நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.100.திருவேகம்பம்

4.100.திருவேகம்பம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர்.
தேவியார் - காமாட்சியம்மை.
956 | ஓதுவித் தாய்முன் னறவுரை காட்டி காதுவித் தாய்கட்ட நோய்பிணி தீர்த்தாய் போதுவித் தாய்நின் பணிபிழைக் கிற்புளி மோதுவிப் பாயுகப் பாய்முனி வாய்கச்சி |
4.100.1 |
காஞ்சிபுரத்தில் ஒற்றை மாமர நிழலில் இருக்கும் பெருமானே! அடியேனுடைய வாழ்க்கையின் முற்பகுதியில் சமணருடைய அறவுரைகளைப் பின்பற்றத்தக்கனவாக உள்ளத்தில் தெரிவித்துச் சமண சமய நூல்களை ஓதுமாறு செய்தாய். பிறகு அவர்களே என்னை அழிப்பதற்கு முயலுமாறு செய்தாய். கொடிய நோயினால் அடியேன் பிணிக்கப்பட்டிருந்த நிலையை நீக்கினாய். அடியேனுடைய உள்ளத்தில் கலந்து சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்குப் புகச் செய்தாய். உன்னுடைய திருத்தொண்டில் தவறு செய்வேனாயின் அடியேனைப் புளிய மரக்குச்சியால் அடித்துத் தண்டிப்பாயாக. நீ சர்வ சுதந்திரன் ஆதலின் நீ விரும்பியதை உகப்பதும் விரும்பாததை வெறுப்பதும் செய்வாய். அடியேனை, உன் திருவுள்ளம் எவ்வாறு உள்ளதோ அவ்வாறு நடத்துவாயாக.
957 | எத்தைக்கொண் டெத்தகை யேழை யமனொ கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டு வித்தென்னக் முத்திற் றிரளும் பளிங்கினிற் சோதியு தொத்தினை யேய்க்கும் படியாய் பொழிற்கச்சி |
4.100.2 |
முத்தின் குவியலும் பளிங்கின் ஒளியும் செறிந்த பவளக் கொத்தினை ஒத்துச் செம்மேனியில் வெண்ணீறு அணிந்திருக்கும் கச்சி ஏகம்பனே! யாது காரணம் பற்றி அடியேனை எப்பேர்ப்பட்ட அறிவில்லாத சமணரோடு உறவு கொள்ளச் செய்து குருடனுக்கு ஊமை வழிகாட்டுவித்தாற் போன்ற இழிவினைச் செய்துவிட்டாய்?
958 | மெய்யம்பு கோத்த விசயனொ டன்றொரு பொய்யம்பெய் தாவ மருளிச்செய் தாய்புர கையம்பெய் தாய்நுன் கழலடி போற்றாக் குய்யம்பெய் தாய்கொடி மாமதில் சூழ்கச்சி |
4.100.3 |
கச்சி ஏகம்பனே! உண்மையாக அம்புகளை வில்லில் சேர்த்துப் போரிட்ட அருச்சுனனோடு அக் காலத்தில் ஒரு வேடன் வடிவினனாய்ப் பொய்யாக அம்பை வில்லில் சேர்த்து அவனோடு போரிட்டு அவனுக்கு அம்பறாத் தூணியை அருளிச் செய்தவனே! முப்புரமும் தீக்கு இரையாகுமாறு கைகளால் அம்பு எய்தவனே! உன்னுடைய வீரக் கழல்கள் அணிந்த திருவடிகளைப் போற்றாத கயவர்களுடைய உள்ளத்தில் மாயையால் உண்மையை மறைத்தல் செய்தவனே! குய்யம் - வஞ்சனை. (சிந்தாமணி-253)
959 | குறிக்கொண் டிருந்துசெந் தாமரை யாயிரம் நெறிப்பட விண்டை புனைகின்ற மாலை கறைக்கண்ட நீயொரு பூக்குறை வித்துக்கண் பிறைத்துண்ட வார்சடை யாய்பெருங் காஞ்சியெம் |
4.100.4 |
மதியின் கூறாகிய பிறையை அணிந்த நீண்ட சடையனே! பெரிய காஞ்சி மாநகரில் உள்ளாயாய்த் தலைக்கோலம் என்ற அணியை அணிந்தவனே! நாளும் ஆயிரம் பூக்களால் இண்டை மாலை தொடுத்துச் சிவபெருமானுக்கு அணிவிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்து நாள்தோறும் ஆயிரம் செந்தாமரை மலர்களால் வரிசை அமைய இண்டை மாலையைத் தொடுக்கின்ற திருமாலுடைய மனநிறைவை அழிப்பவன் போல நீலகண்டனாகிய நீ ஒரு பூவைக் குறையச் செய்து அப்பூவின் தானத்தில் செந்தாமரை போன்ற தன் கண்ணை இடந்து அவன் பூவாகத் தொடுப்பதற்காக அவன் கண் ஒன்றனைத் தோண்டி எடுக்குமாறு செய்தாயே.
