1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 10
2 அவன் அவ்விடத்தில் அரசாண்டான். தெமெத்திரியுஸ் இதைக் கேள்விப்பட்டு,. திரளான சேனைகளைச் சேர்த்து அவனோடு போர்செய்யப் புறப்பட்டான்.
3 தெமெத்திரியுஸ் யோனத்தாசைப் புகழ்ந்து சமாதான வார்த்தைகளைச் சொல்லி அவருக்குக் கடிதம் அனுப்பினான்.
4 நமக்கு எதிராய் அவன் அலெக்சாந்தரோடு உடன்படிக்கை செய்துகொள்வதற்கு முன்பே நாம் அவனோடு சமாதானம் செய்துகொள்வோம்.
5 ஏனென்றால், அவனுக்கும் அவன் சகோதரருக்கும் அவன் இனத்தாருக்கும் நாம் செய்த தீமைகள் யாவற்றையும் அவன் நினைத்துக் கொள்வான் என்று சொன்னான்.
6 ஆதலால், படைகளைக் கூட்டவும், போர்க்கருவிகளைச் செய்யவும் அவருக்கு அதிகாரமளித்து, அவரைத் தன் தோழனாக்கிக் கொண்டு கோட்டையிலிருந்த பிணையானிகளை அவரிடம் அனுப்பி வைத்தான்.
7 யோனத்தாஸ் யெருசலேம் வந்து, எல்லா மக்களும், கோட்டைக்குள் இருந்தவர்களும் கேட்கும்படி கடிதத்தை வாசித்தார்.
8 படைகளைக் கூட்ட அவருக்கு அரசன் அதிகாரம் அளித்திருந்ததைக் கேட்டு, அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
9 பிணையாளிகள் யோனத்தாசிடம் அனுப்பப்பட்டார்கள். அவர் அவர்களுடைய உற்றார் உறவினரிடத்தில் அவர்களை ஒப்புவித்தார்.
10 யோனத்தாஸ் யெருசலேமில் வாழ்ந்து, நகரத்தைக் கட்டவும் புதுப்பிக்கவும் ஆரம்பித்தார்.
11 சுவர்களைக் கட்டும்படியாகவும், சீயோன் மலையைச் சுற்றிலும் கருங்கற்களால் வலுப்படுத்தவும் வேலைக்காரருக்குக் கட்டளையிட்டார். அவ்வண்ணமே அவர்கள் செய்தார்கள்.
12 பாக்கீது கட்டின கோட்டைக்குள் இருந்த அன்னிய நாட்டினர் ஓடிவிட்டார்கள்.
13 ஒவ்வொருவனும் தான் இருந்த இடம் விட்டுத் தன் நாடு போய்ச்சேர்ந்தான்.
14 பெத்சூராவில் மட்டும் சிலர் தங்கியிருந்தார்கள். அவர்கள் கடவுளுடைய கட்டளைகளையும் சட்டங்களையும் அனுசரியாதவர்கள். அந்நகர் தஞ்சமளிக்கும் ஓர் இடமாக இருந்தது.
15 தெமெத்தரியுஸ் யோனத்தாசுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை மன்னன் அலெக்சாந்தர் கேள்விப்பட்டான்@ அவரும் அவர் சகோதரரும் செய்த போர்களையும் அடைந்த வெற்றிகளையும் செய்த வேலைகளையும் அறிந்து கொண்டான்.
16 அவன்: இத்தகைய மனிதனை நாம் காணக்கூடுமோ? அவனை நாம் நம்முடைய நண்பனும் தோழனுமாகக் கொள்வோம் என்று சொல்லி,
17 கடிதம் எழுதினான்:
18 அலெக்சாந்தர் மன்னர் நம் சகோதரனாகிய யோனத்தாசுக்கு வாழ்த்துக் கூறுகிறோம்.
19 நீ சிறந்த வீரனென்றும், நம் நண்பனாய் இருப்பதற்கு உகந்தவனென்றும், கேள்விப்பட்டோம்.
