பாடல் 881 - திருக்குரங்காடுதுறை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனந்த தனத்தான தனந்த தனத்தான தனந்த தனத்தான ...... தனதான |
குடங்கள் நிரைத்தேறு தடங்கள் குறித்தார வடங்கள் அசைத்தார ...... செயநீலங் குதம்பை யிடத்தேறு வடிந்த குழைக்காது குளிர்ந்த முகப்பார்வை ...... வலையாலே உடம்பு மறக்கூனி நடந்து மிகச்சாறி யுலந்து மிகக்கோலு ...... மகலாதே உறங்கி விழிப்பாய பிறந்த பிறப்பேனு முரங்கொள பொற்பாத ...... மருள்வாயே விடங்கள் கதுப்பேறு படங்க ணடித்தாட விதங்கொள் முதற்பாய ...... லுறைமாயன் விலங்கை முறித்தோடி யிடங்கள் வளைத்தேறு விளங்கு முகிற்கான ...... மருகோனே தடங்கொள் வரைச்சாரல் நளுங்கு மயிற்பேடை தழங்கு மியற்பாடி ...... யளிசூழத் தயங்கு வயற்சாரல் குரங்கு குதித்தாடு தலங்க ளிசைப்பான ...... பெருமாளே. |
* வட குரங்காடுதுறை கும்பகோணத்தை அடுத்த ஐயம்பேட்டைக்கு 4 மைலில் உள்ளது.தென் குரங்காடுதுறை இப்போது ஆடுதுறை எனப்படும் ஊர்.திருவிடைமருதூருக்கு கிழக்கே 2 மைலில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 881 - திருக்குரங்காடுதுறை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனந்த, கொண்ட, தனத்தான, விளங்கும், மைலில், உள்ளது, அழகிய, குரங்காடுதுறை, வைத்து, குடங்கள், வலையாலே, பெருமாளே, மிகவும், இப்போது