வேல் விருத்தம் - 5 - வேல் விருத்தம்
பாகேஸ்ரீ - கண்ட சாபு
ஆலமாய் அவுணருக் அமரருக் அமுதமாய் ஆதவனின் வெம்மை ஒளிமீது அரியதவ முனிவருக் இந்துவில் தண்ணென்ற் அமைந்த் அன்பருக்கு முற்றா முலமாம் வினை அறுத் அவர்கள் வெம் பகையினை முடித் இந்திரர்க்கும் எட்டா முடிவில் ஆனந்த நல்கும் பதம் அளித் எந்த முதண்டமும் புகழும் வேல் ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்தும் இன்பணைகள் உமிழு முத்தும் இனிவாடை மான் மதம் அகிலோடு சந்தனம் இலவங்க நறவமாருன் தாலமா மரமுதற் பொருள் படைத் திடும் எயினர் தரு வனிதை மகிழ்னன் ஐயன் தனினடம் புரி சமர முருகன் அறுமுகன் குகன் சரவணக் குமரன் வேலே (முதண்ட மும்புகழும் வேல் சரவணக் குமரன் வேலே) |
பகைவர்களாகிய அரக்கர்களுக்கு ஆலகால விஷத்தைப் போல் நின்று அவர்களை அழித்தும், (தன்னைத் துதித்த) தேவர்களுக்கு அமிர்தம் போல் புத்துயிர் கொடுப்பதாயும், சூரியனின் தேஜசை மீறியுள்ள வகையில், செயற்கரிய தவம் செய்து தவக்கினியால் ஜொலிக்கும் ரிஷிகளுக்கு, சந்திரனின் குளிர்ச்சியைப்போல் அவர்களின் தவ வெப்பத்தை சமப்படுத்துவதாய் அமைந்து, தன்னைத் துதிக்கும் அடியவர்களுக்கு, எப்பொழுதும் முற்றுப் பெறாத வகையில் மீண்டும் மீண்டும் கிளம்பி எழும் சஞ்சித பிராப்த வினைகளை அடியோடு ஒழித்து, அந்த அன்பர்களின் அகப்பகை புறப்பகை இரண்டையும் அடியோடு ஒழித்து, தேவர்களுக்குகூட கிடைப்பதற்கு அரிய அழிவில்லாத பேரின்பமாகிய சாயுச்ய பதவியைக் கொடுத்து, எல்லா அண்டங்களும் போற்றும் வேலாயுதம் (அது யாருடையது என வினவினால்) பொருந்தி இருக்கும் பெரிய யானைத் தந்தத்திலிருந்து உயிர்கின்ற முத்துக்களையும், இனிய மூங்கில்களில் இருந்து விழும் முத்துக்களையும், இனிய மணம் வீசும் கஸ்தூரி, அகில், சந்தனம், இலவங்கம் (கிராம்பு), தேன், இவைக¨ள் எல்லாவற்றையும், பனை, மா முதலிய மரங்களையும், தனது சொத்துக்களாக கொண்டிருக்கும், வேடர்களால் வளர்க்கப் பட்ட வள்ளி நாயகியுடன், மகிழ்ந்து மணந்த பெருமான், போர்க் களத்தில் ஒப்பற்ற நடனம் புரிந்த முருகன், ஆறுமுகன், குகன், ஸரவணபவன், குமாரக் கடவுளின், வேலாயுதமே
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேல் விருத்தம் - 5 - வேல் விருத்தம், Vel Virutham, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மீண்டும், வகையில், அடியோடு, ஒழித்து, இனிய, முத்துக்களையும், தன்னைத், போல், முருகன், சந்தனம், குகன், சரவணக், வேலே, குமரன், வேல்