பாடல் 922 - தென்கடம்பந்துறை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந் தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந் தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந் ...... தனதான |
புணரியும னங்கனம் புஞ்சுரும் புங்கருங் கயலினொடு கெண்டையுஞ் சண்டனுங் கஞ்சமும் புதுநிலவ ருந்தியுந் துஞ்சுநஞ் சும்பொருப் ...... பெறிவேலும் பொருவெனஇ கன்றகன் றங்குமிங் குஞ்சுழன் றிடைகடைசி வந்துவஞ் சம்பொதிந் திங்கிதம் புவியிளைஞர் முன்பயின் றம்பொனின் கம்பிதக் ...... குழைமோதிக் குணலையொடு மிந்த்ரியஞ் சஞ்சலங் கண்டிடும் படியமர்பு ரிந்தருஞ் சங்கடஞ் சந்ததங் கொடுமைசெய்து சங்கொடுஞ் சிங்கிதங் குங்கடைக் ...... கணினார்பால் குலவுபல செந்தனந் தந்துதந் தின்புறுந் த்ரிவிதகர ணங்களுங் கந்தநின் செம்பதங் குறுகும்வகை யந்தியுஞ் சந்தியுந் தொந்தமற் ...... றமைவேனோ துணர்விரிக டம்பமென் தொங்கலும் பம்புறும் புழுகுமச லம்பசுஞ் சந்தனங் குங்குமந் தொகுகளப முந்துதைந் தென்றுநன் கொன்றுபத் ...... திருதோளுந் தொலைவில்சண்மு கங்களுந் தந்த்ரமந் த்ரங்களும் பழநிமலை யும்பரங் குன்றமுஞ் செந்திலுந் துதிசெயுமெ யன்பர்தஞ் சிந்தையுஞ் சென்றுசெய்ப் ...... பதிவாழ்வாய் கணபணபு யங்கமுங் கங்கையுந் திங்களுங் குரவுமறு குங்குறுந் தும்பையுங் கொன்றையுங் கமழ்சடில சம்புவுங் கும்பிடும் பண்புடைக் ...... குருநாதா கனகுடகில் நின்றகுன் றந்தருஞ் சங்கரன் குறுமுனிக மண்டலங் கொண்டுமுன் கண்டிடுங் கதிசெய்நதி வந்துறுந் தென்கடம் பந்துறைப் ...... பெருமாளே. |
* நாரதர் சூழ்ச்சியால் விந்திய மலை மேரு மலைக்குப் போட்டியாக உயர்ந்து வழியை அடைத்தது. தேவர்கள் சிவபெருமானை வேண்ட, சிவபெருமான் காவிரியை அழைத்து ஒரு கமண்டலத்தில் அடங்கச் செய்து அகத்தியருடன் அனுப்பினார். அகத்தியர் தென் தேசத்துக்குச் சென்று காவிரியின் நீரைப் பரப்பினார்.
** திருச்சிக்கு மேற்கே உள்ள குழித்தலைக்கு வடமேற்கே 1 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 922 - தென்கடம்பந்துறை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தனந், உனது, செய்து, தனதனன, உள்ள, மலரும், உடைய, தென், காவிரி, சிவபெருமானை, அகத்தியர், மாலையும், கொண்ட, மீனும், பெருமாளே, முன்பு, எப்போதும், மீண்டும், வகையான, என்னும்