1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 9
2 அவர்கள் கல்கலா வழியாய்ச் சென்று, அர்பெல்லாவில் இருக்கும் மசாலோத்தில் பாளையம் இறங்கினர்@ அந்நகரத்தைப் பிடித்துப் பலரைக் கொலைசெய்தனர்.
3 அவர்கள் நூற்றைம்பத்திரண்டாம் ஆண்டு முதல் மாதத்தில் யெருசலேம் மீது படையெடுத்தார்கள்.
4 இருபதினாயிரம் காலாட்படைகளும் இரண்டாயிரம் குதிரை வீரரும் பேரேயாவில் இறங்கினார்கள்.
5 லியிசாவில் யூதாஸ் பாளையம் இறங்கினார். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் அவரோடு இருந்தார்கள்.
6 அவர்கள் பகைவரின் படைத்திரளைக் கண்டு மிகவும் பயந்தார்கள்@ பலர் பாளையத்தினின்று ஓடி விட்டார்கள்@ எண்ணுறு பேர் மட்டும் நிலைத்திருந்தார்கள்.
7 தம் படை குறைந்துபோவதை யூதாஸ் கண்டு, சண்டை நெருங்கியிருப்பதையும் உணர்ந்து, அவர்களை ஒன்று சேர்ப்பதற்கு நேரமில்லாததால் மனம் தத்தளித்துத் திடனற்றுப்போனார்.
8 அவர் தம்முடன் நிலைத்திருந்தவர்களை நோக்கி: நம்மால் எதிர்த்துச் சண்டை செய்யக்கூடுமானால் பகைவருடன் போர்தொடுப்போம் என்றார்.
9 அவர்களோ அவரைத் தடுத்து: நம்மில் வெகு சிலரே எஞ்சியிருப்பதால் நம்மால் முடியாது@ ஆனால், இப்போது உயிருடன் நம் சகோதரரிடம் திரும்புவோம்@ பிறகு, பகைவர்களை எதிர்ப்போம் என்றார்கள்.
10 அதற்கு யூதாஸ்: அவர்களுக்குப் புறமுதுகு காட்டி ஓடுவதென்பது நமக்கு அழகன்று@ நமது காலம் வந்து விட்டதேயானால், நம் சகோதரருக்காகத் துணிவுடன் சாவோம்@ நமது புகழுக்கு இழுக்கு நேராவண்ணம் செய்வோம் என்றார்.
11 எதிர்ப்படையினர் பாளையத்தை விட்டுப் புறப்பட்டு அவர்களுக்கு எதிரில் வந்தனர். குதிரை வீரர் இரு பிரிவுகளாகப் பிரிந்தனர். கவணெறிவோரும் அம் பெய்கிறவர்களும் படைக்குமுன் சென்றார்கள். படையின் முன் வரிசையில் இருந்தவர்கள் மாவீரர்.
12 பாக்கீது வலப்பக்கத்தில் இருந்தான். படை இரு பிரிவுகளாய்ச் சென்றது. அவர்கள் எக்காளம் ஊதினார்கள்.
13 யூதாஸ் பக்கம் இருந்தவர்களும் எக்காளம் ஊதினார்கள். படை ஓசையால் பூமி அதிர்ந்தது. காலை முதல் மாலை வரை போர் நடந்தது.
14 பாக்கீதின் படை வலப்பக்கத்தில் வலிமை மிக்கதாயிருக்கிறதென்று யூதாஸ் கண்டு, தம் வீரரோடு அதைத் தாக்கினார்.
15 வலப்பக்கத்துப் படை சிதறுண்டு போகவே, அதை அசோத்துஸ் மலை வரை பின்தொடர்ந்து போனார்.
16 வலப்பக்கத்துப் படை முறியடிக்கப்பட்டதைக் கண்ட இடப்பக்கத்துப் படை யூதாசையும் அவருடன் இருந்தவர்களையும் பின்தொடர்ந்து சென்றது.
17 சண்டை வலுப்பெறவே, இரு தரப்பிலும் பலர் காயப்பட்டு மாண்டனர்.
