பாடல் 830 - நாகப்பட்டினம் - திருப்புகழ்

ராகம் - யமுனாகல்யாணி
தாளம் - ஆதி
தனனா தனனா தனனா தனனா தனனா தனனா ...... தனதான |
விழுதா தெனவே கருதா துடலை வினைசேர் வதுவே ...... புரிதாக விருதா வினிலே யுலகா யதமே லிடவே மடவார் ...... மயலாலே அழுதா கெடவே அவமா கிடநா ளடைவே கழியா ...... துனையோதி அலர்தா ளடியே னுறவாய் மருவோ ரழியா வரமே ...... தருவாயே தொழுதார் வினைவே ரடியோ டறவே துகள்தீர் பரமே ...... தருதேவா சுரர்பூபதியே கருணா லயனே சுகிர்தா வடியார் ...... பெருவாழ்வே எழுதா மறைமா முடிவே வடிவே லிறைவா எனையா ...... ளுடையோனே இறைவா எதுதா வதுதா தனையே இணைநா கையில்வாழ் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 830 - நாகப்பட்டினம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனா, இறைவனே, மேலும், பெருமாளே, பெருவாழ்வே