நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.101.திருவின்னம்பர்

4.101.திருவின்னம்பர்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
திருவிருத்தம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர்.
தேவியார் - கொந்தார்பூங்குழலம்மை.
966 | மன்னு மலைமகள் கையால் வருடின சொன்ன துறைதொறுந் தூப்பொரு ளாயின தன்ன வடிவின வன்புடைத் தொண்டர்க் இன்னல் களைவன வின்னரம்ப ரான்ற |
4.101.1 |
இன்னம்பர் எம்பெருமானுடைய திருவடி இணைகள் இமவான் மகளாகிய பார்வதியின் கைகளால் அழுத்தித் தடவப் பட்டன. வேதங்கள் குறிப்பிடும் துறைகளை எல்லாம் பின்பற்றுவதற்குப் பற்றுக்கோடாம் பொருளாய் உள்ளன. தூய தாமரை போன்ற வடிவின; தம்மாட்டு அன்புடைய அடியவர்களுக்கு அமுது வழங்கி அவர்களுடைய துயர்களைப் போக்குவன.
967 | பைதற் பிணக்குழைக் காளிவெங் கோபம்பங் செய்தற் கரிய திருநடஞ் செய்தன உய்தற் பொருட்டுவெங்கூற்றை யுதைத்தன எய்தற் கரியன வின்னம்ப ரான்ற |
4.101.2 |
இன்னம்பரான் தன் இணை அடிகள் இளம் பிள்ளைகளின் பிணங்களைக் காதணிகளாக அணியும் காளியின் கொடிய கோபத்தைப் போக்குவதற்கு மற்றவர்களால் செய்தற்கு அரிய திருக்கூத்தினை நிகழ்த்துவன. சிறப்புடைய அந்தணனாகிய மார்க்கண்டேயன் உயிர் தப்புவதற்காகக் கொடிய கூற்றுவனை உதைத்தன. தேவர்களுக்கெல்லாம் கிட்டுதற்கு அரியன.
968 | சுணங்குநின் றார்கொங்கை யாளுமை சூடின வணங்கிநின் றும்பர்கள் வாழ்த்தின மன்னு பிணங்கிநின் றின்னன வென்றறி யாதன டிணங்கிநின் றாடின வின்னம்ப ரான்ற |
4.101.3 |
இன்னம்பரான் தன் இணையடிகள் தேமல் படர்ந்த கொங்கைகளை உடைய உமாதேவியால் சூடப்பட்டன; தேவர்கள் வணங்கிநின்று தூய மலர்களைத் தூவி வாழ்த்துதலைப் பொருந்தியன; என்றும் நிலைபெற்ற நான்கு வேதங்களும் தம்முள் கருத்து மாறுபட்டு உண்மையில் இத்தன்மையன என்று அறியப்படாதன; பேய்க் கூட்டத்தொடு கலந்து நின்று கூத்து நிகழ்த்தின.
969 | ஆறொன் றியசம யங்களி னவ்வவர்க் வேறொன்றி லாதன விண்ணோர் மதிப்பன மாறொன்றி லாதன மண்ணொடு விண்ணகம் ஈறொன்றி லாதன வின்னம்ப ரான்ற |
4.101.4 |
இன்னம்பரான் தன் இணையடிகள் ஆறு ஆறாக நான்கு வகைகளில் அடங்கிய சமயங்களைச் சார்ந்தவர்களுக்கு வேறாகாது அவ்வப் பொருள்களாக நின்று அருள்புரிவன; தேவர்களால் மதிக்கப்படுவன; தம்மை ஒப்பனவும் தம்மின் மிக்கனவும் இல்லாதன; நில உலகமும் மேல் உலகமும் அழிந்த காலத்தும் தமக்கு அழிவு இல்லாதன
970 | அரக்கர்தம் முப்புர மம்பொன்றி னாலட கரக்கமுன் வைதிகத் தேர்மிசை நின்றன பரக்கவெங் கானிடை வேடுரு வாயின றிரக்க நடந்தன வின்னம்ப ரான்ற |
4.101.5 |
இன்னம்பரான் தன் இணை அடிகள், அரக்கர்களுடைய முப்புரங்களும் அம்பு ஒன்றினால் அழிக்கும் நெருப்பிற்கு இரையாகி மறையுமாறு அக்காலத்தில் வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் நின்றன; எடுத்துக்கொண்ட வேடர் வடிவம் சிறக்குமாறு கொடிய காட்டிலே வேடர்களுடைய அடிகளின் வடிவின ஆயின; பல ஊர்கள்தோறும் பிச்சை எடுக்க நடந்தன.
