பாடல் 994 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் - .¡மா
தாளம் - அங்கதாளம் - 8 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகதகிட-2 1/2, தகதிமி-2
தான தத்தனா தானா தனாதன தான தத்தனா தானா தனாதன தான தத்தனா தானா தனாதன ...... தந்ததான |
வேத வித்தகா சாமீ நமோநம வேல்மி குத்தமா சூரா நமோநம வீம சக்ரயூ காளா நமோநம ...... விந்துநாத வீர பத்மசீர் பாதா நமோநம நீல மிக்ககூ தாளா நமோநம மேக மொத்தமா யூரா நமோநம ...... விண்டிடாத போத மொத்தபேர் போதா நமோநம பூத மற்றுமே யானாய் நமோநம பூர ணத்துளே வாழ்வாய் நமோநம ...... துங்கமேவும் பூத ரத்தெலாம் வாழ்வாய் நமோநம ஆறி ரட்டிநீள் தோளா நமோநம பூஷ ணத்துமா மார்பா நமோநம ...... புண்டா£க மீதி ருக்குநா மாதோடு சேயிதழ் மீதி ருக்குமே ரார்மாபு லோமசை வீர மிக்கஏழ் பேர்மாதர் நீடினம் ...... நின்றுநாளும் வேத வித்தகீ வீமா விராகிணி வீறு மிக்கமா வீணா கரேமக மேரு வுற்றுவாழ் சீரே சிவாதரெ ...... யங்கராகீ ஆதி சத்திசா மாதேவி பார்வதி நீலி துத்தியார் நீணாக பூஷணி ஆயி நித்தியே கோடீர மாதவி ...... யென்றுதாழும் ஆர்யை பெற்றசீ ராளா நமோநம சூரை யட்டுநீள் பேரா நமோநம ஆர ணத்தினார் வாழ்வே நமோநம ...... தம்பிரானே. |
வேதங்கள் உணர்ந்த பேரறிவாளனே, ஸ்வாமியே, போற்றி, போற்றி வேலினைச் சிறப்பாக ஏந்தும் மஹா சூரனே, போற்றி, போற்றி அச்சம் தரும் சக்ரவியூகத்தை போரிலே எடுப்பவனே, போற்றி, போற்றி ஆவுடையாகவும் லிங்கமாகவும் சிவசக்தி உருவமாக விளங்குபவனே, வீரனே, தாமரை போன்ற அழகிய திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றி நீல நிறத்தில் மிகுந்த கூதளப்பூமாலைகள் அணிந்தவனே, போற்றி, போற்றி மேக நிறம் கொண்டுள்ள மயில் வாகனனே, போற்றி, போற்றி சொல்வதற்கு அரிய ஞான நிலையை அடைந்தவர்களின் ஞானப் பொருளே, போற்றி, போற்றி பஞ்ச பூதங்களாயும் பிறவாயும் ஆனவனே, போற்றி, போற்றி பரிபூரணப் பொருளாக வாழ்பவனே, போற்றி, போற்றி பரிசுத்தமான மலைகளில் எல்லாம் வாழ்பவனே, போற்றி, போற்றி பன்னிரண்டு நீண்ட புஜங்களை உடையவனே, போற்றி, போற்றி ஆபரணங்களை அணிந்த அழகிய மார்பனே, போற்றி, போற்றி வெள்ளைத் தாமரையின் மீது வீற்றிருக்கும் ஸரஸ்வதியோடு, செந்தாமரை மீது அமர்ந்த அழகு நிறைந்த லக்ஷ்மியும், இந்திராணியும், வீரம் மிகுந்த ஸப்த மாதாக்களும்,* மற்றுமுள்ள எல்லா தெய்வ மகளிரும் எதிரே நின்று நாள்தோறும் வேத ஞானியே, பயங்கரியே, பற்று அற்றவளே, சிறப்புமிக்க அழகிய (விபஞ்சி என்ற) வீணையை கையில் ஏந்தியவளே, மகாமேரு மலையில் தங்கி வாழும் சிறப்பை உடையவளே, சிவனுடைய உடலில் பங்கு கொண்டவளே, உடம்பெல்லாம் பரிமள கந்தங்களைப் பூசியவளே, ஆதிசக்தியே, சாமவேதம் போற்றும் தேவியே, பார்வதியே, நீல நிறத்தவளே, புள்ளிகள் நிறைந்த நீண்ட நாகங்களை ஆபரணமாக அணிந்தவளே, அன்னையே, என்றும் இருப்பவளே, சடையுள்ள துர்கா தேவி, என்றெல்லாம் துதி செய்து வணங்குகின்ற மஹாதேவி பெற்ற சீராளனே, போற்றி, போற்றி சூரனை வதைத்துப் பேரும் புகழும் பெற்றவனே, போற்றி, போற்றி வேதம் ஓதுவோர்களின் செல்வமே, போற்றி, போற்றி அனைவருக்கும் பெருமாளாக விளங்குபவனே.
* ஸப்த மாதாக்கள் - அபிராமி, மஹேஸ்வரி, கெளமாரி, நாராயணி, வாராகி, இந்திராணி, காளி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 994 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போற்றி, நமோநம, அழகிய, தனாதன, தத்தனா, தானா, நீண்ட, மீது, ஸப்த, வாழ்பவனே, நிறைந்த, விளங்குபவனே, வாழ்வாய், மீதி, தகிட, உடையவனே, மிகுந்த