18 யூதாசும் மாண்டார்@ மற்றவர்களோ ஓடி விட்டார்கள்.
19 யோனத்தாசும் சீமோனும் தங்கள் சகோதரர் யூதாசைத் தூக்கிக் கொண்டு போய் மோதின் நகரத்தில் தங்கள் முன்னோர் கல்லறையில் அடக்கம் செய்தார்கள்.
20 இஸ்ராயேல் மக்களெல்லாரும் அவரைப் பற்றி வெகு துக்கம் கொண்டாடி, பலநாள் அழுது புலம்பினார்கள்:
21 இஸ்ராயேல் மக்களைக் காப்பாற்றி வந்த அந்த மாவீரர் எப்படி மாண்டார் என்றார்கள்.
22 யூதாஸ் புரிந்த பிற போர்களைப்பற்றியும், அவர் வலிமை, புகழ் பற்றியும் இவ்விடத்தில் எழுதப்படவில்லை. ஏனென்றால், அது அதிகமாய் விரிந்துபோகும்.
23 யூதாஸ் இறந்த பின் தீயவர் இஸ்ராயேலின் எல்லைகளெங்கும் நடமாடினார்கள்.
24 தீயவர்கள் நாலா பக்கத்திலும் தலைகாட்டினார்கள். அக்காலத்தில் பெரியதொரு பஞ்சம் உண்டாகவே, நாட்டு மக்கள் அனைவரும் பாக்கீதுக்குத் தங்களைத் தாமே கையளித்தார்கள்.
25 பாக்கீது தீயவரைத் தேர்ந்துகொண்டு, அவர்களை நாட்டுக்குத் தலைவர்களாக நியமித்தான்.
26 அவர்கள் யூதாசின் நண்பரைத் தேடிப்பிடித்துப் பாக்கீதிடம் கூட்டி வந்தார்கள். அவன் அவர்கள் மீது பழி சுமத்தி அவர்களை இகழ்ந்தான்.
27 இஸ்ராயேலில் இறைவாக்கினர் ஒருவரும் காணப்படாமையால், அதுவரை நேர்ந்திராப் பெரும் கலக்கம் அவர்களுக்கு அப்போது உண்டானது.
28 யூதாசின் நண்பரெல்லாரும் கூடி யோனத்தாசை நோக்கி:
29 உன் சகோதரர் இறந்த நாள் முதல் நம் பகைவர் மீதும் பாக்கீதின் மீதும், நம் இனத்தைப் பகைக்கிறவர்கள் மீதும், எதிர்த்துப் போராட அவரை ஒத்தவன் ஒருவனும் இல்லை.
30 ஆதலால், இன்று உன்னையே எங்கள் தலைவராகவும் படைத்தளபதியாகவும் தேர்ந்துகொண்டோம் என்று கூறினார்கள்.
31 அப்பொழுது யோனத்தாசும் தம் சகோதரர் யூதாசுக்குப் பதிலாய்த் தலைமை ஏற்றார்.
32 இதை அறிந்த பாக்கீது அவரைக் கொல்லத் தேடினான்.
33 யோனத்தாசும் அவர் சகோதரன் சீமோனும் அவரோடு இருந்தவர்களும் இதைக் கேள்வியுற்று, தேக்குவா எனும் பாலைவனத்திற்கு ஓடிப்போய், ஆஸ்பார் ஏரிக்கரையின் ஓரமாய்த் தங்கினார்கள்.
34 இதை அறிந்த பாக்கீது தன் படைகளோடு யோர்தானைக் கடந்து, ஓய்வுநாளில் வந்து சேர்ந்தான்.
35 யோனத்தாஸ் மக்கட்தலைவனாகத் தம் சனோதரனை அனுப்பி, தம் நண்பராகிய நபுதேயரிடமிருந்த திரளான ஆயுதச் சேமிப்புகளைத் தமக்கு இரவலாகக் கொடுக்கும்படி கேட்டார்.
