பாடல் 802 - திலதைப்பதி - திருப்புகழ்

ராகம் - ஜனரஞ்சனி
தாளம் - திஸ்ர ஏகம் - 3
தாளம் - திஸ்ர ஏகம் - 3
தனனத் தனனா ...... தனதான |
இறையத் தனையோ ...... அதுதானும் இலையிட் டுணலேய் ...... தருகாலம் அறையிற் பெரிதா ...... மலமாயை அலையப் படுமா ...... றினியாமோ மறையத் தனைமா ...... சிறைசாலை வழியுய்த் துயர்வா ...... னுறுதேவர் சிறையைத் தவிரா ...... விடும்வேலா திலதைப் பதிவாழ் ...... பெருமாளே. |
மற்ற ஒருவருக்கு உணவு இட்டபின் நாம் உண்ணுதல் என்ற அறநெறி என்னிடத்தில் பொருந்தி இருந்த காலம் ஓர் அணு எவ்வளவு உள்ளதோ அந்த அளவு கூட என்னிடம் இல்லை. (அந்த நெறி எவ்வளவு இருந்தது என) சொல்வதானால் நான் அந்நெறியை விட்ட காலம்தான் மிகப் பெரியது. மும்மலங்களிலும் மாயையிலும் அலைச்சல் உறுகின்ற இந்தத் தீய நெறி இனிமேல் எனக்குக் கூடாது. வேதம் கற்ற தலைவனாகிய பிரமனை பெரிய சிறைச்சாலைக்குப் போகும்படியாகச் செய்து, உயர்ந்த வானிலுள்ள தேவர்களின் சிறையை நீக்கிவிட்ட வேலனே, திலதைப்பதி* என்னும் திருத்தலத்தில் வாழ்கின்ற பெருமாளே.
* திலதைப்பதிக்கு தற்போதைய பெயர் கோயிற்பத்து.தஞ்சை மாவட்டத்தில் பேரளம் என்ற ஊரின் தென்மேற்கே 3 மைலில் இருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 802 - திலதைப்பதி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - நெறி, அந்த, எவ்வளவு, பெருமாளே