1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 11
2 சமாதான வார்த்தைகளைச் சொல்லி, சீரியாவிற்குச் சென்றான். நகர மக்கள் தங்கள் நகரங்களின் கதவுகளைத் திறந்து வைத்து அவனுக்கு எதிர் கொண்டு போனார்கள். ஏனென்றால், அவன் தன் மாமனானபடியால், அவனுக்கு எதிர் கொண்டு போகும்படி அலெக்சாந்தர் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தான்.
3 தோலெமேயுஸ் நகருள் புகுந்த போது, ஒவ்வொரு நகரிலும் காவலரை நியமித்தான்.
4 அவன் அசோத்துஸ் நகருக்கு அருகே வந்த போது, கொளுத்தப்பட்ட தாகோன் ஆலயத்தையும், அசோத்துஸ் நகரத்தையும், இடிப்பட்ட மற்ற இடங்களையும், பூமி மேல் கிடந்த பிணங்களையும், சண்டையில் விழுந்தவர்களுக்கு வழியில் அமைக்கப்பட்ட கல்லறைகளையும் அவனுக்குக் காண்பித்தார்கள்.
5 அவன் மனத்தில் பொறாமை உண்டாகும்படி: இவைகளை யோனத்தாஸ் தான் செய்தான் என்றார்கள். ஆனால், மன்னன் மௌனமாய் இருந்தான்.
6 யோனத்தாஸ் யோப்பெயுக்குச் சிறப்புடன் வர, இருவரும் சந்தித்தனர். அவ்விடத்திலேயே இரவு தங்கினார்கள்.
7 எலுயுத்தெருஸ் எனும் நதி வரை அவர் அலெக்சாந்தர் கூடப்போய் விட்டுவிட்டு, யெருசலேம் திரும்பினார்.
8 தோலெமேயுஸ் கடலோரத்திலிருந்த சேலேயூசியா வரையிருந்த நகரங்களைக் கைப்பற்றிக் கொண்டு, அலெக்சாந்தருக்குக் கேடு பல நினைத்தான்.
9 தெமெத்திரியுசிடம் தூதரை அனுப்பி, நமக்குள் உடன்படிக்கை செய்து கொள்வோம். அலெக்சாந்தரிடம் இருக்கும் என் புதல்வியை உனக்குக் கொடுக்கிறேன். நீ உன் முன்னோர் நாட்டில் ஆட்சி செலுத்தலாம்.
10 அவனுக்கு என் புதல்வியைக் கொடுத்ததன் பொருட்டு வருந்துகிறேன். என்னை அவன் கொலை செய்யத் தேடினதினால் தான் அப்படிச் செய்தேன் என்று சொல்லி,
11 தான் அவனது நாட்டை விரும்பினபடியால், இப்படியாக அவனைக் குற்றம் சாட்டினான்.
12 தன் புதல்வியை அவனிடத்தினின்று நீக்கி, தெமெத்திரியுசுக்குக் கொடுத்து விட்டான்@ அலெக்சாந்தரையும் விட்டு விலகினான். ஆதலால், அவன் பகையும் வெளியாயிற்று.
13 பிறகு தோலெமேயுஸ் அந்தியோக்கியாவில் புகுந்து, எகிப்து, ஆசியா ஆகிய நாடுகளின் இருமுடிகளையும் அணிந்து கொண்டான்.
14 அப்பொழுது அலெக்சாந்தர் சிலிசியாவில் இருந்தான். ஏனென்றால், அவ்விடம் இருந்தவர்கள் கலகம் செய்து கொண்டிருந்தார்கள்.
15 அலெக்சாந்தர் கேள்விப்பட்டு அவனை எதிர்த்து வந்தான். தோலெமேயுசும் தன் சேனைகளுடன் வலிமையோடு அவனைத் தாக்கித் துரத்தியடித்தான்.
16 உதவி தேடும்படியாக அலெக்சாந்தர் அராபிய நாடு ஓடினான்.
17 தொலெமேயுசின் புகழ் பரவியது. அராபியத் தலைவன் சாப்தியேல் என்பவன் அலெக்சாந்தருடைய தலையை வெட்டித் தோலெமேயுசுக்கு அனுப்பினான்.
18 மூன்று நாட்களுக்குப் பிறகு தோலெமேயுஸ் இறந்தான்@ பாளையத்தில் இருந்தவர்கள் கையால் கோட்டைக்குள் இருந்தவர்களும் மாண்டார்கள்.