36 யாம்ரியின் மக்கள் மதாபாவினின்று புறப்பட்டு அருளப்பனைப் பிடித்து, அவனிடம் இருந்தவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டார்கள்.
37 அதன் பிறகு யாம்ரியின் மக்கள் சிறப்பான திருமணங்கள் செய்கிறார்களென்றும், மிகச் சிறப்பாய் கானான் நாட்டுப் பெரிய பிரபுக்களுள் ஒருவரின் மகளைப் பெண் கொள்கிறார்களென்றும் யோனத்தாசுக்கும் அவர் சகோதரன் சீமோனுக்கும் தெரிய வந்தன.
38 அவர்கள் தங்கள் சகோதரன் அருளப்பன் கொலையுண்டதை நினைத்து, மலையில் மறைவாய் ஒளிந்து கொண்டிருந்தனர்.
39 தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்தனர். வெகு ஆடம்பர ஆரவாரம் தெரிந்தது. மணவாளனும், அவன் நண்பர், சகோதரரும் மேள வாத்தியங்களோடும் ஆயுதம் தாங்கியவர்களோடும் தங்கள் எதிரில் வரக் கண்டார்கள்.
40 தாங்கள் பதுங்கியிருந்த இடத்தினின்று எழுந்து அவர்களைக் கொன்று பலரைக் காயப்படுத்தவே, மற்றவர்கள் மலைகளுக்கு ஓடிப் போனார்கள். அவர்கள் பொருட்களையும் கொள்ளையடித்தார்கள்
41 திருமணக் கொண்டாட்டம் துக்கமாக மாறினது. மேள வாத்தியங்களும் அழுகைக் குரலாய் மாறின.
42 தங்கள் சகோதரனுடைய இரத்தத்துக்காக அவர்கள் பழிவாங்கினார்கள், பின்னர் யோர்தான் நதிக் கரைக்குத் திரும்பினார்கள்.
43 இதைக் கேள்விப்பட்ட பாக்கீதும் பெரும்படையோடு யோர்தான் கரைக்கு ஓய்வு நாளில் வந்து சேர்ந்தான்.
44 யோனத்தாஸ் தம்முடன் இருந்தவர்களை நோக்கி: எழுந்து நம்முடைய பகைவேராடு சண்டை செய்வோம். ஏனென்றால், இன்று நேற்றைப் போலவும் அல்ல, அதற்கு முந்தின நாளைப் போலவும் அல்ல.
45 முன்னால் பகைவர்களும், பின்னால் யோர்தான் நதியும், அங்குமிங்கும் சதுப்பு நிலங்களும் காடுகளும் இருக்கின்றன. நாம் தப்பிப்போக இடமில்லை.
46 நம்முடைய பகைவர் கைகளினின்று நம்மைக் காப்பாற்ற விண்ணை நோக்கிக் கூக்குரல் எழுப்புங்கள் என்று சொல்லிப் போர்தொடுத்தார்.
47 பாக்கீதைத் தாக்க யோனத்தாஸ் கையை நீட்டினார்.
48 அவனோ பின்னடைந்தான். யோனத்தாசும் அவரோடு இருந்தவர்களும் யோர்தான் நதியில் குதித்து, அதை நீந்திக் கடந்தார்கள்.
49 அன்று பாக்கீது படையில் ஆயிரம் பேர் மாண்டார்கள்@ எஞ்சியவர் யெருசலேம் திரும்பினர்.
50 அவர்கள் யூதேயாவில் வலிமை மிக்க கோட்டைகளைக் கட்டினார்கள். யெரிக்கோ, அம்மாவும், பெத்தோரோன், பேத்தேல், தாம் நாத்தா, பாரா, தோப்போ முதலிய நகரங்களில் இருந்த கோட்டைகளையும் மதில்களினாலும் கதவுகளினாலும் பூட்டுகளினாலும் வலுப்படுத்தினார்கள்.
51 பாக்கீது இஸ்ராயேலரைத் துன்பப்படுத்த அந்தக் கோட்டைகளில் காவலரையும் வைத்தான்.
