1. சீர்பாத வகுப்பு - திருவகுப்பு
தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன ...... தனதான தானதன |
|
உததியிடை கடவுமர கதவருண குலதுரக வுபலளித கனகரத ...... சதகோடி சூரியர்கள் |
1 |
உதயமென அதிகவித கலபகக மயிலின்மிசை யுகமுடிவின் இருளகல ...... ஒருசோதி வீசுவதும் |
2 |
உடலுமுட லுயிருநிலை பெருதல்பொரு ளெனவுலக மொருவிவரு மநுபவன ...... சிவயோக சாதனையில் |
3 |
ஒழுகுமவர் பிறிதுபர வசமழிய விழிசெருகி யுணர்வுவிழி கொடுநியதி ...... தமதூடு நாடுவதும் |
4 |
உருவெனவு மருவெனவு முளதெனவு மிலதெனவு முழலுவன பரசமய ...... கலையார வாரமற |
5 |
உரையவிழ வுணர்வவிழ வுளமவிழ வுயிரவிழ வுளபடியை யுணருமவ ...... ரநுபூதி யானதுவும் |
6 |
உறவுமுறை மனைவிமக வெனுமலையி லெனதிதய வுருவுடைய மலினபவ ...... சலராசி யேறவிடும் |
7 |
உறுபுணையு மறிமுகமு முயரமரர் மணிமுடியில் உறைவதுவு முலைவிலது ...... மடியேன் மனோரதமும் |
8 |
இதழிவெகு முகககன நதியறுகு தறுகணர இமகிரண தருணவுடு ...... பதிசேர் சடாமவுலி |
9 |
இறைமகிழ வுடைமணியொ டணிசகல மணிகலென இமையமயில் தழுவுமொரு ...... திருமார்பி லாடுவதும் |
10 |
இமையவர்கள் நகரிலிறை குடிபுகுத நிருதர்வயி றெரிபுகுத வுரகர்பதி ...... அபிஷேக மாயிரமும் |
11 |
எழுபிலமு நெறுநெறென முறியவட குவடிடிய இளையதளர் நடைபழகி ...... விளையாடல் கூருவதும் |
12 |
இனியகனி கடலைபய றொடியல்பொரி யமுதுசெயும் இலகுவெகு கடவிகட ...... தடபார மேருவுடன் |
13 |
இகலிமுது திகிரிகிரி நெரியவளை கடல்கதற எழுபுவியை யொருநொடியில் ...... வலமாக வோடுவதும் |
14 |
எறுழிபுலி கரடியரி கரிகடமை வருடையுழை யிரலைமரை யிரவுபகல் ...... இரைதேர்க டாடவியில் |
15 |
எயினரிடு மிதணதனில் இளகுதினை கிளிகடிய இனிதுபயில் சிறுமிவளர் ...... புனமீ துலாவுவதும் |
16 |
முதலவினை முடிவிலிரு பிறையெயிறு கயிறுகொடு முதுவடவை விழிசுழல ...... வருகால தூதர்கெட |
17 |
முடுகுவதும் அருணெறியில் உதவுவதும் நினையுமவை முடியவரு வதுமடியர் ...... பகைகோடி சாடுவதும் |
18 |
மொகுமொகென மதுபமுரல் குரவுவிள வினதுகுறு முறியுமலர் வகுளதள ...... முழுநீல தீவரமும் |
19 |
முருகுகமழ் வதுமகில முதன்மைதரு வதும்விரத முநிவர்கரு தரியதவ ...... முயல்வார் தபோபலமும் |
20 |
முருகசர வணமகளிர் அறுவர்முலை நுகருமறு முககுமர சரணமென ...... அருள்பாடி யாடிமிக |
21 |
மொழிகுழற அழுதுதொழு துருகுமவர் விழியருவி முழுகுவதும் வருகவென ...... அறைகூவி யாளுவதும் |
22 |
முடியவழி வழியடிமை யெனுமுரிமை யடிமைமுழு துலகறிய மழலைமொழி ...... கொடுபாடும் ஆசுகவி |
23 |
முதலமொழி வனநிபுண மதுபமுக ரிதமவுன முகுளபரி மளநிகில ...... கவிமாலை சூடுவதும் |
24 |
மதசிகரி கதறிமுது முதலைகவர் தரநெடிய மடுநடுவில் வெருவியொரு ...... விசையாதி மூலமென |
25 |
வருகருணை வரதனிகல் இரணியனை நுதியுகிரின் வகிருமட லரிவடிவு ...... குறளாகி மாபலியை |
26 |
வலியசிறை யிடவெளியின் முகடுகிழி படமுடிய வளருமுகில் நிருதனிரு ...... பதுவாகு பூதரமும் |
27 |
மகுடமொரு பதுமுறிய அடுபகழி விடுகுரிசில் மருகனிசி சரர்தளமும் ...... வருதார காசுரனும் |
28 |
மடியமலை பிளவுபட மகரசல நிதிகுறுகி மறுகிமுறை யிடமுனியும் ...... வடிவேல னீலகிரி |
29 |
மருவுகுரு பதியுவதி பவதிபக வதிமதுர வசனிபயி ரவிகவுரி ...... யுமையாள்த்ரி சூலதரி |
30 |
வநசைமது பதியமலை விசயைதிரி புரைபுநிதை வநிதையபி நவையநகை ...... யபிராம நாயகிதன் |
31 |
மதலைமலை கிழவனநு பவனபய னுபயசதுர் மறையின்முதல் நடுமுடிவின் ...... மணநாறு சீறடியே |
32 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
1. சீர்பாத வகுப்பு - திருவகுப்பு, Thiruvaguppu, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் -