19 நூற்றறுபத்தேழாம் ஆண்டு தெமெத்திரியுஸ் அரியணை ஏறினான்.
20 அக்காலத்தில் யோனத்தாஸ் யெருசலேமிலிருந்த கோட்டையைப் பிடிப்பதற்கு யூதேயாவில் இருந்தவர்களைத் திரட்டி, அதைத் தாக்குவதற்கு நிறையப் போர்க்கருவிகளைச் செய்தார்.
21 தங்கள் இனத்தாரையே பகைத்திருந்த தீயவர் சிலர் தெமெத்திரியுஸ் மன்னனிடம் சென்று, யோனத்தாஸ் கோட்டையை முற்றுகையிட்டிருப்பதாக அறிவித்தார்கள்.
22 இதைக் கேட்டு அவன் கோபம் கொண்டு, உடனே தோலெமாயிது வந்து, கோட்டையை முற்றுகையிடாமல் விரைவில் தன்னை வந்து காணும்படி யோனத்தாசுக்கு எழுதினான்.
23 இதை அறிந்த யோனத்தாஸ், கோட்டை முற்றுகையை நடத்தும்படி கட்டளையிட்டார்@ இஸ்ராயேலில் முதியோரையும் குருக்களையும் தேர்ந்து கொண்டு, தம்மை ஆபத்துக்குக் கையளித்தார்.
24 பொன், வெள்ளி, ஆடைகள், இன்னும் பல பரிசுகளை எடுத்துக்கொண்டு தோலெமாயிதுவில் இருந்த தெமெத்திரியுஸ் மன்னனிடம் சென்றார். அவனது தயவைப் பெற்றார்.
25 அவர் இனத்தாரில் சில தீயவர் அவரைக் குற்றம் சாட்டினார்கள்.
26 ஆனால், மன்னன் தனக்கு முன்னிருந்தவர்கள் செய்தவண்ணம் அவருக்கு மரியாதை காட்டி, எல்லாருக்கும் முன்பாக அவரை மேன்மைப்படுத்தினான்.
27 தலைமைக் குருத்துவத்தையும், அவருக்கிருந்த மற்றப் பதவிகளையும் உறுதிப்படுத்தி, அவரைத் தன் நண்பரில் முதல்வராய் ஏற்றுக் கொண்டான்.
28 யூதேயாவையும் மூன்று மாவட்டங்களையும் சமாரியாவையும், அதைச் சேர்ந்த ஊர்களையும் வரி செலுத்துவதினின்று விலக்கும்படி யோனத்தாஸ் மன்னனை மன்றாடி, தாம் முந்நூறு தாலேந்துகள் கொடுப்பதாயும் வாக்குக் கொடுத்தார்.
29 மன்னன் அதற்கு இசைந்து, இவைகளையெல்லாம் பற்றி யோனத்தாசுக்கு எழுதித் தந்த விதமாவது:
30 தெமெத்திரியுஸ் மன்னர் யோனத்தாசுக்கும், யூத இனத்தாருக்கும் வாழ்த்துக் கூறுகிறோம்.
31 உங்களைப் பற்றி நம் தந்தை லாஸ்தேனுக்கு நாம் எழுதிய கடிதத்தின் நகல் ஒன்று உங்களுக்கும் அனுப்பினோம்:
32 தெமெத்திரியுஸ் மன்னர், தந்தை லாஸ்தேனுசுக்கு வாழ்த்துக் கூறுகிறோம்.
33 நம் நண்பர்களும் நம்மிடம் உண்மையுள்ளவர்களுமான யூத குலத்தாருக்கு, அவர்கள் நம் மீது கொண்டிருக்கும் பற்றுதலுக்குப் பதிலாக அவர்களுக்கு நன்மை செய்யத் தீர்மானித்தோம்.
34 ஆதலால், யூதேயா முழுவதையும், சமாரியாவினின்று பிரிக்கப்பட்ட லிதா, ராமாத்தான் முதலிய மூன்று நகரங்களையும், அவற்றைச் சேர்ந்த ஊர்களையும், அவர்களின் உடைமையாக உறுதிப்படுத்தியுள்ளோம். முன்பு, மன்னர் இவைகளிடமிருந்து வாங்கி வந்த வருமானத்தையும், நிலம், மரம், இவைகளிலிருந்து வந்த வருமானத்தையும், யெருசலேமில் பலியிடுகிறவர்களுடைய பராமரிப்புக்காக ஏற்படுத்தத் தீர்மானித்தோம்.
