பாடல் 85 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் -
தந்த தந்தன தந்தன தந்தன தந்த தந்தன தந்தன தந்தன தந்த தந்தன தந்தன தந்தன ...... தந்ததான |
மஞ்செ னுங்குழ லும்பிறை யம்புரு வங்க ளென்சிலை யுங்கணை யங்கயல் வண்டு புண்டரி கங்களை யும்பழி ......சிந்துபார்வை மண்ட லஞ்சுழ லுஞ்செவி யங்குழை தங்க வெண்டர ளம்பதி யும்பலு மண்ட லந்திக ழுங்கமு கஞ்சிறு ...... கண்டமாதர் கஞ்சு கங்குர லுங்கழை யம்புய கொங்கை செங்கிரி யும்பவ ளம்பொறி கந்த சந்தன மும்பொலி யுந்துகில் ...... வஞ்சிசேருங் கஞ்ச மண்டுளி னின்றிர சம்புகு கண்ப டர்ந்திட ரம்பையெ னுந்தொடை கண்கை யஞ்சர ணஞ்செயல் வஞ்சரை ...... நம்புவேனோ சஞ்ச சஞ்சக ணஞ்சக டுண்டுடு டுண்டு டிண்டிமி டண்டம டுண்டுடு தந்த னந்தன திந்திமி சங்குகள் ...... பொங்குதாரை சம்பு வின்கும ரன்புல வன்பொரு கந்த னென்றிடு துந்துமி யுந்துவ சங்க ளங்கொளி ருங்குடை யுந்திசை ...... விஞ்சவேகண் டஞ்ச வஞ்சசு ரன்திர ளுங்குவ டன்ற டங்கலும் வெந்துபொ ரிந்திட அண்ட ரிந்திர னுஞ்சர ணம்புக ...... வென்றவேளே அம்பு யந்தண ரம்பைகு றிஞ்சியின் மங்கை யங்குடில் மங்கையொ டன்புடன் அண்ட ருந்தொழு செந்திலி லின்புறு ...... தம்பிரானே. |
மேகம் என்னும்படியான கரிய கூந்தல், பிறை போன்ற அழகிய புருவங்கள் எனப்படும் வில், அம்பு, அழகிய கயல் மீன், வண்டு, தாமரை இவைகளைப் பழித்து, தமது சிறப்பை வெளிக்காட்ட வல்ல கண்கள், நாட்டில் உள்ளவர்கள் கலங்கும்படியான காதில் உள்ள அழகிய குண்டலங்கள், பொருந்தியுள்ள வெண்மையான முத்துக்கள் பதித்தாற் போல் பற்கள், நெருங்கிய கலப்பையால் உழுது வளர்ந்த கமுகு போன்ற சிறிய அழகிய கழுத்துடைய பெண்கள், பேரின்பம் தரும் கிளி என்னும்படியான குரலாகிய புல்லாங்குழல், தாமரை போன்ற மார்பகங்கள் ஆகிய செவ்விய மலையில் பவள மாலை, தேமல், நறு மணம் கமழும் சந்தனம், விளங்குகின்ற ஆடை, வஞ்சிக் கொடி போன்ற இடை இவை துலங்க, பொருந்திய தாமரையின் நிறைந்த, உட்புறத்திலிருந்து வெளிப்பட்ட (காம) இன்பம் புகுந்துள்ள இடம், வாழை போன்ற தொடை, கண்கள், கைகள், அழகிய பாதங்கள், செயல்களும் (கூடிய) வஞ்சகம் நிறைந்த விலைமாதர்களை நான் நம்புவேனோ? சஞ்ச சஞ்சக ணஞ்சக டுண்டுடு டுண்டு டிண்டிமி டண்டம டுண்டுடு தந்த னந்தன திந்திமி இவ்வாறு ஒலித்த சங்குகளும், தாரைகளும், தப்பட்டைகளும், சிவபெருமானின் மகன், தமிழில் புலமை படைத்தவன், சண்டை செய்ய வல்ல கந்தன் என்றெல்லாம் ஒலிக்கும் பேரிகைகளும், கொடிகளும், அவ்விடத்தில் பிரகாசிக்கும் குடைகளும், திசைகளில் எல்லாம் மிகுந்து பொலியவே, அக்காட்சியைக் கண்டு, பயப்படும்படி வஞ்சகம் உள்ள சூரனுடைய சேனைகளும், கிரவுஞ்ச மலையும் ஆக அன்று எல்லாமும் வெந்து கரியாக, தேவர்களும், இந்திரனும் அடைக்கலம் என்று உன் திருவடியில் சரணடைய வெற்றி கொண்ட முருகு வேளே, தாமரையும், குளிர்ந்த வாழையும் நிறைந்துள்ள மலை நிலத்துப் பெண்ணாகிய வள்ளி, அழகிய விண்ணுலக மங்கை (தேவயானை ஆகிய) இவர்கள் இருவரோடு அன்புடன் தேவர்களும் தொழுகின்ற திருச்செந்தூரில் இன்புறுகின்ற தம்பிரானே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 85 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, அழகிய, தந்த, டுண்டுடு, தாமரை, மங்கை, என்னும்படியான, தம்பிரானே, கண்கள், வஞ்சகம், தேவர்களும், நிறைந்த, ஆகிய, அம்பு, உள்ள, வல்ல, திந்திமி, நம்புவேனோ, சஞ்ச, கந்த, மண்ட, வண்டு, சஞ்சக, ணஞ்சக, னந்தன, டண்டம, டிண்டிமி, டுண்டு, அண்ட