20 ஆதலால், இன்று உன்னை உன் இனத்தாருக்குத் தலைமைக்குருவாக நியமிக்கிறோம். நீ மன்னருடைய நண்பன் எனப்படுவாய். (அதற்கு அடையாளமாக, அவன் அரசவுடையும் பொன்முடியும் அனுப்பினான்.) நம்முடைய காரியங்களை உன்னுடையவைகளாகப் பாவித்து, நம்மீது கொண்டுள்ள நட்பு மாறாதிருக்க வேண்டும்.
21 நூற்றறுபதாம் ஆண்டு ஏழாம் மாதம் உடன்படிக்கைப் பெட்டகத்தின் பெரிய திருநாளில் யோனத்தாஸ் திருவுடை அணிந்து கொண்டார். படைகளைக் கூட்டித் திரளான போர்க்கருவிகளையும் செய்வித்தார்.
22 தெமெத்திரியுஸ் இதைக் கேள்விப்பட்டுத் துக்கம் அடைந்தான்.
23 ஏனென்றால், அவன்: அலெக்சாந்தர் தன்னை வலுப்படுத்திக்கொள்ள யூதருடைய நட்பை முந்திக் கைப்பற்றினபடியால், நாம் அதற்கு என்ன செய்யப்போகிறோம்?
24 நானும் அவர்களுக்கு விருப்பமான வார்த்தைகளை எழுதி, அவர்கள் எனக்கு உதவியாக வரும்படி உயர்ந்த பதவிகளையும் பரிசுகளையும் அளிப்பேன் என்று சொல்லி, அவர்களுக்கு எழுதினதாவது:
25 தெமெத்திரியுஸ் மன்னர் யூத மக்களுக்கு வாழ்த்துக் கூறுகிறோம்.
26 நீங்கள் நம்முடன் செய்துகொண்ட உடன்படிக்கையைக் காப்பாற்றினீர்களென்றும், நமது நட்பில் நிலைத்தீர்களென்றும், நம் பகைவர்களோடு சேரவில்லையென்றும், கேள்விப்பட்டு மகிழ்ந்தோம்.
27 இன்னும் நம்மீதுள்ள பிரமாணிக்கத்தைக் காப்பாற்றுங்கள். நமக்காக நீங்கள் செய்து வந்த யாவற்றிற்கும் பரிசு அளிப்போம்.
28 உங்கள் மீது சுமத்தப்பட்ட வரிகளில் பலவற்றை நீக்குவோம். தவிர, உங்களுக்கு நாம் சிறப்புப் பரிசும் அளிப்போம்.
29 இப்போது, நீங்களும், யூத மக்கள் யாவரும் செலுத்தி வந்த வரிகளை மன்னிக்கிறோம். உப்புத் தீர்வையை நீக்கி விடுகிறோம். பொன் முடியையும், உங்கள் விளைச்சலில் நீங்கள் செலுத்தி வரும் மூன்றிலொரு பகுதியையும் மன்னிக்கிறோம்.
30 மரங்களிலிருந்து நமக்குச் சேர வேண்டிய பாதி விளைச்சலையும் இன்று முதல் உங்களுக்கு விட்டு விடுகிறோம். இது முதல் எக்காலமும் யூதேயா நாட்டிலும் சமாரியாவிலும் கலிலேயாவிலும், அதோடு சேர்க்கப்பட்ட மூன்று நகரங்களிலும் ஒன்றும் வாங்கப்பட மாட்டாது.
31 யெருசலேமும், அதைச் சேர்ந்த இடங்களும் புனிதமாகவும் தன்னுரிமையோடும் இருக்கக்கடவன. பத்திலொரு பகுதியும் வரியும் அதைச் சேரக்கடவன.