35 நமக்குச் சேரவேண்டிய பத்திலொரு பகுதியும் திறையும் உப்புத் தீர்வையும், நமக்குக் கொண்டு வர வேண்டிய முடிகளையும் இது முதல் மன்னித்தோம்.
36 இவையெல்லாம் அவர்களுக்குக் கொடுத்து விடுகிறோம். செய்த ஏற்பாடுகள் யாவும் இது முதல் என்றும் உறுதியாய் இருக்கக்கடவன.
37 இக்கட்டளையினுடைய நகல் ஒன்று எடுத்து, யோனத்தாசுக்குக் கொடுத்து, புனித மலையில் காணக்கூடிய இடத்தில் அதை வைக்கச் செய்யவும்.
38 நாடு அமைதியில் இருப்பதையும், எவரும் தன்னை எதிர்க்காதிருப்பதையும் தெமெத்திரியுஸ் மன்னன் கண்டு, தீவுகளில் திரட்டிய அன்னியருடைய சேனையைத் தவிர மற்ற சேனைகளுக்கெல்லாம் உத்தரவளித்து, ஒவ்வொருவனையும் தன்தன் இருப்பிடம் அனுப்பினான். இவ்விதம் செய்ததால் அவன் முன்னோரின் சேனைகள் யாவும் அவனுக்கு எதிராகக் கிளம்பின.
39 முன்னர் அலெக்சாந்தர் பக்கம் இருந்த திரிபோன் என்பவன் தெமெத்திரியுஸ் மீது சேனைகள் முறையிடுவதைக் கண்டு அலெக்சாந்தரின் புதல்வன் அந்தியோக்கஸ் என்பவனை வளர்த்து வந்த அராபிய மன்னன் எமால்குவேலிடம் சென்று,
40 தந்தைக்குப் பதிலாய் ஆட்சிசெய்வதற்கு அவனைத் தன்னிடம் ஒப்புவிக்கும்படி வருந்திக் கேட்டுக்கொண்டான்@ தெமெத்திரியுஸ் செய்த யாவையும், சேனைகளுக்கு அவன்மீதுள்ள பகையையும் சொல்லிக் காட்டினான்@ பலநாள் அவ்விடத்தில் தங்கியிருந்தான்.
41 யெருசலேம் கோட்டையிலும், மற்றக் கோட்டைகளிலும் இருந்தவர்கள் இஸ்ராயேலைத் துன்புறுத்தியதால், அவர்களைத் துரத்தி விடும்படி தெமெத்திரியுஸ் யோனத்தாஸ் ஆளனுப்பினார்.
42 தெமெத்திரியுஸ் யோனத்தாசுக்கு: உனக்கும் உன் இனத்தாருக்கும் நான் உதவுவது இப்பொழுது மட்டுமன்று, இன்னும் வாய்ப்பு கிடைக்கும் போது உன்னையும் உன் இனத்தாரையும் மேன்மைப்படுத்துவேன்.
43 இப்போதோ என் சேனைகள் யாவும் போய்விட்டபடியால் உன் படைகளை எனக்கு உதவியாக அனுப்பினால் நலம் என்று சொல்லியனுப்பினான்.
44 யோனத்தாஸ் மூவாயிரம் படைவீரரை அந்தியோக்கியாவுக்கு அனுப்பினார். அவர்கள் மன்னனிடம் சேரவே, மன்னன் அவர்கள் வந்ததன் பொருட்டு மகிழ்ச்சி கொண்டான்.
45 நகரத்தில் இருந்த இலட்சத்து இருபதினாயிரம் பேர் மன்னனைக் கொலை செய்யத் தேடினார்கள்.
46 மன்னன் அரண்மனைக்குள்ளே ஓடி ஒளிந்து கொண்டான். நகரத்தில் இருந்தவர்கள் வீதிகளில் நின்று கொன்று அவன் மீது போர் தொடுத்தார்கள்.
47 மன்னன் யூதரைத் தன் உதவிக்கு அழைத்தான். அவர்கள் அவன் உதவிக்குச் சென்று நகரத்தில் சுற்றி,
48 அன்று இலட்சம் பேரைக் கொன்று, நகரைக் கொளுத்தி விட்டு, ஏராளமான பொருட்களைக் கொள்ளையடித்து மன்னனைக் காப்பாற்றினார்கள்.
