பாடல் 803 - திலதைப்பதி - திருப்புகழ்

ராகம் - ....;
தாளம் -
தனனத் தனன தந்த தனனத் தனன தந்த தனனத் தனன தந்த ...... தனதான |
பனகப் படமி சைந்த முழையிற் றரள நின்று படர்பொற் பணிபு னைந்த ...... முலைமீதிற் பரிவற் றெரியு நெஞ்சில் முகிலிற் கரிய கொண்டை படுபுட் பவன முன்றி ...... லியலாரும் அனமொத் திடுசி றந்த நடையிற் கிளியி னின்சொல் அழகிற் றனித ளர்ந்து ...... மதிமோக மளவிப் புளக கொங்கை குழையத் தழுவி யின்ப அலையிற் றிரிவ னென்று ...... மறிவேனோ தனனத் தனன தந்த தனனத் தனன தந்த தனனத் தனன தந்த ...... தனதானா தகிடத் தகிட தந்த திமிதத் திமித வென்று தனிமத் தளமு ழங்க ...... வருவோனே செநெனற் கழனி பொங்கி திமிலக் கமல மண்டி செறிநற் கழைதி ரண்டு ...... வளமேவித் திருநற் சிகரி துங்க வரையைப் பெருவு கின்ற திலதைப் பதிய மர்ந்த ...... பெருமாளே. |
பாம்பின் படம் போன்ற படம் உள்ள குகை போன்ற பெண்குறியிலும், முத்து மணி நின்று அசைந்து உலவும் அழகிய ஆபரணங்களைப் பூண்டுள்ள மார்பகத்தின் மேலும், உண்மை அன்பு இல்லாமல் (பொருள் வேண்டியே) எரிச்சல் படும் (வேசியர்) உள்ளத்திலும், மேகம் போன்ற கரு நிறம் கொண்ட கூந்தலிலும், (எட்டுப் பறவைகள் செய்யும்) புட்குரல்களுக்கு இருப்பிடமான கழுத்திலும், தகுதி நிறைந்துள்ள அன்ன நடைக்கு ஒப்பான சிறந்த நடையிலும், கிளியின் இனிய மொழிக்கு ஒப்பான சொல்லிலும், நான் தனித்து நின்று சிந்தித்துத் தளர்ந்தும், காம இச்சையில் மனம் கொண்டு புளகம் கொண்ட மார்பகங்களை குழையும்படியாகத் தழுவி சிற்றின்பக் கடலில் அலைத்துச் செல்கின்றவனாகிய நான் என்றேனும், எப்போதாவது அறிந்து உய்வேனோ? தனனத் தனன தந்த தனனத் தனன தந்த தனனத் தனன தந்த தனதானா தகிடத் தகிட தந்த திமிதத் திமித என்று தனியாக மத்தளம் ஒலிக்க வருபவனே, செம்மையான நெற்பயிர் விளையும் நல்ல வயல்கள் செழிப்புற்று ஓங்கி, பெரிய மீன்களும் தாமரையும் நிறைந்து, நெருங்கிய நல்ல கரும்புகளும் திரட்சியாக வளர்ந்து வளப்பம் உற்று, அழகிய சிகரங்களை உடைய, உயர்ந்த மலைக்கு நிகராக விளங்கும் திலதைப் பதி** என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* புட் குரல்கள் = காமக் கன்னியர் கண்டத்தில் உண்டாகும் எண் வகை ஒலிகள்.மயில், புறா, அன்னம், காடை, நாரை, குயில், கோழி, வண்டு என்பன.
** திலதைப்பதிக்கு தற்போதைய பெயர் கோயிற்பத்து. தஞ்சை மாவட்டத்தில் பேரளம் என்ற ஊரின் தென்மேற்கே 3 மைலில் இருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 803 - திலதைப்பதி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, தனனத், நின்று, அழகிய, கொண்ட, படம், நான், நல்ல, பெருமாளே, ஒப்பான, திமித, தனதானா, தழுவி, தகிடத், தகிட, திமிதத், திலதைப்