32 யெருசலேமிலுள்ள கோட்டையையும் உங்கள் அதிகாரத்தில் வைக்கிறோம். அதைக் காப்பதற்கும், தாம் தேர்ந்து கொள்ளும் மனிதரை நியமித்துக் கொள்வதற்கும் தலைமைக்குருவுக்கு அதிகாரம் அளிக்கிறோம்.
33 எமது நாடெங்கும் இருக்கும் யூதேயா நாட்டுக் கைதிகள் அனைவருக்கும் வரி, மந்தைகளுக்காகச் செலுத்தும் தீர்வை முதலியவற்றை மன்னித்து, அவர்களையும் அனுப்பி விடுகிறோம்.
34 முக்கியமான எல்லாத் திருநாட்களையும் ஓய்வு நாட்களையும் அமாவாசை நாட்களையும் வழக்கிலிருக்கும் திருநாட்களையும், பெரிய திருநாளுக்கு முந்தின மூன்று நாட்களையும், பிந்தின மூன்று நாட்களையும் எமது அரசுக்குட்பட்ட எல்லா யூதருக்கும் விடுமுறை நாட்களாகவும், ஓய்வுநாட்களாகவும் ஏற்படுத்துகிறோம்.
35 அவர்களில் ஒருவனுக்கும் எதிராய் எக்காரியத்திலும் யாதொன்றைச் செய்யவும் நடத்தவும் எவனுக்கும் அதிகாரமில்லை.
36 யூதரில் முப்பதினாயிரம் பேர் வரை மன்னர் படையில் சேர்த்துக்கொள்ளப் படுவார்கள். மன்னர் படைகளுக்குச் செய்யப்படுவது போல் அவர்களுக்கும் வேண்டியவைகளெல்லாம் கொடுக்கப்படும். மன்னருடைய கோட்டையைக் காப்பதற்கும் அவர்களில் பலர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
37 நம்பிக்கையோடு செய்ய வேண்டிய மதிப்புள்ள வேலைகளுக்கு அவர்களே தலைவர்களாக நியமிக்கப் படுவார்கள். மன்னர் கட்டளைப்படி யூதேயா நாட்டில் அவர்களே தலைவர்களாய் இருந்து, தங்கள் வழக்கப்படி நடப்பார்கள்.
38 சமாரியாவினின்று யூதேயாவில் சேர்க்கப்பட்ட மூன்று நகரங்களும் யூதேயாவைச் சேர்ந்தவை என்றே பாவிக்கப்படும். அவை தலைமைக்குருவின் அதிகாரத்துக்கேயன்றி, வேறு எந்த அதிகாரத்துக்கும் உட்பட்டவை அல்ல.
39 யெருசலேம் ஆலயப்பராமரிப்புச் செலவுக்காக நாம் தானமாகத் தோலெமாயிதையும், அதைச் சேர்ந்த நகரங்களையும் கொடுக்கிறோம்.
40 மேலும், நமக்குச் சொந்தமான வருமானத்தில் பதினையாயிரம் சீக்கில் என்னும் வென்னி நாணயங்களை ஆண்டுதோறும் கொடுப்போம்.
41 கடந்த ஆண்டுகளில் நம்மால் தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்கள் இன்னும் கெடாமல் இருக்கும் பணமெல்லாம் ஆலயத்தின் வேலைகளுக்காகக் கொடுக்கும்படி செய்வோம்.
42 ஆலயத்தின் வருமானத்தினின்று இதுவரையிலும் எடுத்துவந்த ஐயாயிரம் சீக்கில் நாணயங்களும் கடவுளுக்கு ஊழியம் செய்து வரும் குருக்களைச் சேரும்.
43 எக்காரியத்திலும் மன்னருடைய கோபத்துக்கு உள்ளான எவனாவது யெருசலேமிலும், அதன் எல்லைகளுக்குள்ளும் உள்ள ஆலயங்களில் தஞ்சமென்று ஓடுவானாகில் அவன் மன்னிக்கப்படுவான்@ நம் நாட்டில் அவனுக்குச் சொந்தமானவற்றையும் அவன் தன் விருப்பப்படி அனுபவிக்கக்கடவான்.
