பாடல் 828 - நாகப்பட்டினம் - திருப்புகழ்

ராகம் - §.¡ன்புரி
தாளம் - ஆதி - தி.ரநடை - 12
தான தத்த தத்த தந்த தான தத்த தத்த தந்த தான தத்த தத்த தந்த ...... தனதான |
ஓல மிட்டி ரைத்தெ ழுந்த வேலை வட்ட மிட்ட இந்த ஊர்மு கிற்ற ருக்க ளொன்று ...... மவராரென் றூம ரைப்ர சித்த ரென்று மூட ரைச்ச மர்த்த ரென்றும் ஊன ரைப்ர புக்க ளென்று ...... மறியாமற் கோல முத்த மிழ்ப்ர பந்த மால ருக்கு ரைத்த நந்த கோடி யிச்சை செப்பி வம்பி ...... லுழல்நாயேன் கோப மற்று மற்று மந்த மோக மற்று னைப்ப ணிந்து கூடு தற்கு முத்தி யென்று ...... தருவாயே வாலை துர்க்கை சக்தி யம்பி லோக கத்தர் பித்தர் பங்கில் மாது பெற்றெ டுத்து கந்த ...... சிறியோனே வாரி பொட்டெ ழக்ர வுஞ்சம் வீழ நெட்ட யிற்று ரந்த வாகை மற்பு யப்ர சண்ட ...... மயில்வீரா ஞால வட்ட முற்ற வுண்டு நாக மெத்தை யிற்று யின்ற நார ணற்க ருட்சு ரந்த ...... மருகோனே நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்ம னைக்க ளைந்த நாக பட்டி னத்த மர்ந்த ...... பெருமாளே. |
ஓலம் இடுவதுபோல அபயக்குரலுடன் பேரொலி செய்யும் அலைகடல் சூழ்ந்திருக்கும் இந்த ஊரில் மேகத்தைப் போல் கைம்மாறு கருதாமல் கொடுக்கும் பிரபுக்கள், கற்பக விருட்சம் போல் கேட்டதெல்லாம் தரும் பிரபுக்கள் யார் உள்ளார்கள் என்று தேடிப்போய், பேசவும் வாய் வராதவர்களை மகா கீர்த்தி வாய்ந்த பிரபுக்கள் என்றும், முட்டாள்களைச் சமர்த்தர்கள் என்றும் ஊனம் உள்ளவரைப் பிரபுக்கள் என்றும், என் அறிவின்மையால் அழகிய முத்தமிழ் நூல்களை மண்ணாசை பிடித்த மூடர்களுக்குச் சொல்லி, எண்ணிலாத கோடிக்கணக்கான என் விருப்பங்களைத் தெரிவித்து வீணே திரிகின்ற அடிநாயேன், கோபம் என்பதை ஒழித்து, மேலும், அந்த ஆசை என்பதனை நீத்து, உன்னைப் பணிந்து உன் திருவடியைக் கூடுதற்கு முக்திநிலை என்றைக்குத் தந்தருள்வாய்? வாலையும் (என்றும் இளையவள்), துர்க்கையும், சக்தியும், அம்பிகையும், உலகத்துக்கே தலைவர் ஆகிய பித்தராம் சிவபிரானது இடப்பாகத்தில் அமர்ந்தவளுமான தேவி பெற்றெடுத்து மகிழ்ந்த இளையோனே, கடல் வற்றிப் போக, கிரெளஞ்சமலை தூளாகி விழ, நீண்ட வேலைச் செலுத்திய, வெற்றி வாகை சூடிய, மற்போருக்குத் திண்ணிய புயத்தை உடைய பராக்ரமனே, மயில் வீரனே, பூமி மண்டலம் முழுமையும் உண்டு தன் வயிற்றிலே அடக்கியவரும், ஆதிசேஷன் என்னும் பாம்புப் படுக்கையிலே துயில் கொள்பவரும் ஆகிய நாராயணருக்கு அருள் பாலித்த மருமகனே, நான்கு திசைகளிலும் ஜயித்த சூரபத்மனை அகற்றியவனே, நாகப்பட்டினம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 828 - நாகப்பட்டினம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்த, பிரபுக்கள், என்றும், மற்று, தந்த, போல், என்னும், ஆகிய, பெருமாளே, வாகை, வட்ட, ரைப்ர, யிற்று, ரந்த, வெற்றி