971 | கீண்டுங் கிளர்ந்தும்பொற் கேழன்முன் றேடின ஆண்டும் பலபல வூழியு மாயின வேண்டும் பொருள்கள் விளங்கநின் றாடின பீண்டுங் கழலின வின்னம்ப ரான்ற |
4.101.6 |
இன்னம்பரான் தன் இணையடிகள், நிலத்தைக் கிழித்தும் கிளரியும் பொலிவை உடைய பன்றி வடிவெடுத்த திருமாலால் தேடப்பட்டன; எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஊழிகள் கடந்தாலும் கெடுதியை அடையாதன; வேதங்களின் விரும்பிய பொருள் புலப்படுமாறு திருக்கூத்து நிகழ்த்தின; விரும்பிய சிலம்பும் கழலும் அணிந்தன.
972 | போற்றுந் தகையன பொல்லா முயலகன் ஆற்றுந் தகையன வாறு சமயத் தேற்றுந் தகையன தேறிய தொண்டரைச் ஏற்றுந் தகையன வின்னம்ப ரான்ற |
4.101.7 |
இன்னம்பரான் தன் இணையடிகள், வழிபடத் தக்கன; கொடிய முயலகனுடைய வெகுளியால் ஏற்பட்ட இழிவைப் போக்கும் தன்மையன; அறு வகைச் சமயங்களைச் சார்ந்த அடியவர்களைத் தௌவிக்கும் தன்மையன; தௌவடைந்த அடியவர்களை மேம்பட்ட நெறிக்கண் உயர்த்தும் தன்மையன.
973 | பயம்புன்மை சேர்தரு பாவந் தவிர்ப்பன குயம்பொன்மை மாமல ராகக் குலாவின் சயம்புவென் றேதகு தாணுவென் றேசதுர் றியம்புங் கழலின வின்னம்ப ரான்ற |
4.101.8 |
இன்னம்பரான் தன் இணை அடிகள், அச்சமும் கீழ்மையும் ஒரு சேர வழங்கும் பாவங்களைப் போக்குவன; பார்வதியினுடைய தனங்களாகிய பொலிவுடைய தாமரை மொட்டுக்களைத் தாமரைப் பூக்களாகிய தம் இனத்தனவாகக் கொண்டு நட்புச் செய்தன; அவன் அருளாலன்றித் தம் முயற்சியால் மாத்திரம் அடைய முடியாத தான்தோன்றி என்று சொல்லத் தகுந்த சிவபெருமானே அத்திருவடிகள் என்று நான்கு வேதங்களும் இயம்பும் சிறப்பினவாய்க் கழல்களை அணிந்தன, சிவபெருமான் செய்யும் அருள்களை அவன் திருவடிகளே வழங்கும் என்பதாம்.
974 | அயனொடு மாலிந் திரன்சந்த்ரா தித்த சயசய வென்றுமுப் போதும் பணிவன வியனில முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் இயபர மாவன வின்னம்ப ரான்ற |
4.101.9 |
இன்னம்பரான் தன் இணையடிகள், பிரமன், திருமால், இந்திரன், சந்திரன், சூரியன் மற்றுள்ள தேவர்கள் எல்லோரும் சய சய என்று பல்லாண்டு பாடிக் காலை நண்பகல் அந்தி என்ற முப்பொழுதுகளிலும் பணியும் திறத்தன. குளிர்ந்த கடலால் சூழப்பட்டபரந்த இந்த நில உலகத்தில் உள்ளவர்களுக்கும் தேவர் உலகத்தவருக்கும் நாகர் உலகத்தவருக்கும் இம்மை இன்பமும் மறுமை இன்பமும் நல்குவன.
975 | தருக்கிய தக்கன்றன் வேள்வி தகர்த்தன துருக்கிய செம்பொ னுவமனி லாதன நெருக்கிய வாளரக் கன்றலை பத்து இருக்கியல் பாயின வின்னம்ப ரான்ற |
4.101.10 |
இன்னம்பரானுடைய இணையடிகள், செருக்குற்ற தக்கனுடைய வேள்வியை அழித்தன; தாமரைப் பூ, உருக்கிய செம்பொன் என்பனவும் தமக்கு உவமம் ஆகாத வகையில் அவற்றிலும் மேம்பட்டன; கயிலையைப் பெயர்க்க முற்பட்ட கொடிய இராவணனுடைய தலைகள் பத்தினையும் நெரித்து அவனால் பாடப்பட்ட வேதங்களின் இயல்பைத் தம் இயல்பாகக் கொண்டன.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்காம் திருமுறை-தேவாரப் பதிகங்கள் - 4.101.திருவின்னம்பர் , ரான்றனிணையடியே, வின்னம்ப, இன்னம்பரான், இணையடிகள், கொடிய, தகையன, நான்கு, திருமுறை, லாதன, அடிகள், திருவின்னம்பர், தன்மையன, வடிவின, விரும்பிய, வேதங்களின், நடந்தன, உலகத்தவருக்கும், கழலின, வழங்கும், இன்பமும், அவன், தாமரைப், அணிந்தன, தமக்கு, வேதங்களும், திருச்சிற்றம்பலம், தாமரை, பதிகங்கள், தேவாரப், நான்காம், போக்குவன, உடைய, சமயங்களைச், இல்லாதன, நிகழ்த்தின, நின்று, தேவர்கள், உலகமும்