44 ஆலயங்களைக் கட்டுவதற்கும், பழுதுப்பார்ப்பதற்கும் அரச கருவூலத்தினின்று செலவுக்குக் கொடுக்கப்படும்.
45 யெருசலேம் சுவர்களைக் கட்டுவதற்கும், சுற்றிலும் வலுப்படுத்துவதற்கும், யூதேயாவில் சுற்றுச் சுவர்களைக் கட்டுவதற்கும் அரச கருவூலத்தினின்று கொடுக்கப்படும்.
46 யோனத்தாசும் மக்களும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, அவற்றை நம்பவுமில்லை@ ஏற்றுக் கொள்ளவுமில்லை. ஏனென்றால், அவன் இஸ்ராயேலுக்குச் செய்த பெரும் தீங்குகளையும், வருவித்த துன்பங்களையும் நினைத்துக் கொண்டார்கள்.
47 அலெக்சாந்தர் மீதோ விருப்புக் கொண்டார்கள். ஏனென்றால், அவன் சமாதான வார்த்தைகளைச் சொல்லி, எப்போதும் அவர்களுக்கு உதவியாகவும் இருந்தான்.
48 அலெக்சாந்தர் பெரும் படை திரட்டி தெமெத்திரியுசை எதிர்த்துச் சென்றான்.
49 இரண்டு மன்னர்களும் போர் தொடுத்தார்கள். தெமெத்திரியுஸ் படை முறியடிக்கப்பட்டது. அலெக்சாந்தர் அவனைத் துரத்திப் படைகள் மீது பாய்ந்தான்.
50 சூரியன் மறையும் வரையில் கொடிய போர் நிகழ்ந்தது. தெமெத்திரியுஸ் அன்று மாண்டான்.
51 அலெக்சாந்தர் எகிப்து மன்னன் தோலெமேயுசுக்குத் தூதர்களை அனுப்பி:
52 நான் என் நாடு திரும்பி வந்தேன்@ என் முன்னோரின் அரியணையில் அமர்ந்தேன். என் ஆட்சியை அடைந்தேன்@ தெமெத்திரியுசைத் தோற்கடித்தேன்@ என் நாட்டைக் கைவசப்படுத்திக் கொண்டேன்.
53 அவனோடு போர்தொடுத்து, அவனும் அவன் படைகளும் என்னால் முறியடிக்கப்பட்டனர். அவனது அரியணையிலும் நான் அமர்ந்தேன்.
54 ஆதலால், இப்போது நாம் இருவரும் நட்புச் செய்து கொள்வோம். உன் மகளை எனக்கு மனைவியாகக் கொடு. நான் உன் மருமகனாய் இருப்பேன், உனக்கு ஏற்றப் பரிசுகளை வழங்குவேன் என்று சொல்லியனுப்பினான்.
55 தோலெமேயுஸ் அவனுக்கு மறுமொழியாக: நீ உன் நாடு திரும்பி வந்து அவர்களுடைய அரியணை ஏறின நாள் பேறுபெற்ற நாள்.
56 நீ எழுதியுள்ளபடி நான் செய்வேன். நாம் ஒருவரை ஒருவர் பார்க்கிறதற்கு நீ தோலெமாயிதுக்கு வா. அப்போது நீ கேட்டபடி என் புதல்வியை உனக்குக் கொடுப்பேன் என்று சொன்னான்.
57 தோலெமேயுசும், அவன் புதல்வி கிளேயோப்பாத்திராவும் எகிப்தை விட்டுப் புறப்பட்டு, நூற்றருபத்திரண்டாம் ஆண்டு தோலெமாயிது வந்தார்கள்.
