பாடல் 900 - வயலூர் - திருப்புகழ்

ராகம் - கேதாரம்
தாளம் - சது.ர ரூபகம் - 6
- எடுப்பு - 1/2 இடம்
தனதன தானான தானந் தனதன தானான தானந் தனதன தானான தானந் ...... தனதான |
அரிமரு கோனே நமோவென் றறுதியி லானே நமோவென் றறுமுக வேளே நமோவென் ...... றுனபாதம் அரகர சேயே நமோவென் றிமையவர் வாழ்வே நமோவென் றருண சொரூபா நமோவென் ...... றுளதாசை பரிபுர பாதா சுரேசன் றருமக ணாதா வராவின் பகைமயில் வேலா யுதாடம் ...... பரநாளும் பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழை நானுன் பதிபசு பாசோப தேசம் ...... பெறவேணும் கரதல சூலாயு தாமுன் சலபதி போலார வாரங் கடினசு ராபான சாமுண் ...... டியுமாடக் கரிபரி மேலேறு வானுஞ் செயசெய சேனா பதீயென் களமிசை தானேறி யேயஞ் ...... சியசூரன் குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங் குடல்கொள வேபூச லாடும் ...... பலதோளா குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழுங் குளிர்வய லூரார மேவும் ...... பெருமாளே. |
* பதி - கடவுள், பசு - ஜீவாத்மா, பாசம் - மும்மலம் ஆகிய ஆணவம், கன்மம், மாயை.
** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 900 - வயலூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - என்றும், போற்றி, நமோவென், தானான, தனதன, தானந், வயலூர், கொண்ட, காவேரி, பெருமாளே