பாடல் 829 - நாகப்பட்டினம் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தான தந்ததன தந்ததன தந்ததன தான தந்ததன தந்ததன தந்ததன தான தந்ததன தந்ததன தந்ததன ...... தந்ததான |
மார்பு ரம்பினளி னங்கிரியெ னுந்தனமொ டார மும்படித ரம்பொறியு டன்பணிகள் மாலை யொண்பவள மும்பரிம ளங்கலவை ...... தொங்கலாட வாள்ச ரங்கணிய லுங்குழைத ளம்பளக பார தொங்கலணி பெண்கள்வத னங்கள்மதி வாகை யென்பஇத ழுஞ்சலச மென்பகள ...... சங்குமோக சார மஞ்சள்புய முங்கிளிமு கங்களுகிர் பாளி தம்புனைது வண்டிடையொ டின்பரச தாழி யென்பஅல்கு லுந்துளிர ரம்பைதொடை ...... ரம்பைமாதர் தாள்ச தங்கைகொலு சுங்குலசி லம்புமணி யாடல் கொண்டமட மங்கையரு டன்கலவி தாக முண்டுழல்கி னுங்கழலு றுங்கழல்ம ...... றந்திடேனே வீர வெண்டையமு ழங்கவரி சங்குமுர சோடு பொன்பறைத தும்பவிதி யுஞ்சுரரும் வேத விஞ்சையரு டன்குமுற வெந்துகவ ...... டர்ந்தசூரன் வீற டங்கமுகி லுங்கமற நஞ்சுடைய ஆயி ரம்பகடு கொண்டவுர கன்குவடு மேகொ ளுந்தபல்சி ரந்தனையெ றிந்துநட ...... னங்கொள்வேலா நார சிங்கவடி வங்கொடுப்ர சண்டிரணி யோன டுங்கநட னஞ்செய்துஇ லங்கைவலி ராவ ணன்குலம டங்கசிலை கொண்டகரர் ...... தந்தமூல ஞான மங்கையமு தஞ்சொருபி யென்றனொரு தாய ணங்குகுற மங்கையைம ணந்தபுய நாகை யம்பதிய மர்ந்துவளர் நம்பர்புகழ் ...... தம்பிரானே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 829 - நாகப்பட்டினம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்ததன, என்னும், உடைய, அழகிய, விளங்க, மார்பு, கொண்டு, ஒலிக்க, கொண்ட, பெண், மாலை, உள்ள, தாமரை, எழுப்பும், தம்பிரானே, எனவும்