52 பெத்சூராவிலும் காசாராவிலும் கோட்டையையும் வலுப்படுத்தி, காவலரையும் நியமித்து, அவர்களுடைய உணவுக்கும் ஏற்பாடு செய்தான்.
53 அந்நகரங்களிலுள்ள பிரபுக்களின் மக்களைப் பிணையாளிகளாகக் கொண்டு, அவர்களை யெருசலேம் கோட்டைக்குள் காவலில் வைத்தான்.
54 நூற்றைம்பத்து மூன்றாம் ஆண்டு இரண்டாம் மாதம் ஆல்சிமுஸ் என்பவன் கடவுள் ஆலயத்தின் உட்சுவர்களை இடிக்கவும், இறைவாக்கினார்கள் செய்தவற்றை அழிக்கவும் கட்டளையிட்டான்@ அழிக்கவும் ஆரம்பித்தான்.
55 அப்பொழுது ஆல்சிமுஸ் கடவுளால் தண்டிக்கப்பட்டான். அவன் துவக்கின அலுவல்கள் நின்று போயின. அவன் வாய் அடைபட்டது. பாரிசவாயுவினால் பீடிக்கப்பட்டு, ஒன்றும் பேசமுடியாமலும், தன் குடும்ப காரியங்களை ஒழுங்குபடுத்த முடியாமலும் இருந்தான்.
56 இவ்வாறு மிகவும் துன்பப்பட்டு ஆல்சிமுஸ் இறந்தான்.
57 ஆல்சிமுஸ் இறந்ததைக் கண்டு பாக்கீது அரசனிடம் திரும்பினான். நாடு இரண்டாண்டுக் காலம் அமைதியாய் இருந்தது.
58 தீயவர் தங்களுக்குள்: யோனத்தாசும் அவனோடு இருக்கிறவர்களும் நம்பிக்கையுடன் அமைதியோடு வாழ்கிறார்கள். இப்போது நாம் பாக்கீதை அழைத்து வருவோமேயானால், ஒரே இரவில் அவன் அவர்கள் எல்லாரையும் பிடித்துக் கொள்வான் என்று எண்ணி,
59 அவனிடம் சென்று அவனுக்கு ஆலோசனை கொடுத்தார்கள்.
60 அவன் பெரும் படையோடு வரத் தலைப்பட்டான். யோனத்தாசையும் அவரோடு இருந்தவர்களையும் பிடிக்கும்படி இரகசியமாகத் தன் தோழர்களுக்குக் கடிதம் அனுப்பினான். அவர்களுடைய திட்டம் வெளியாகி விட்டதால், அவர்களால் ஒன்றும் செய்யக் கூடவில்லை.
61 யோனத்தாஸ் அத்தீய எண்ணத்திற்குக் காரணமாய் இருந்த அந்நாட்டு மனிதரில் ஐம்பது பேரைப் பிடித்துக் கொலைசெய்தார்.
62 யோனத்தாசும் சீமோனும் அவர்களோடு இருந்தவர்களும் பாலைவனத்தில் இருந்த பெத்பேசன் எனும் இடம் சேர்ந்து, இடிக்கப்பட்டவைகளைக் கட்டி வலுப்படுத்தினார்கள்.
63 பாக்கீது இதை அறிந்து, படை முழுவதையும் கூட்டி, யூதேயோவில் இருந்தவர்களுக்குத் தெரிவித்தான்.
64 பெத்பேசனுக்கு மேல்புறம் பாளையம் இறங்கி, பலநாள் முற்றுகை போட்டிருந்தான்@
65 யோனத்தாஸ் தன் சகோதரன் சீமோனை நகரில் விட்டுவிட்டு, நாட்டுக்குள் சென்று பெரும்படையோடு வந்தார்.
66 ஓதாரன் என்பவனையும், அவன் சகோதரனையும், பாசெரோன் மக்களையும் அவர்கள் கூடாரங்களில் தாக்கி, அவர்களை அழிக்கத் தொடங்கினார்.