58 அலெக்சாந்தர் மன்னனும் அவனைக் காண வந்தான். தொலெமேயுஸ் தன் புதல்வி கிளேயோப்பாத்திராவை அலெக்சாந்தருக்குக் கொடுத்தான்@ தோலெமாயிதில் அரசர்கள் செய்வது போல மிகச் சிறப்புடன் திருமணமும் செய்வித்தான்.
59 அலெக்சாந்தர் மன்னன் யோனத்தாசுக்குத் தன்னை வந்து காணும்படி எழுதினான்.
60 அவரும் வெகு சிறப்பாய் வந்து, இரு மன்னர்களையும் சந்தித்தார்@ அவர்களுக்குத் திரளான பொன்னும் வெள்ளியும் பரிசுகளும் கொடுத்தார்.
61 அவர்கள் முன் அன்பைப் பெற்றார். இஸ்ராயேலில் தீயவரும், தீய எண்ணமுள்ளவர்களும் அவர் மீது குற்றம்சாட்ட முற்பட்டார்கள். ஆனால், மன்னன் ஒன்றுக்கும் செவிசாயக்கவில்லை.
62 அவன் யோனத்தாசின் உடையைக் கழற்றி அவருக்கு அரசவுடை அணிவிக்கும்படி கட்டளையிட்டான். அவர்கள் அப்படியே செய்தார்கள். மன்னன் அவரைத் தன்னுடன் அமரும்படி செய்தான்.
63 மேலும், தன் பிரபுக்களை நோக்கி: நீங்கள் இவனுடன் நகரின் மத்தியில் சென்று, இவனை எக்காரியத்திலும் எவனும் குற்றம் சாட்டக் கூடாதென்றும் எல்லாரும் அறியச் சொல்லுங்கள் என்று கூறினான்.
64 எங்கும் வெளிப்படுத்தப்பட்ட அவர் மாட்சியைக் கேள்வியுற்றும், அவர் அரசவுடை அணிந்திருப்பதைப் பார்த்தும் அவரைக் குற்றம் சாட்டினவர்கள் எல்லாரும் ஓடிவிட்டார்கள்.
65 மன்னன் அவரை மேன்மைப்படுத்தி, தன் நண்பரில் முதல்வராக ஏற்றுக் கொண்டு, அரசில் தலைவரும் அதிகாரியுமாய் நியமித்தான்.
66 சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடும் யோனத்தாஸ் யெருசலேம் திரும்பினார்.
67 நூற்றறுபத்தைந்தாம் ஆண்டு தெமெத்திரியுஸ் புதல்வன் தெமெத்திரியுஸ் என்பவன் கிரேத்து நாட்டினின்று தன் முன்னோருடைய நாட்டிற்கு வந்தான்.
68 அலெக்சாந்தர் மன்னன் இதைக் கேள்விப்பட்டு மிகவும் கவலையடைந்து அந்தியோக்கியாவுக்குத் திரும்பினான்.
69 தெமெத்திரியுஸ் மன்னன் செலேசீரியாவில் தலைவனாயிருந்த அப்பொல்லோனியுசைப் படைத்தலைவனாக நியமித்தான். அவன் பெரும் படை சேர்த்து யாம்னியாவுக்குச் சென்று, தலைமைக்குருவாகிய யோனத்தாசுக்கு:
70 நீ ஒருவன் மட்டுமே எங்களை எதிர்க்கிறாய். மலைகளில் எங்களுக்கு எதிராய் நீ ஆட்சி செலுத்துவதால், எனக்கு நிந்தையும் அவமானமும் ஏற்படுகிறது.
71 ஆதலால், நீ வீரமுள்ளவனானால், சமவெளிக்கு இறங்கி வா. அவ்விடத்தில் நமது வலிமையைப் பார்த்துக் கொள்ளலாம். ஏனென்றால், சண்டைகளில் நான் வெற்றியடைவேன்.