960 | 960,உரைக்குங் கழிந்திங் குணர்வரி யானுள்கு கரைக்கு மெனக்கை தொழுவதல் லாற்கதி விரைக்கொண் மலரவன் மாலெண் வசுக்களே இரைக்கு மமிர்தர்க் கறியவொண் ணானெங்க |
4.100.5 |
சொற்களால் தன் பெருமையைச் சொல்ல இயலாதவனாய், மனத்தாலும் உணர்வதற்கு அரியவனாய்த் தன்னை வணங்கு பவர்களுடைய வினைகளைச் செயலற்றன ஆக்குவான் என்ற கருத்தொடு கையால் தொழுவதே அல்லாமல், எங்கள் ஏகம்பப் பெருமான் பிரமன், திருமால், ஆதித்தர் பன்னிருவர், வசுக்கள் எண்மர், உருத்திரர் பதினொருவர் முதலாகத் தன்னை உரத்த குரலில் துதிக்கும் தேவர்களுக்கும் உள்ளவாறு அறிய இயலாதவன் ஆவான்.
961 | கருவுற்ற நாள்முத லாகவுன் பாதமே உருகிற்றெ னுள்ளமும் நானுங் கிடந்தலந் திருவொற்றி யூரா திருவால வாயா ஒருபற்றி லாமையுங் கண்டிரங் காய்கச்சி |
4.100.6 |
திருவொற்றியூரா! திருவாலவாயா! திருவாரூரா! கச்சிஏகம்பனே! அடியேன் தாயாரினுடைய கருவிலே பொருந்திய நாள்முதலாக உன் திருவடியைக் காண்பதற்கு அடியேனுடைய உள்ளம் உருகுகிறது. அடியேனும் கிடந்து வருந்தி இளைத்துச் செயலற்று விட்டேன். அடியேனுக்கு உன்னைத் தவிர வேறு அடைக்கலம் இல்லை என்பதனையும் கண்டு அடியேன்மாட்டு இரக்கம் கொள்வாயாக.
962 | அரியய னிந்திரன் சந்திரா தித்த உரியநின் கொற்றக் கடைத்தலை யாருணங் புரிதரு புன்சடைப் போக முனிவர் எரிதரு செஞ்சடை யேகம்ப வென்னோ |
4.100.7 |
தீப் போன்ற ஒளியை உடைய சிவந்த சடைமுடியனாகிய ஏகம்பனே! திருமால், பிரமன், இந்திரன், சந்திரன், சூரியன் முதலிய தேவர்கள் எல்லோரும் உரிய உன்னுடைய வெற்றி பொருந்திய கோயிலின் முதல்வாசலில் உன் காட்சியை விரும்பி வாடிக் கிடக்கின்றார்கள். முறுக்கேறிய சிவந்த சடைகளை உடைய, சிவானந்த போகத்தைத் துய்க்க விரும்பும் முனிவர்களும் உன் காட்சி கிட்டாமையால் தனிமைத் துன்பம் உறுகின்றார்கள். அவர்களுக்குக் காட்சி வழங்குவது பற்றி உன் திருவுள்ளம் யாதோ? அருளுவாயாக.
