பாடல் 891 - பெரும்புலியூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனந்தனன தானத் தனந்தனன தானத் தனந்தனன தானத் ...... தனதான |
சதங்கைமணி வீரச் சிலம்பினிசை பாடச் சரங்களொளி வீசப் ...... புயமீதே தனங்கள்குவ டாடப் படர்ந்தபொறி மால்பொற் சரங்கண்மறி காதிற் ...... குழையாட இதங்கொள்மயி லேரொத் துகந்தநகை பேசுற் றிரம்பையழ கார்மைக் ...... குழலாரோ டிழைந்தமளி யோடுற் றழுந்துமெனை நீசற் றிரங்கியிரு தாளைத் ...... தருவாயே சிதம்பரகு மாரக் கடம்புதொடை யாடச் சிறந்தமயில் மேலுற் ...... றிடுவோனே சிவந்தகழு காடப் பிணங்கள்மலை சாயச் சினந்தசுரர் வேரைக் ...... களைவோனே பெதும்பையெழு கோலச் செயங்கொள்சிவ காமிப் ப்ரசண்டஅபி ராமிக் ...... கொருபாலா பெரும்புனம தேகிக் குறம்பெணொடு கூடிப் பெரும்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே. |
* பெரும்புலியூர் திருவையாற்றுக்கு மேற்கே 3 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 891 - பெரும்புலியூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனந்தனன, தானத், கொண்டு, உடையவர்களும், மயிலின், மேல், வீரச், பெருமாளே, அழகிய