72 நான் யாரென்றும், என்னுடன் உதவிக்கு வந்தவர்கள் யாரென்றும் கேட்டு அறிந்து கொள். உன் முன்னோர் அவர்களை எதிர்க்க முடியாமல் தங்கள் சொந்த நாட்டிற்கு இருமுறை ஓடியது போல, நீயும் எங்களை எதிர்த்து நிற்க முடியாது என்று சொல்கிறார்கள்.
73 கல்லும் பாறையும், ஓடிப் போவதற்கு இடமும் இல்லாத சமவெளியில் எங்கள் திரளான குதிரைப் படைகளையும் சேனைகளையும் எவ்விதம் எதிர்த்து நிற்கப் போகிறாய் என்று சொல்லியனுப்பினான்.
74 அப்பொல்லோனியுசின் வார்த்தைகளைக் கேட்ட யோனத்தாஸ் மனம் கலங்கினார். பதினாயிரம் பேரைத் தேர்ந்துகொண்டு, அவர்களோடு யெருசலேமினின்று புறப்பட்டார்@ அவருடைய சகோதரன் சீமோனும் அவருக்கு உதவியாக வந்தான்.
75 யோப்பெ அருகே அவர்கள் பாளையம் இறங்கினார்கள். அயாப்பெயில் அப்பொல்லோனியுசின் காவலர்கள் இருந்தபடியால் அதனுள் புக முடியவில்லை. ஆகையால், அவர் அதைத் தாக்கினார்.
76 நகரத்தில் இருந்தவர்கள் பயந்து கதவுகளைத் திறந்தார்கள். யோப்பெ நகரத்தை யோனத்தாஸ் கைப்பற்றினார்.
77 இதை அறிந்த அப்பொல்லோனியுஸ் மூவாயிரம் குதிரை வீரரோடும், திரளான சேனைகளோடும் வந்தான்.
78 அசோத்துஸ் நகருக்குப் போவது போல நடந்து, குதிரை வீரர் மீது தனக்குண்டான நம்பிக்கையினால் திடீரென்று சமவெளியில் வெளிப்பட்டான். யோனத்தாஸ் அவனைப் பின்தொடர்ந்து வந்து சண்டை செய்தார்.
79 அப்பெல்லோனியுஸ் தன் பாளையத்தில் ஆயிரம் குதிரை வீரரைப் பின்னால் விட்டிருந்தான்.
80 யோனத்தாஸ் தமக்குப் பின்னால் பகைவர் மறைந்திருக்கிறார்களென்றும் அறிந்தார். பகைவர் அவருடைய சேனைகளைச் சூழ்ந்து கொண்டு, காலை முதல் மாலை வரையிலும் அவர்கள் மீது அம்புகள் எய்தார்கள்.
81 யோனத்தாஸ் கட்டளையிட்டப்படி மக்களும் நின்றார்கள்@ குதிரைகளும் சோர்ந்து போயின.
82 சீமோன் தன் படையை நடத்திப் பகைவர் தம் காலாட்கள் மேல் பாய்ந்தான். குதிரை வீரர் களைத்துப் போயிருந்தனர். ஆதலால், பகைவர் முறியடிக்கப்பட்டு ஓடிப்போனார்கள்.
83 சமவெளியில் தோற்கடிக்கப்பட்டவர்கள் அசோத்துஸ் நகரத்துக்கு ஓடி, தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்கள் கடவுள் தாகோன் ஆலயத்தில் புகுந்து கொண்டார்கள்.
84 யோனத்தாஸ் அசோத்துசையும், சுற்றிலுமிருந்த நகரங்களையும் கொளுத்தி விட்டு, எல்லாவற்றையும் பறிமுதல் செய்தார். தாகோன் கோயிலையும், அதில் இருந்தவர்களையும் கொளுத்தி விட்டார்.
85 வாளுக்கு இரையானவர்களும் நெருப்பில் மாண்டவர்களும் ஏறக்குறைய எண்ணாயிரம்பேர்.