67 வீரத்திலும் அதிகரித்தார். சீமோனும் அவனோடு இருந்தவர்களும் நகரை விட்டுப் புறப்பட்டுப் பகைவரின் போர்க்கருவிகளைக் கொளுத்திவிட்டார்கள்.
68 பாக்கீதை எதிர்த்துச் சண்டை செய்து, அவனைத் தோற்கடித்தார்கள். அவன் எண்ணங்களையும் திட்டங்களையும் அழித்து, அவனை மிகுந்த துன்பத்துக்கு உட்படுத்தினார்கள்.
69 அந்நாட்டிற்கு வரும்படி தனக்கு ஆலோசனை கூறியிருந்த தீயவர் மேல் கோபம் கொண்டு, அவர்களில் பலரைப் பாக்கீது கொன்றான்@ தானும் மற்றவர்களோடு தன் நாட்டிற்குத் திரும்பிப்போகவும் நினைத்தான்.
70 அதை அறிந்த யோனத்தாஸ் அவனுடன் சமாதானம் செய்வதற்கும், சிறையில் அடைபட்டவர்களை விடுவிப்பதற்கும் தூதர்களை அனுப்பினார்.
71 பாக்கீது நன்மனத்தோடு ஏற்றுக்கொண்டு, அவர் கேட்டதற்கு இசைந்து தன் வாழ்நாள் முழுவதும் அவருக்குத் தீமையே செய்வதில்லையென்று ஆணையிட்டுக் கூறினான்.
72 முன்பு தான் யூதேயா நாட்டில் சிறைப்படுத்தினவர்களை விடுவித்தான்@ தன் நாடு திரும்பிப்போய், இனி மேல் வருவதில்லையென்று தீர்மானம் செய்து கொண்டான்.
73 இஸ்ராயேலில் போர் ஒழிந்தது, யோனத்தாஸ் மக்மாசில் வாழ்ந்திருந்து மக்களுக்கு நீதி செலுத்தி வந்தார்@ இஸ்ராயேலில் தீயவரை அழித்தொழித்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு, பாக்கீது, அவன், யூதாஸ், யோனத்தாஸ், ஏற்பாடு, தங்கள், யோனத்தாசும், சண்டை, அவர், அவர்களை, இருந்தவர்களும், கண்டு, அவரோடு, ஆல்சிமுஸ், பழைய, யோர்தான், சீமோனும், சகோதரன், மக்கபே, தீயவர், வந்து, வலிமை, மக்கள், கொண்டு, இஸ்ராயேலில், மீதும், இருந்த, சகோதரர், அறிந்த, வெகு, நோக்கி, பாளையம், யெருசலேம், அப்பொழுது, சென்று, ஆகமம், அவனோடு, பெரும், பகைவர், நாடு, பாக்கீதை, மேல், செய்து, பிடித்துக், இன்று, யூதாசின், கூட்டி, ஆலோசனை, அழிக்கவும், நம்முடைய, பெரும்படையோடு, எழுந்து, போலவும், அல்ல, நாம், இறந்த, காவலரையும், அவனிடம், இதைக், அவர்களுடைய, வலுப்படுத்தினார்கள், எனும், சேர்ந்தான், யாம்ரியின், வைத்தான், ஒன்றும், போர், நம்மால், தம்முடன், பேர், பலர், எதிர்த்துச், என்றார், என்றார்கள், பிறகு, இப்போது, மிகவும், பகைவரின், யூதேயா, ஆன்மிகம், திருவிவிலியம், அனுப்பினான், பலரைக், குதிரை, மீது, ஆண்டு, அதற்கு, நமது, பாக்கீதின், ஊதினார்கள், எக்காளம், வலப்பக்கத்துப், பின்தொடர்ந்து, பலநாள், இஸ்ராயேல், இருந்தவர்களையும், சென்றது, இருந்தான், விட்டுப், செய்வோம், காலம், புறப்பட்டு, அவர்களுக்கு, வலப்பக்கத்தில், மாவீரர், எதிரில், ஏனென்றால்