வேல் விருத்தம் - 7 - வேல் விருத்தம்
பீம்பளாச் - கண்ட சாபு
அண்டங்கள் ஒருகோடி ஆயினுங்க் குலகிரி அனதமாயினு மேவினால் அடைய உருவிப் புறம் போவதல் லது தங்கல் அறியாது சூரனுடலை கண்டம் படப்பொருது காலனுங்க் குலைவுறுங்க் கடியகொலை புரியும் அது செங்க் கனகா சலத்தைக் கடைந்து முனை யிட்டு கடுக்கின்ற துங்க நெடுவேல் தண்டன் தனுத் திகிரி சங்கு கட்கம் கொண்ட தானவான் தகன் மாயவன் தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பற்றலை தமனியச் சுடிகையின் மேல் வண்டொன்று கமலத்து மங்கையும் கடல் ஆடை மகையும் பதம் வருடவே மதுமலர்க் கண்துயில் முகுந்தன் மருகன் குகன் வாகைத் திருக்கை வேலே (வாகைத் திருக்கை வேலே குகன் வாகைத் திருக்கை வேலே) |
கோடிக்கணக்கான உலகங்கள் எதிரே நின்றாலும், கணக்கில்லாத பெரிய மலைகள் எதிரே நின்றாலும், அவைகள் எதிர்த்தால், அவற்றிக்குள் நுழைந்து போய், பின்புறமாக வெளியே போவது அன்றி, தான் எடுத்துக்கொண்ட காரியத்தை முடிக்காமல் தங்கி நின்றது என்கிற சரித்திரமே இல்லாது, சூரபத்மாவின் தேகத்தை, போரில் துண்டு துண்டு¡க வெட்டி, எமனும் அச்சப்படும் வண்ணம், போர்களத்தில் கொடூரமான கொலைகளைச் செய்வதும், பொன் மயமான மேருமலையைக் கடைந்தது போல், கூரிய முனைபடைத்து, கோபம் கொண்டுள்ள, பரிசுத்தமான நெடிய வேல் (அது யாருடையது என வினவினால்) கெளமோதகி என்கிற கதை, சார்ங்கம் என்கிற வில், சுதர்சனம் சக்கரம், பாஞ்சசன்யம் என்கிற சங்கு, நாந்தகம் என்கிற வாள் (இந்த பஞ்ச ஆயுதங்களைக் கொண்டவனும்), அசுரர்களுக்கு எமன் போன்றவனும், மாயாரூபனும், நெருப்பைப்போல் எரியும் கண்கள், வளைந்த கோடுகள், பருத்த உடல், ஆயிரம் தலைமுடிகள் கொண்ட ஆதிசேடனின் பொன்நிறமான, படுக்கையின் மேல், வண்டுகள் மொய்க்கும் செந்தாமரையில் வாசம் செய்யும் ஸ்ரீதேவியும், கடலை ஆடையாகத் தரித்துள்ள பூ தேவியும், தன் திருப்பாதங்களை வருடிக் கொடுக்க, தேன் சிந்தும் தாமரை போன்ற அழகான கண்களை மூடிக் கொண்டு தூங்குகின்ற, மஹாவிஷ்ணுவின் மருமகனும், குக மூர்த்தியின் வெற்றியே காணும் வேலாயுதமே அது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேல் விருத்தம் - 7 - வேல் விருத்தம், Vel Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்கிற, வேலே, திருக்கை, வாகைத், நின்றாலும், கொண்ட, எதிரே, மேல், குகன், சங்கு