49 யூதர் தாங்கள் நினைத்ததெல்லாம் அடைந்தார்களென்று நகரத்தில் இருந்தவர்கள் கண்டு, மனம் தளர்ந்து மன்னனிடம் சென்று:
50 எங்கள்மீது இரக்கம் காட்டும்@ யூதர்கள் எங்களையும் நகரத்தையும் அழிக்காதிருக்கட்டும் என்று மன்றாடி,
51 தங்கள் போர்க்கருவிகளை எறிந்து விட்டுச் சமாதானம் செய்துகொண்டார்கள். யூதர்கள் அரசன் முன்பாகவும், அவன் நாட்டில் அனைவருக்கும் முன்பாகவும், பேரும் புகழும் பெற்று, பற்பல பொருட்களோடு யெருசலேம் திரும்பினார்கள்.
52 தெமெத்திரியுஸ் தன் நாட்டில் ஆட்சி புரிந்தான்.
53 நாடும் அமைதியாய் இருந்தது. ஆனால், தான் சொன்ன யாவற்றையும் மறுத்து யோனத்தாசை விட்டு நீங்கி, அவரால் தான் பெற்ற நன்மைகளுக்கு பதில்நன்றி காட்டாமல் அவரை மிகவும் துன்புறுத்தினான்.
54 இதன் பிறகு திரிபோன் இளம் வயதினனான அந்தியோக்கஸ் என்பவனைக் கூட்டிக் கொண்டு திரும்பிவர, அவனும் முடியணிந்து அரசாளத் தொடங்கினான்.
55 தெமெத்திரியுஸ் அனுப்பிய சேனைகளெல்லாம் அந்தியோக்கஸ் என்பவனோடு சேர்ந்து, அவனை எதிர்க்கவே அவன் தோல்வியடைந்து ஓடினான்.
56 திரிபோன் யானைகளையும் பிடித்து அந்தியோக்கியாவைக் கைப்பற்றினான்.
57 இளைஞன் அந்தியோக்கஸ் யோனத்தாசுக்கு: நீ மன்னருடைய நண்பரில் ஒருவனாய் இருக்கும்படியாக உன்னைத் தலைமைக்குருவாக ஏற்படுத்தி, நான்கு நகர்களுக்குத் தலைவனாக நியமித்தோம் என்று எழுதி, அவர் உபயோகத்துக்காகப் பொற்பாத்திரங்களை அனுப்பி,
58 பொற்பாத்திரத்தில் அருந்தவும், அரசவுடை அணியவும், பொற்சரடு அணிந்துகொள்ளவும் அதிகாரமளித்தான்.
59 அவர் சகோதரன் சீமோனைத் தீர் எல்லையினின்று எகிப்து எல்லைகள் வரை தலைவனாக நியமித்தான்.
60 யோனத்தாஸ் புறப்பட்டு, ஆற்றுக்கு அப்புறமிருக்கும் நகரங்களுக்குச் சென்றார். சீரியா படைகள் யாவும் அவரது உதவிக்கு வந்தன. அவர் அஸ்கலோன் நகரம் சேரவே, எல்லாரும் மிக்க மரியாதையோடு அவரை எதிர்கொண்டு அழைத்தார்கள்.
61 அவர் அவ்விடமிருந்து காசாவுக்குப் போனார். காசாவில் இருந்தவர்கள் கதவுகளை அடைத்துக் கொண்டு உள்ளே இருந்தார்கள். அவர் அதை முற்றுகையிட்டு, சுற்றிலுமிருந்த ஊர்களைக் கொளுத்திக் கொள்ளையடித்தார்.
62 காசா நகரத்தார் கேட்டுக் கொண்டதற்கு அவர் இசைந்தார்@ அவர்களின் மக்களைப் பிணையாளிகளாக ஒப்புக்கொண்டு, அவர்களை யெருசலேமுக்கு அனுப்பினார்@ தமஸ்கு நகர் வரையிலுமுள்ள நாட்டைக் கடந்தார்.
63 தெமெத்திரியுசின் படைத்தலைவர்கள் தம்மை எதிர்த்துத் தடுப்பதற்காகக் கலிலேயாவிலுள்ள காதேஸ் நகரத்தில் பெரும்படையோடு கூடியிருப்பதை யோனத்தாஸ் கேள்விப்பட்டு, அவர்களை எதிர்த்துப் போனார்@
64 தம் சகோதரன் சீமோனை நாட்டிலேயே விட்டு விட்டுப் போனார்.
