பாடல் 899 - திருமாந்துறை - திருப்புகழ்

ராகம் - ஆசிரி
தாளம் - ஆதி
தாந்தன தனந்த தாந்தன தனந்த தாந்தன தனந்த ...... தனதான |
ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து ஆய்ஞ்சுதளர் சிந்தை ...... தடுமாறி ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து ஆண்டுபல சென்று ...... கிடையோடே ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து ஓய்ந்துணர் வழிந்து ...... உயிர்போமுன் ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து ஊன்றிய பதங்கள் ...... தருவாயே வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த வேந்திழையி னின்ப ...... மணவாளா வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச வேண்டிய பதங்கள் ...... புரிவோனே மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து மாண்புநெல் விளைந்த ...... வளநாடா மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற மாந்துறை யமர்ந்த ...... பெருமாளே. |
* திருமாந்துறை திருச்சியை அடுத்த திருவானைக்காவுக்கு வடகிழக்கில் 10 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 899 - திருமாந்துறை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - வந்து, தனந்த, தாந்தன, மனம், இனிய, அடைந்து, மிகுந்த, பெருமாளே, பதங்கள், நின்ற, இருந்த