பாடல் 794 - திருவிடைக்கழி - திருப்புகழ்

ராகம் -
ஸெளராஷ்டிரம்
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகிட-1 1/2, தகதிமி-2
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகிட-1 1/2, தகதிமி-2
தனன தத்தனத் தனன தத்தனத் தனன தத்தனத் ...... தனதான |
பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப் பயனு மெப்படிப் ...... பலவாழ்வும் பழைய முத்தியிற் பதமு நட்புறப் பரவு கற்பகத் ...... தருவாழ்வும் புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப் பொலியும் அற்புதப் ......பெருவாழ்வும் புலன கற்றிடப் பலவி தத்தினைப் புகழ்ப லத்தினைத் ...... தரவேணும் தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச் சரவ ணத்தினிற் ...... பயில்வோனே தனிவ னத்தினிற் புனம றத்தியைத் தழுவு பொற்புயத் ...... திருமார்பா சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத் திறல யிற்சுடர்க் ...... குமரேசா செழும லர்ப்பொழிற் குரவ முற்றபொற் றிருவி டைக்கழிப் ...... பெருமாளே. |
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது.இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 794 - திருவிடைக்கழி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தனத், கொண்ட, உள்ள, வாழ்வையும், பெருமாளே