வேல் விருத்தம் - 6 - வேல் விருத்தம்
சிந்துபைரவி - கண்ட சாபு
பந்தாடலிற் கழங்க் காடலிற் சுடர் ஊசல் பாடலினொ டாடலின் எலாம் பழந்தெவ்வர் கட்கம் துணித் இந்திரர்க் அரசு பாலித்த திறல் புகழ்ந்தே சந்தாரு நாண்மலர் குழல் அரம்பையர்களும் சசிமங்கை அனையர்த்தாமுன் தன்னை அன்பொடு பாடி ஆடும் ப்ரதாபமும் தலைமையும் பெற்ற வைவேல் மந்தாகினித் தரங்க சடிலருக் அரிய மந்த்ற்ற உபதேச நல்கும் வரதேசிகன் கிஞ்சுகச் சிகா லங்கார வாரணக் கொடி உயர்த்தோன் கொந்தார் மலர்க் கடம்பும் செச்சை மாலையும் குவளையும் செங்க் காந்தளும் கூதாள மலரும் தொடுத்தணியு மார்பினன் கோலத் திருக்கை வேலே (தேசிகன் கோலத் திருக்கை வேலே) |
பல விதமான பந்து ஆட்டங்களிலும், கழச்சிக் காய் ஆட்டங்களிலும், ஒளி வீசுகின்ற ஊஞ்சல் பாடலினோடு, மற்ற கும்மி கோலாட்டம் போன்ற ஆட்டங்களில் எல்லாம், பழைய பகைவர்களான அசுரர்களின் வாளையும் வீரத்தையும் அடக்கி, தேவேந்திரனுக்கு மீண்டும் அரசாட்சியைக் கொடுத்த திறமையைப் புகழ்ந்து, அழகு மிகுந்த புதிய மலர் மாலையை கூந்தலில் அணிந்திருக்கும் ரம்பை, ஊர்வசி, திலோத்தமை போன்ற தேவ மாதர்கள், இந்திராணி, அன்னையர் (முருகனைப் பெற்றெடுத்த கெளரி, கங்கை, கார்த்திகைமார்கள் அனைவரும்), தன்னை அன்போடு புகழ்ந்து பாடி நடனம் புரிகின்ற கீர்த்தியையும், ஆதிபத்யத்தையும், தன்னகத்தே பெற்ற கூரிய வேலாயுதம் (அது யாருடையது என வினவினால்) அலை வீசும் கங்கையை ஜடா முடியில் தரித்திருக்கும் சிவ பெருமானுக்கு, கிடைத்தற்கரிய பிரணவ உபதேசம் செய்த, சிறந்த ஆச்சார்ய மூர்த்தியும், சிவந்த நிறமுள்ள அழகான கொண்டையை உடைய, சேவற் கொடியை உயர்த்தி பிடித்திருப்பவனும், பூங்கொத்துக்கள் நிறைந்த கடப்ப மாலையையும் இருவாச்சி மாலையையும், நீலோர்பலமும் காந்தள் பூவையும், நீலச் சங்கு புஷ்பத்தையும், மாலையாகத் தொடுத்து அணிந்திருக்கும் திருமார்பினை உடைய முருகப் பெருமானின், அழகியத் திருக் கரத்தில் வீற்றிருக்கும் வேலாயுதமே!
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேல் விருத்தம் - 6 - வேல் விருத்தம், Vel Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - புகழ்ந்து, அணிந்திருக்கும், உடைய, மாலையையும், ஆட்டங்களிலும், வேலே, பாடி, பெற்ற, கோலத், திருக்கை, தன்னை