பாடல் 811 - கன்னபுரம் - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தன்னதனத் தன்னதனத் தன்னதனத் தன்னதனத் தனாதாத்த ...... தந்ததான |
அன்னமிசைச் செந்நளிநச் சென்மிகணக் கந்நியமத் தன்னமயப் புலால்யாக்கை ...... துஞ்சிடாதென் றந்நினைவுற் றன்னினைவுற் றன்னியரிற் றன்னெறிபுக் கன்னியசற் றுலாமூச்ச ...... டங்கயோகம் என்னுமருட் கின்னமுடைப் பன்னவைகற் றின்னவைவிட் டின்னணமெய்த் தடாமார்க்க ...... மின்புறாதென் றின்னதெனக் கென்னுமதப் புன்மைகெடுத் தின்னல்விடுத் தின்னதெனப் படாவாழ்க்கை ...... தந்திடாதோ கன்னல்மொழிப் பின்னளகத் தன்னநடைப் பன்னவுடைக் கண்ணவிரச் சுறாவீட்டு ...... கெண்டையாளைக் கன்னமிடப் பின்னிரவிற் றுன்னுபுரைக் கன்முழையிற் கன்னிலையிற் புகாவேர்த்து ...... நின்றவாழ்வே பொன்னசலப் பின்னசலச் சென்னியினற் கன்னபுரப் பொன்னிநதிக் கராநீர்ப்பு ...... யங்கனாதா பொன்மலையிற் பொன்னினகர்ப் புண்ணியர்பொற் பொன்மவுலிப் பொன்னுலகத் திராசாக்கள் ...... தம்பிரானே. |
* கன்னபுரம் தற்போது கண்ணபுரம் என்று வழங்கப்படுகிறது. நன்னிலம் ரயில் நிலையததுக்கு அருகில் உள்ளது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 811 - கன்னபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உள்ள, தன்னதனத், வாழும், அழகிய, கொண்டு, தம்பிரானே, பொன்