பாடல் 807 - இஞ்சிகுடி - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தந்ததனத் தான தான தனதன தந்ததனத் தான தான தனதன தந்ததனத் தான தான தனதன ...... தனதான |
குங்குமகற் பூர நாவி யிமசல சந்தனகத் தூரி லேப பரிமள கொங்கைதனைக் கோலி நீடு முகபட ...... நகரேகை கொண்டைதனைக் கோதி வாரி வகைவகை துங்கமுடித் தால கால மெனவடல் கொண்டவிடப் பார்வை காதி னெதிர்பொரு ...... மமுதேயாம் அங்குளநிட் டூர மாய விழிகொடு வஞ்சமனத் தாசை கூறி யெவரையு மன்புடைமெய்க் கோல ராக விரகினி ...... லுறவாடி அன்றளவுக் கான காசு பொருள்கவர் மங்கையர்பொய்க் காதல் மோக வலைவிழ லன்றியுனைப் பாடி வீடு புகுவது ...... மொருநாளே சங்கதசக் ¡£வ னோடு சொலவள மிண்டுசெயப் போன வாயு சுதனொடு சம்பவசுக் ¡£வ னாதி யெழுபது ...... வெளமாகச் சண்டகவிச் சேனை யால்மு னலைகடல் குன்றிலடைத் தேறி மோச நிசிசரர் தங்கிளைகெட் டோட ஏவு சரபதி ...... மருகோனே எங்குநினைப் போர்கள் நேச சரவண சிந்துரகர்ப் பூர ஆறு முககுக எந்தனுடைச் சாமி நாத வயலியி ...... லுறைவேலா இன்புறுபொற் கூட மாட நவமணி மண்டபவித் தார வீதி புடைவளர் இஞ்சிகுடிப் பார்வ தீச ரருளிய ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 807 - இஞ்சிகுடி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்ததனத், கொண்டு, தனதன, வாய்ந்த, உள்ள, அன்பு, இஞ்சிகுடி, மொழிகளைப், கொண்ட, அழகிய, வாரி, நகரேகை, பாடி, பெருமாளே, பச்சைக், வலிமை