ள அதிகை வீரட்டத்தை உகந்தருளியிருக்கும் பெருமானாகக் காட்சி வழங்குகிறார்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.024.திருவதிகைவீரட்டானம் , பளித்த, ரட்ட, அதிகை, னாரே, உடைய, வீரட்டனார், விளங்கும், காட்சி, வழங்குகிறார், வண்டுகள், வெளிப்படுத்தும், தேவர்கள், திருமுறை, உண்டு, சடையில், கொன்றை, உடையவராய், திருவதிகைவீரட்டானம், சென்னியதிகைவீ, பரவி, அணிந்து, திருவடிகளைத், தீர்ப்பவராய், பாகத்தை, பாம்பு, விரிந்த, மீன்கள், பாடி, ஒளிவீசும், பெருமை, மிகவும், கையினராய், பாடுங், வெண், போர்த்த, பார்வதியின், திருச்சிற்றம்பலம், பதிகங்கள், நான்காம், தேவாரப், பாகராய், தேனை, அழியுமாறு, வீரட்டனாரே, சூடி, அதிகரித்த, மிகுதியாக, மேலும், ரிடர்க