86 யோனாத்தாஸ் அவ்விடமிருந்து புறப்பட்டு அஸ்காலோன் சேர்ந்தார். அந்நகர மக்கள் மரியாதைகள் செய்து, அவரை எதிர்கொண்டு அழைக்கப்போனார்கள்.
87 ஏராளமான பொருட்களைக் கொள்ளையடித்துக் கொண்டு யோனத்தாஸ் தம்மைச் சேர்ந்தவர்களோடு யெருசலேம் திரும்பினார்.
88 அலெக்சாந்தர் இவைகளைக் கேள்விப்பட்டபோது இன்னும் யோனத்தாசை அதிக மேன்மைப்படுத்தி,
89 அரச குலத்தின் பிரபுக்களுக்குக் கொடுக்கும் வழக்கம் போல் அவருக்குப் பொன்சரடு அனுப்பினான். மேலும், அக்காரோனையும், அதைச் சேர்ந்த ஊர்களையும் அவருக்கு உரிமை ஆக்கினான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு, அவன், அலெக்சாந்தர், யோனத்தாஸ், தெமெத்திரியுஸ், நாம், மன்னன், நான், அவர், ஆதலால், ஏனென்றால், மீது, திரளான, அவருக்கு, வந்து, ஏற்பாடு, மன்னர், யெருசலேம், கொண்டு, மூன்று, செய்து, செய்த, நீங்கள், சொல்லி, ஆண்டு, குதிரை, வந்தான், அதைச், பழைய, தங்கள், பகைவர், நாட்களையும், அவர்களுக்கு, சுவர்களைக், சமவெளியில், மன்னருடைய, நாடு, பெரும், கொடுக்கப்படும், எக்காரியத்திலும், விடுகிறோம், யூதேயா, உங்கள், மேலும், கொண்டார்கள், மக்கபே, கட்டுவதற்கும், எனக்கு, இன்னும், எதிராய், படைகளைக், அனுப்பி, அனுப்பினான், கேள்விப்பட்டு, ஆகமம், அதிகாரம், இதைக், மக்களும், அவனோடு, கேட்டு, அமர்ந்தேன், திரும்பி, பாய்ந்தான், போர், நூற்றறுபதாம், சொல்லியனுப்பினான், மிகவும், புறப்பட்டு, புதல்வி, நாள், புதல்வன், அவனை, நகரங்களையும், யூதேயாவில், செய்தார்கள், நாட்டில், சுற்றிலும், சீக்கில், ஏற்றுக், கருவூலத்தினின்று, அவ்விடத்தில், ஆலயத்தின், அரசவுடை, குற்றம், அசோத்துஸ், திருவிவிலியம், யோப்பெ, அவருடைய, வீரர், செய்தார், கொளுத்தி, தாகோன், அவர்களை, பின்னால், அப்பொல்லோனியுசின், ஆன்மிகம், மேன்மைப்படுத்தி, அவரை, எல்லாரும், தலைவர்களாக, நியமித்தான், திரும்பினார், எதிர்த்து, யாரென்றும், எங்களை, நாட்டிற்கு, சென்று, சேனைகளைச், செய்யவும், உதவியாக, அவரைத், கோட்டைக்குள், நமது, சொன்னான், ஓடிவிட்டார்கள், நினைத்துக், அளிப்போம், வந்த, தன்னை, பெரிய, அவரும், எழுதினான், கொள்வோம், நம்முடைய, யோனத்தாசுக்கு, வாழ்த்துக், அதற்கு, எல்லா, இன்று, கூறுகிறோம், உங்களுக்கு, இப்போது, திருநாட்களையும், இருக்கும், எமது, காப்பதற்கும், அவர்களுடைய, அவர்களில், அறிந்து, போல், படுவார்கள், சேர்த்து, சமாதான, வார்த்தைகளைச், இருந்த, மன்னிக்கிறோம், செலுத்தி, மக்கள், வரும், நமக்குச், சேர்க்கப்பட்ட, கடிதம், விட்டு, வேண்டிய, அவர்களே