65 சீமோன் பெத்சூராவைத் தாக்கி, பலநாள் எதிர்த்துப் போர்செய்து, அதில் இருந்தவர்களை வெளியே போகவிடாமல் அடைத்து வைத்திருந்தான்.
66 அவர்கள் அவனோடு சமாதானம் செய்து கொள்ளும்படி கேட்டார்கள். அவன் அவர்கள் கேட்டபடியே இசைந்து, அவர்களை அவ்விடத்திலிருந்து அகற்றி நகரையும் பிடித்து, அதில் காவல் வைத்தான்.
67 யோனத்தாஸ் தம் படைகளோடு கெனேசார் கடலோரம் வந்து, பொழுது விடியுமுன் அசோர் சமவெளியில் காத்திருந்தார்.
68 அன்னியர் படை சமவெளியில் அவரை எதிர்த்து வந்து, மலைகளில் பதுங்கியிருந்தது. அவர் அவர்களை எதிர்த்துப்போனார்.
69 பதுங்கியிருந்தவர்கள் எழுந்து போர் செய்தார்கள்.
70 யோனத்தாசுடன் இருந்தவர்கள் எல்லாரும் ஓடினார்கள்@ படைத்தலைவர்களான அப்சலோமின் புதல்வன் மத்தத்தியாசும், கால்பி புதல்வன் யூதாசும் தவிர வேறு ஒருவரும் இல்லை.
71 யோனத்தாஸ் தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு மண்ணைத் தம் தலை மேல் போட்டுக் கடவுளை மன்றாடினார்.
72 போர் செய்தவர்களை எதிர்த்துப் போய், அவர்களை முறியடித்து வெற்றியடைந்தார்.
73 அவரிடமிருந்து ஓடினவர்கள் இதைக்கண்டு, திரும்பி வந்து, காதேசில் பகைவர் பாளையம் வரையிலும் அவர்களைத் துரத்திப் பின்தொடர்ந்து அவ்விடம் சேர்ந்தார்கள்.
74 அன்று பகைவரில் மூவாயிரம் பேர் மாண்டார்கள். யோனத்தாசும் யெருசலேம் திரும்பினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
1 மக்கபே ஆகமம் - பழைய ஏற்பாடு, அவன், யோனத்தாஸ், தெமெத்திரியுஸ், அவர், கொண்டு, மன்னன், இருந்தவர்கள், அலெக்சாந்தர், நகரத்தில், ஏற்பாடு, அவர்களை, தான், வந்து, தோலெமேயுஸ், வந்த, மன்னனிடம், சென்று, யோனத்தாசுக்கு, அவரை, யாவும், அந்தியோக்கஸ், விட்டு, யெருசலேம், கொண்டான், பழைய, அவனுக்கு, கொடுத்து, பிறகு, மக்கபே, மன்னர், புதல்வன், போர், எதிர்த்துப், திரிபோன், சேனைகள், செய்யத், மீது, கண்டு, இருந்த, மூன்று, எகிப்து, நாட்டில், செய்து, ஆகமம், போது, தங்கள், சொல்லி, தவிர, அலெக்சாந்தரின், அவர்களைத், பலநாள், எதிர், நாட்டைக், வருமானத்தையும், ஒன்று, நகல், தந்தை, ஏனென்றால், தீர்மானித்தோம், மூவாயிரம், அவர்களின், செய்த, பேர், சகோதரன், தலைவனாக, பிடித்து, எல்லாரும், போனார், சமவெளியில், அதில், திருவிவிலியம், முன்பாகவும், சமாதானம், மன்னனைக், கூறுகிறோம், ஆன்மிகம், கொன்று, புனித, யூதர்கள், அன்று, உதவிக்கு, சேரவே, அவர்களுக்குக், அராபிய, அவனைத், எதிர்த்து, நாடு, ஓடினான், திரும்பினார், அனுப்பினான், என்பவன், அவனை, கேள்விப்பட்டு, குற்றம், அவனது, பொருட்டு, ஆட்சி, ஆதலால், அனுப்பி, அவ்விடம், புதல்வியை, மாண்டார்கள், இருந்தான், ஊர்களையும், நண்பரில், சென்றார், மன்றாடி, இசைந்து, இனத்தாருக்கும், கொலை, பற்றி, நியமித்தான், இன்னும், மற்ற, மேல், தீயவர், கோட்டையை, நகரத்தையும், தம்மை, அசோத்துஸ், தன்னை, வாழ்த்துக்