பாடல் 972 - இலஞ்சி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தந்தன தான தனந்தன தானத் தந்தன தான தனந்தன தானத் தந்தன தான தனந்தன தானத் ...... தனதான |
கொந்தள வோலை குலுங்கிட வாளிச் சங்குட னாழி கழன்றிட மேகக் கொண்டைகள் மாலை சரிந்திட வாசப் ...... பனிநீர்சேர் கொங்கைகள் மார்பு குழைந்திட வாளிக் கண்கயல் மேனி சிவந்திட கோவைக் கொஞ்சிய வாயி ரசங்கொடு மோகக் ...... கடலூடே சந்திர ஆர மழிந்திட நூலிற் பங்கிடை யாடை துவண்டிட நேசத் தந்திட மாலு ததும்பியு மூழ்குற் ...... றிடுபோதுன் சந்திர மேனி முகங்களு நீலச் சந்த்ரகி மேல்கொ டமர்ந்திடு பாதச் சந்திர வாகு சதங்கையு மோசற் ...... றருள்வாயே சுந்தரர் பாட லுகந்திரு தாளைக் கொண்டுநல் தூது நடந்தவ ராகத் தொந்தமொ டாடி யிருந்தவள் ஞானச் ...... சிவகாமி தொண்டர்க ளாக மமர்ந்தவள் நீலச் சங்கரி மோக சவுந்தரி கோலச் சுந்தரி காளி பயந்தரு ளானைக் ...... கிளையோனே இந்திர வேதர் பயங்கெட சூரைச் சிந்திட வேல்கொ டெறிந்துநல் தோகைக் கின்புற மேவி யிருந்திடு வேதப் ...... பொருளோனே எண்புன மேவி யிருந்தவள் மோகப் பெண்திரு வாளை மணந்திய லார்சொற் கிஞ்சியளாவு மிலஞ்சிவி சாகப் ...... பெருமாளே. |
* இலஞ்சி தென்காசி ரயில் நிலையத்துக்கு 4 மைலில் உள்ள தலம். குற்றால அருவிக்கு மிக அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 972 - இலஞ்சி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - சந்திர, தந்தன, மாலை, உள்ள, தனந்தன, தானத், மயிலின், உடலும், மேல், ஆகிய, வீற்றிருக்கும், பெருமாளே, நல்ல, கொண்டு, சுந்தரி, தூது, நீலச், மேனி, யிருந்தவள், சிவகாமி, மேவி, காளி, சங்கரி, வேதப்