பாடல் 820 - திருவாருர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதன தனன தனதன தனன தானான தந்த ...... தனதான |
மகரம துகெட இருகுமி ழடைசி வாரார்ச ரங்க ...... ளெனநீளும் மதர்விழி வலைகொ டுலகினில் மனிதர் வாணாள டங்க ...... வருவார்தம் பகர்தரு மொழியில் ம்ருகமத களப பாடீர கும்ப ...... மிசைவாவிப் படிமன துனது பரிபுர சரண பாதார விந்த ...... நினையாதோ நகமுக சமுக நிருதரு மடிய நானாவி லங்கல் ...... பொடியாக நதிபதி கதற வொருகணை தெரியு நாராய ணன்றன் ...... மருகோனே அகனக கனக சிவதல முழுது மாராம பந்தி ...... யவைதோறும் அரியளி விததி முறைமுறை கருது மாரூர மர்ந்த ...... பெருமாளே. |
* திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின் தேவாரமும் போற்றும் முதுநகர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 820 - திருவாருர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அணிந்த, மிக்க, பெருமாளே, பொடியாக, தனதன