பாடல் 80 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தான தானனந் தானனந் தானதன தான தானனந் தானனந் தானதன தான தானனந் தானனந் தானதன ...... தந்ததானா |
பாத நூபுரம் பாடகஞ் சீர்கொள்நடை யோதி மோகுலம் போலசம் போகமொடு பாடி பாளிதங் காருகம் பாவையிடை ...... வஞ்சிபோலப் பாகு பால்குடம் போலிரண் டானகுவ டாட நீள்வடஞ் சேரலங் காரகுழல் பாவ மேகபொன் சாபமிந் தேபொருவ ...... ரந்தமீதே மாதர் கோகிலம் போல்கரும் பானமொழி தோகை வாகர்கண் டாரைகொண் டாடிதகை வாரும் வீடெயென் றோதிதம் பாயல்மிசை ...... யன்புளார்போல் வாச பாசகஞ் சூதுபந் தாடஇழி வேர்வை பாயசிந் தாகுகொஞ் சாரவிழி வாகு தோள்கரஞ் சேர்வைதந் தாடுமவர் ...... சந்தமாமோ தீத தோதகந் தீததிந் தோதிதிமி டூடு டூடுடுண் டூடுடுண் டூடுடுடு டீகு டீகுகம் போலவொண் பேரிமுர ...... சங்கள்வீறச் சேடன் மேருவுஞ் சூரனுந் தாருகனும் வீழ ஏழ்தடந் தூளிகொண் டாடமரர் சேசெ சேசெயென் றாடநின் றாடிவிடு ...... மங்கிவேலா தாதை காதிலங் கோதுசிங் காரமுக மாறும் வாகுவுங் கூரசந் தானசுக தாரி மார்பலங் காரியென் பாவைவளி ...... யெங்கள்மாதைத் தாரு பாளிதஞ் சோரசிந் தாமணிக ளாட வேபுணர்ந் தாடிவங் காரமொடு தாழை வானுயர்ந் தாடுசெந் தூரிலுறை ...... தம்பிரானே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 80 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானனந், டூடுடுண், அழகிய, இன்பம், தானதன, ஆடவும், மார்பகங்கள், எங்கள், கொண்டவளும், தூள், மீது, பட்டாடை, சேர்க்கை, தோதிதிமி, தீததிந், வேர்வை, டூடு, டூடுடுடு, தம்பிரானே, டீகு, கொண்டு