963 | பாம்பரைச் சேர்த்திப் படருஞ் சடைமுடிப் கூம்பலைச் செய்த கரதலத் தன்பர்கள் சாம்பரைப் பூசித் தரையிற் புரண்டுநின் றேம்பலிப் பார்கட் கிரங்குகண் டாய்கச்சி |
4.100.8 |
பாம்பினை இடுப்பில் இறுகக் கட்டிப் பரவிய சடைமுடியை உடைய பால் நிறத்தனே! சச்சி ஏகம்பனே! அடியார்கள் இருகைகளையும் குவித்துக் கொண்டு திருநீற்றைப் பூசிக்கொண்டு அடியார் குழாத்துடன் கூடிப் பலநாள்களாகத் தரையில் புரண்டு உன் திருவடிகளே தங்களுக்கு அடைக்கலம் என்று கூறிவந்து அடைந்துள்ளனர். அவர்களுக்கு நீ இரங்கி அருளுவாயாக.
964 | ஏன்றுகொண் டாயென்னை யெம்பெரு மானினி சான்றுகண் டாயிவ் வுலகமெல் லாந்தனி ஊன்றிநின் றாரைவர்க் கொற்றிவைத் தாய்பின்னை சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப மேய |
4.100.9 |
கச்சி ஏகம்பத்தில் விரும்பி உறைகின்ற ஒளி வடிவினனே! எம் பெருமானே! அடியேனை உன் அடியவன் என்று ஏற்றுக் கொண்ட நீ இப்பொழுது அடியேனை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறினால், நீ அடியேனை ஏற்றுத் கொண்டதற்கு இவ்வுலகம் முழுதும் சாட்சி என்பதனை நினைத்துப்பார். தன் உணர்வு இல்லாதவன் என்று அடியேனைப் பற்றி நின்ற ஐம்பொறிகளுக்கும் போக்கியப் பொருளாக வழங்கிப் பின் அந்தப் போக்கியப் பொருளாயிருந்த தன்மையிலிருந்து அடியேனை மீட்டுக் கொண்டாய் என்பதனை உளம் கொள்வாயாக.
965 | உந்திநின் றார்உன்றன் ஓலக்கச் சூளைகள் துன்றிநின் றார்தொல்லை வானவ ரீட்டம் வந்துநின் றாரய னுந்திரு மாலு இந்தநின் றோமினி யெங்ஙன மோவந் |
4.100.10 |
மதில்கள் உடைய காஞ்சி நகரில் உறைபவனே! உன்னுடைய திருவோலக்க மண்டபத்தின் வாயிலைப் பொருந்தித் தேவலோக அரம்பையர்கள் ஒருவரை ஒருவர் நெருக்கிக் கொண்டு நிற்கிறார்கள். பழைய வானவர் கூட்டத்தினர் தமக்கு இடப்படும் திருத்தொண்டு யாது என்று அறிவதற்கு ஓலக்கத்தில் நெருக்கமாக நின்று கொண்டிருக்கிறார்கள். பிரமனும் திருமாலும் அம்மண்டபத்தில் வந்து நிற்கிறார்கள். இவ்விடத்தில் நிற்கின்ற அடியோங்கள் அவ்வளவு கூட்டம் நிரம்பிய உன் திருவோலக்க மண்டபத்தில் எங்ஙனம் வந்து உன்னைக் கண்டு வழிபடல் இயலும்?
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.100.திருவேகம்பம் , அடியேனை, உன்னுடைய, உடைய, ஏகம்பனே, பற்றி, திருமுறை, கச்சி, உள்ளத்தில், செய்தாய், திருவேகம்பம், அடியேனுடைய, பொருந்திய, திருமால், சிவந்த, யேகம்ப, கண்டு, அடைக்கலம், கொள்வாயாக, காட்சி, என்பதனை, போக்கியப், நிற்கிறார்கள், ஏற்றுக், கொண்டு, வந்து, பிரமன், அருளுவாயாக, விரும்பி, காஞ்சி, அடியேன், அடியேனைப், திருவுள்ளம், பெருமானே, திருச்சிற்றம்பலம், நான்காம், தேவாரப், பதிகங்கள், யாது, செய்து, இண்டை, செந்தாமரை, அவன், ஆயிரம், அணிந்த, வில்லில், செய்தவனே, தன்னை