பாடல் 981 - திருவாடனை - திருப்புகழ்

ராகம் - ராகமாலிகை
தாளம் - கண்டசாபு - 2 1/2
தானான தத்ததன தானான தத்ததன தானான தத்ததன ...... தனதான |
ஊனாரு முட்பிணியு மானாக வித்தவுட லூதாரி பட்டொழிய ...... வுயிர்போனால் ஊரார் குவித்துவர ஆவா வெனக்குறுகி ஓயா முழக்கமெழ ...... அழுதோய நானா விதச்சிவிகை மேலே கிடத்தியது நாறா தெடுத்தடவி ...... யெரியூடே நாணாமல் வைத்துவிட நீறாமெ னிப்பிறவி நாடா தெனக்குனருள் ...... புரிவாயே மானாக துத்திமுடி மீதே நிருத்தமிடு மாயோனு மட்டொழுகு ...... மலர்மீதே வாழ்வா யிருக்குமொரு வேதாவு மெட்டிசையும் வானோரு மட்டகுல ...... கிரியாவும் ஆனா வரக்கருடன் வானார் பிழைக்கவரு மாலால முற்றவமு ...... தயில்வோன்முன் ஆசார பத்தியுடன் ஞானாக மத்தையருள் ஆடானை நித்தமுறை ...... பெருமாளே. |
* திருவாடானை மானாமதுரையில் இருந்து சிவகங்கை வழியில் 44 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 981 - திருவாடனை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானான, தத்ததன, வைத்து, உள்ள, மேலே, மானாக, பெருமாளே