பாடல் 992 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் - .¥நாத விநோதினி
தாளம் - அங்கதாளம் - 8
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தான தத்தன தானா தனாதன தான தத்தன தானா தனாதன தான தத்தன தானா தனாதன ...... தந்ததான |
போத நிர்க்குண போதா நமோநம நாத நிஷ்கள நாதா நமோநம பூர ணக்கலை சாரா நமோநம ...... பஞ்சபாண பூபன் மைத்துன பூபா நமோநம நீப புஷ்பக தாளா நமோநம போக சொர்க்கபு பாலா நமோநம ...... சங்கமேறும் மாத மிழ்த்ரய சேயே நமோநம வேத னத்ரய வேளே நமோநம வாழ்ஜ கத்ரய வாழ்வே நமோநம ...... என்றுபாத வாரி ஜத்தில்வி ழாதே மகோததி யேழ்பி றப்பினில் மூழ்கா மனோபவ மாயை யிற்சுழி யூடே விடாதுக ...... லங்கலாமோ கீத நிர்த்தவெ தாளா டவீநட நாத புத்திர பாகீ ரதீகிரு பாச முத்திர ஜீமூத வாகனர் ...... தந்திபாகா கேக யப்பிர தாபா முலாதிப மாலி கைக்கும ரேசா விசாகக்ரு பாலு வித்ரும காரா ஷடானன ...... புண்டா£கா வேத வித்தக வேதா விநோதகி ராத லக்ஷ்மிகி ¡£டா மகாசல வீர விக்ரம பாரா வதானவ ...... கண்டசூரா வீர நிட்டுர வீராதி காரண தீர நிர்ப்பய தீராபி ராமவி நாய கப்ரிய வேலாயு தாசுரர் ...... தம்பிரானே. |
ஞானம் நிறைந்தவனாய், குணங்களுக்கு எட்டாமல் இருக்கும் ஞானமூர்த்தியே, போற்றி, போற்றி, தலைவனே, உருவம் அற்ற மூர்த்தியே, போற்றி, போற்றி, எல்லாக் கலைகளின் சாரமாக உள்ள தெய்வமே, போற்றி, போற்றி, ஐந்து மலர்க்கணைகளை உடைய அரசன் மன்மதனின் மைத்துனனாம்* அரசனே, போற்றி, போற்றி, கடப்ப மலர்களைத் தரித்த திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றி, இன்பங்களுக்கு உரிய சொர்க்க பூமியைக் காத்தவனே, போற்றி, போற்றி, சங்கப்பலகையில் ஏறி அமர்ந்த முத்தமிழ்ச் செம்மலே, போற்றி, போற்றி, ரிக், யசுர், சாமம் என்னும் மூன்று வேதங்களும்** தொழும் தெய்வமே, போற்றி, போற்றி, வாழ்கின்ற பூலோகம், அந்தரம், சுவர்க்கம் என்ற மூவுலகங்களும் போற்றும் செல்வமே, போற்றி, போற்றி, என்றெல்லாம் கூறிப் போற்றி உன் பாதத் தாமரையில் விழாமல், மகா சமுத்திரமாகிய ஏழ் பிறப்பில் நான் மூழ்கி, மனத்தில் உதிக்கும் எண்ணங்களாம் மாயையின் சுழற்சிக்குள்ளே வெளிவர முடியாமல் அகப்பட்டுக் கலங்குதல் நன்றோ? பாடல் ஆடல் கொண்ட வேதாள கணங்களுடன் சுடுகாட்டில் நடனம் செய்யும் சிவபிரானுடையவும் பாகீரதியாம் கங்கையுடையவும் புத்திரனே, கருணைக் கடலே, மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனின் மகளான தேவயானையின் மணாளனே, மயில் வாகனக் கீர்த்திமானே, மூலாதார மூர்த்தியே, மாலைகள் அணிந்த குமரக் கடவுளே, விசாகனே, கிருபாளனே, பவள நிறத்தோனே, ஆறு திருமுகங்களாம் தாமரைகளை உடையவனே, வேதங்களில் வல்லவனே, பிரம்மனுடன் வேடிக்கை விளையாடலைப் புரிந்தவனே, வேடர் குலத்து லக்ஷமியாம் வள்ளியுடன் சிருங்கார லீலைகள் புரிந்தவனே, பெரும் மலைகளில் எல்லாம் குடியிருக்கும் வீரனே, பராக்கிரமசாலியே, மீகுந்த கவனத்தோடு செயல்படுவோனே, பூரணமான சூரத்துவம் உடையவனே, வீரனுக்கு இருக்கவேண்டிய கொடூரம் கொண்ட வீரனே, மூல காரணப் பொருளே, தீரனே, பயமற்ற ¨தரியசாலியே, அழகனே, விநாயகருக்குப் பிரியமானவனே, வேலாயுதனே, தேவர்கள் தம் தலைவனே.
* மன்மதன் திருமாலின் மகன். முருகன் திருமாலின் மருமகன். எனவே முருகன் மன்மதனின் மைத்துனன்.
** நான்கு வேதங்களில் அதர்வண வேதத்தை விட்டதன் காரணம் அதனில் உயிர்களுக்கு ஆக்கமேயன்றி கேடு விளைவிக்கும் மந்திரங்களும் கூறப்படுவதால் மற்ற மூன்றை மட்டும் குறிப்பிட்டார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 992 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - போற்றி, நமோநம, கொண்ட, தத்தன, உடையவனே, தானா, தனாதன, வேதங்களில், புரிந்தவனே, திருமாலின், முருகன், வீரனே, மூர்த்தியே, தாளா, தகதிமி, தலைவனே, தகிட, தெய்வமே, மன்மதனின்