பாடல் 993 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் - .¡வேரி
தாளம் - அங்கதாளம் - 8
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகிடதக-2 1/2
தான தத்தன தானா தனாதன தான தத்தன தானா தனாதன தான தத்தன தானா தனாதன ...... தந்ததான |
ஓது முத்தமிழ் தேராவ்ரு தாவனை வேத னைப்படு காமாவி காரனை ஊன முற்றுழல் ஆபாச ஈனனை ...... அந்தர்யாமி யோக மற்றுழல் ஆசாப சாசனை மோக முற்றிய மோடாதி மோடனை ஊதி யத்தவம் நாடாத கேடனை ...... அன்றிலாதி பாத கக்கொலை யேசூழ்க பாடனை நீதி சற்றுமி லாகீத நாடனை பாவி யர்க்குளெ லாமாது ரோகனை ...... மண்ணின்மீதில் பாடு பட்டலை மாகோப லோபனை வீடு பட்டழி கோமாள வீணனை பாச சிக்கினில் வாழ்வேனை யாளுவ ...... தெந்தநாளோ ஆதி சற்குண சீலா நமோநம ஆட கத்திரி சூலா நமோநம ஆத ரித்தருள் பாலா நமோநம ...... உந்தியாமை ஆன வர்க்கினி யானே நமோநம ஞான முத்தமிழ் தேனே நமோநம ஆர ணற்கரி யானே நமோநம ...... மன்றுளாடும் தோதி தித்திமி தீதா நமோநம வேத சித்திர ரூபா நமோநம சோப மற்றவர் சாமீ நமோநம ...... தன்மராச தூத னைத்துகை பாதா நமோநம நாத சற்குரு நாதா நமோநம ஜோதி யிற்ஜக ஜோதீ மஹாதெவர் ...... தம்பிரானே. |
ஓதத்தக்க முத்தமிழைத் தேர்ந்து அறியாமல் வீணாகக் காலம் கழிப்பவனை, துன்பப்படுகின்ற விகாரமுடைய காமுகனை, பழி கொண்டு திரியும் அசுத்தமான இழிவு உள்ளவனை, எங்கும் வியாபித்திருக்கும் யோக நிலையைக் கடைப்பிடிக்காமல் திரியும் ஆசையாகிய பேய் போன்றவனை, காம மயக்கம் மிகுந்த மூடர்களுக்குள் தலைமையான மூடனை, பயன் தரக் கூடிய தவத்தைத் தேடாத கேடுடையவனை, அன்றில் பறவை முதலான உயிர்களை பாபத்துக்கு ஈடான கொலை செய்யவே கருதுகின்ற வஞ்சகனை, ஒழுக்க நெறி கொஞ்சமும் இல்லாத இசைப் பாட்டுக்களில் களிப்புறுவானை, பாபம் செய்பவர்கள் எல்லோரையும் விட பெரிய துரோகம் செய்பவனை, இந்த உலகில் பாடுபட்டு அலைகின்ற பெரிய கோபமும் உலோபத்தனமும் நிறைந்தவனை, கெடுதல் பட்டு அழிகின்ற, களித்து வீண் பொழுது போக்குபவனை, உலக மாயையில் சிக்குண்டு வாழ்பவனாகிய என்னை ஆட்கொள்ளுவது எந்நாளோ? முதல்வனே, சீரிய குணங்களை உடைய பரிசுத்த மூர்த்தியே, போற்றி, போற்றி, பொன்னாலாகிய, மூன்று தலைகளை உடைய சூலாயுதனே, போற்றி, போற்றி, என்னை அன்புடன் பாதுகாக்கும் காவல் தெய்வமே, போற்றி, போற்றி, கடலில் ஆமை வடிவமாகச் சென்றவராகிய திருமாலுக்கு விருப்பமானவனே, போற்றி, போற்றி, ஞானப் பொருள் நிறைந்த முத்தமிழ் வல்ல தேனே, போற்றி, போற்றி, வேதம் வல்ல பிரம்ம தேவனுக்கு எட்டாத அருமையானவனே, போற்றி, போற்றி, அம்பலத்தில் நடனம் செய்யும் தோதி தித்திமி தீதா என்று தாளங்களுடன் கூத்தாடுபவனே, போற்றி, போற்றி, வேதங்களில் ஓதப்படும் அழகிய வடிவம் உள்ளவனே, போற்றி, போற்றி, துக்க நிலையில் இல்லாதவர் துதிக்கும் கடவுளே, போற்றி, போற்றி, யம தர்மராஜன் அனுப்பி வைத்த காலனை உதைத்த பாதங்களை உடையவனே, போற்றி, போற்றி, நாதனே, சற்குரு நாதனே, போற்றி, போற்றி, ஒளியில் பேரொளியே, மகா தேவரான சிவபெருமானுக்கும் தனிப் பெரும் தலைவனே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 993 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போற்றி, நமோநம, தானா, தத்தன, முத்தமிழ், தனாதன, என்னை, பெரிய, உடைய, நாதனே, திரியும், வல்ல, தித்திமி, தேனே, யானே, தோதி, தகதிமி, தீதா, சற்குரு