பாடல் 79 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனத்தந்தத் தனத்தந்தத் தனத்தந்தத் தனத்தந்தத் தனத்தந்தத் தனத்தந்தத் ...... தனதான |
பருத்தந்தத் தினைத்தந்திட் டிருக்குங்கச் சடர்த்துந்திப் பருக்கும்பொற் ப்ரபைக்குன்றத் ...... தனமானார் பரிக்குந்துற் சரக்கொன்றத் திளைத்தங்குற் பலப்பண்பைப் பரக்குஞ்சக் கரத்தின்சத் ...... தியைநேரும் துரைச்செங்கட் கடைக்கொன்றிப் பெருத்தன்புற் றிளைத்தங்குத் துணிக்கும்புத் தியைச்சங்கித் ...... தறியேனைத் துணைச்செம்பொற் பதத்தின்புற் றெனக்கென்றப் பொருட்டங்கத் தொடுக்குஞ்சொற் றமிழ்த்தந்திப் ...... படியாள்வாய் தருத்தங்கப் பொலத்தண்டத் தினைக்கொண்டச் சுரர்க்கஞ்சத் தடத்துன்பத் தினைத்தந்திட் ...... டெதிர்சூரன் சமர்க்கெஞ்சிப் படித்துஞ்சக் கதிர்த்துங்கத் தயிற்கொண்டத் தலத்தும்பர்ப் பதிக்கன்புற் ...... றருள்வோனே திருக்கஞ்சத் தனைக்கண்டித் துறக்கங்குட் டிவிட்டுஞ்சற் சிவக்கன்றப் பொருட்கொஞ்சிப் ...... பகர்வோனே செயத்துங்கக் கொடைத்துங்கத் திருத்தங்கித் தரிக்கும்பொற் றிருச்செந்திற் பதிக்கந்தப் ...... பெருமாளே. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 79 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனத்தந்தத், கொண்ட, உள்ள, தூய்மை, போரில், அந்த, தந்து, அழகிய, கொண்டு, பெருமாளே, தினைத்தந்திட், அங்கு, போலவும், வேல், பொருள்